தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குல தெய்வ வழிபாட்டுக்காக தேனி மாவட்டத்துக்கு சென்றார் நடிகர் தனுஷ்.
தனது பாட்டனார் பிறந்த ஊரான ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் இருக்கும் கஸ்தூரி மங்கம்மாள் கோயிலுக்கு வழிபட சென்றிருந்தார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர்களுடன் வந்த தனுஷின் பயன்பாட்டுக்காக ஏ.சி வசதியுடன் கேரவன் வேன் ஒன்றும் சென்றிருந்தது.
அப்போது கேரவன் பயன்பாட்டிற்காக ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து அரசின் அனுமதியின்றி மின்சாரம் கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் தனுஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இதகுறித்து ஆண்டிபட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறியதாவது…
“காலை 8 மணிமுதல் மாலை 3 வரை மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். கிட்டதட்ட 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.” என்றார்.
Illeagal electricity taken for Dhanushs Caravan