விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்னை வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்னை வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan newsகமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ் பதிப்பின் டிரெயிலரை நடிகை ஸ்ருதிஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் அமீர்கானும் வெளியிட்டனர்.

ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு படம் குறித்து பேசுவதற்காக தனது எல்டாம்ஸ் சாலை அலுவலகத்தில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் தாமதமானதற்கு ராஜ்கமல் நிறுவனம் காரணமல்ல.

முதல் பாகத்தை உருவாக்கியபோது எந்த மாதிரியெல்லாம் பிரச்னைகள் இருந்தனவோ அதேபோல சில பிரச்னைகள் இந்த முறையும் இருந்தன.

அதேபோன்று முதல் பாகத்தை படத்தை வெளியிடுவதற்கு முன்னரே திரையிட்டுக் காட்ட வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளானேன்.

இப்போது அந்த மாதிரியான வற்புறுத்தல்கள் எதுவும் இருக்காது என்றே நம்புகிறேன். ஒருவேளை பட வெளியீட்டில் ஏதாவது பிரச்னை என்றாலும் அதை நிச்சயம் தைரியமாக
அரசியல்வாதியாக எதிர்கொள்வேன்.”

இவ்வாறு கமல் பேசினார்

ரஞ்சித்தை போன்று ரஜினிக்கு வயதான வேடம் கொடுக்க நினைத்த ஷங்கர்

ரஞ்சித்தை போன்று ரஜினிக்கு வயதான வேடம் கொடுக்க நினைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director shankarடைரக்டர் ஷங்கர் என்றாலே அவரது படங்களில் மிகப்பிரம்மாண்டம் இருக்கும்.

படத்தில் நடிக்கும் கலைஞர்கள் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அந்த பிரம்மாண்டத்தை நாம் பார்க்கலாம்.

இவர் ரஜினியை வைத்து இதுவரை சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

3வது படமாக லைகா தயாரிப்பில் 2.0 படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

தொழில்நுட்ப பணிகள் தொடர்ந்து 1 வருடமாக நடந்து வருவதால் அடுத்த ஆண்டு 2019ல் தான் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவரது படங்களில் ரஜினிகாந்த் மிகவும் இளமையாக இருப்பார். ஆனால் இவர் ரஜினியை வயதானவராக ஒரு படத்தில் காட்ட நினைத்திருந்தாராம்.

அதை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

வாழ்ந்துக் கொண்டிருக்கும் 85வயது இளைஞர் சமூக போராளியான டிராபிக் ராமசாமி கேரக்டரில்தான் ரஜினியை அப்படி வயதான வேடத்தில் காட்ட நினைத்திருந்தாராம்.

ஆனால் அதற்குள் எஸ்ஏசி. சார் டிராஃபிக் ராமசாமி கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.

பொதுவாக ரஜினியை எல்லா இயக்குனர்களும் இளமையாக காட்டிதான் நடிக்க வைத்தார்கள்.

ஆனால் ரஞ்சித் மட்டுமே ரஜினியின் நிஜ வயது கேரக்டரில் நடிக்க வைத்தார். அதுபோல் நடிக்க வைத்த நினைத்த ஷங்கரின் கனவும் தற்போது தவிடு பொடியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் பிறந்தநாளில் தல அஜித்தின் அடுத்த கட்டம்

தளபதி விஜய் பிறந்தநாளில் தல அஜித்தின் அடுத்த கட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithவருகிற ஜீன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது.

இதனை ரசிகர்கள் கொண்டாட தயாராக இருந்தாலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்றைய தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் 2ஆம் கட்ட சூட்டிங் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது மும்பை அல்லது சென்னையில் தொடங்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

அண்மையில்தான் ஹைதராபாத்தில் தன் சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு, காலா புகழ் சாக்ஸி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையைமைக்கிறார்.

35 வருடங்களுக்கு முன்பே இரண்டு பாக படங்களை அறிமுகப்படுத்திய கமல்

35 வருடங்களுக்கு முன்பே இரண்டு பாக படங்களை அறிமுகப்படுத்திய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalyana ramanகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

ஹாலிவுட் படத்தின் தரத்தை மிஞ்சும் அளவுக்கு இதன் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் கமலுக்கு உரித்தானே ரொமான்ஸ் லிப் லாக் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

இது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இது போன்ற 2 பாகங்கள் கொண்ட படத்தை கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

கமல், ராதா நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவான படம் கல்யாண ராமன்.

ஜிஎன் ரங்கராஜன் இயக்கிய இப்படம் 1979ல் வெளியானது.

இதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை 1985ஆம் ஆண்டில் ஜப்பானில் கல்யாணராமன் என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் கமல் நடித்திருந்தார்.

எஸ்பி முத்துராமன் இயக்கிய இப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவுக்கே இரண்டு பாகங்கள் கொண்ட படத்தை அப்போதே அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

போராட வேண்டாம் என சொல்வது பைத்தியக்காரத்தனம்… – எஸ்ஏ. சந்திரசேகர்

போராட வேண்டாம் என சொல்வது பைத்தியக்காரத்தனம்… – எஸ்ஏ. சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SACரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர், எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.

அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.

உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர்.

அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.

இந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன்.

மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . ? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்.

டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

4வது முறையாக இணையவிருந்த ரஜினி-ஷங்கரை பிரித்த எஸ்ஏசி

4வது முறையாக இணையவிருந்த ரஜினி-ஷங்கரை பிரித்த எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA Chandra Sekarவிக்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள டிராஃபிக் ராமசாமி படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்து வருகிறார் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர்.

இப்படம் வருகிற ஜீன் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் எஸ்ஏசி.யிடம் உதவி இயக்குனர்களாக பணி புரிந்த ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது ஷங்கர் பேசும்போது…

இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.

எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் டிராபிக் ராமசாமி கேரக்டரில் அவரை பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்று பேசினார்.

சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய 3 படங்களில் ரஜினி ஷங்கர் இணைந்து பணியாற்றினர்.

மீண்டும் ரஜினியை வைத்து 4வது படமாக டிராஃபிக் ராமசாமி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்த ஷங்கரை எஸ்ஏசி இப்படி பிரித்துவிட்டாரே..

More Articles
Follows