நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

நானும் விக்ரமும் நடிச்சது ரிலீஸாகல..; ஆல்பம் வெளியீட்டில் மீனா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவான ‘நீ போதும்’ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசும்போது…

“இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்ல முடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னால் நானும் சியான் விக்ரமும் ‘காதலிசம்’ என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்த சூழலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்கிற வழிவகை தெரியாததால் அது ரிலீசாகமலேயே போய்விட்டது.

ஆனால் இந்த ஜெனரேஷனில் ஆல்பம் பாடல் குறித்து எல்லோர்க்குமே தெரிந்துள்ளது. என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும்போது அதை வெளியே தெரியப்படுத்த தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்.

Myself and Vikram acted in Kadhalism says Meena

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

துணிச்சலான பெண் நிரஞ்சனி.. அவருக்கு பொருத்தமானது ‘நீ போதும்’.; பரத் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.

பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார்.

வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதியுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘நீ போதும்’ ஆல்பத்தை நேற்று நடிகை குஷ்பு, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆன்லைனில் வெளியிட்டனர்.

இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகை மீனா, நடிகர்கள், ஷாம், பரத், இயக்குனர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆல்பத்தை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இந்த ஆல்பத்தின் இயக்குனர் வம்சி குருகுரி பேசும்போது….

“எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட்டபோது நிரஞ்சனி அசோகன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தந்து உதவினார். இந்த பாடல் படப்பிடிப்பின் போது அழும் காட்சிகளுக்காக கிளிசரின் கொன்னு வர சொன்னார் நிரஞ்சனி. ஆனால் நான் கொண்டுபோக மறந்து விட்டேன்.. இருந்தாலும் கிளிசரின் இல்லாமலேயே நிஜமாகவே அழுது நடிக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை அருமையாக செய்து விட்டார்’ என்று கூறினார்..

பாடலாசிரியர் சுரேந்திரன் ஜோ பேசும்போது,…

“பெண்களுக்கென ஒரு பவர் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.. அதை மையக்கருத்தாக வைத்தே இந்த பாடலை எழுதினேன்” என்று கூறினார்.

நாயகி நிரஞ்சனி அசோகன் பேசும்போது..

“இந்த கான்செப்ட் சொல்லும்போதே இதயத்தை தொட்டது. இந்த மொத்த புராஜெக்ட்டும் எனக்கு ஒரு மேஜிக் போல இருந்தது. பல பிரச்சனைகளை சந்தித்து அதையெல்லாம் கடந்து இன்று இந்த ஆல்பம் ரிலீசாகியுள்ளது.

தன்னம்பிக்கை பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை நடிகை மீனா வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டோம். அவரும் உடனே ஒப்புக்கொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

நடிகர் பரத் பேசும்போது…

“யாக்கை திரி படத்தில் நடித்ததன் மூலம் நிரஞ்சனி அசோகன் எனக்கு அறிமுகமானார். ரொம்பவே துணிச்சலான பெண்.. இயற்கையான நடிப்பை வெளிபடுத்துபவர்.. தன்னம்பிக்கை கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய இந்த ஆல்பத்திற்கு நிரஞ்சனி பொருத்தமானவர் தான் “ என்று வாழ்த்தினார்.

Bharath appreciated Nee Podhum team and Niranjani

டிஜிட்டல் உலகிலும் ‘மும்முடிச் சோழன்’ நாடகத்தை ந(டி)டத்தி காட்டிய ஆதேஷ் பாலா

டிஜிட்டல் உலகிலும் ‘மும்முடிச் சோழன்’ நாடகத்தை ந(டி)டத்தி காட்டிய ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் நாடகத்தையே மறந்து சினிமாவில் மக்கள் மூழ்கியுள்ள காலம் இது.

அதனையும் கடந்து டிவி சீரியல்கள் ஓடிடி தளங்கள் என உலகம் விரிவடைந்துள்ளது.

ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் சினிமாவிலும் சீரியலிலும் பல டேக்குகள் எடுத்து விடலாம்.

ஆனால் நாடகம் அப்படி அல்ல.. நாடகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னுடைய வசனத்தையும் தன்னுடைய உடல் மொழியையும் அரங்கேற்றிட வேண்டும்.

அப்படி ஒரு சவாலான விஷயத்தை இன்றைய நவீன உலகத்தில் அரங்கேற்றியுள்ளனர் நடிகர் ஆதேஷ் பாலா குழு. நாடகத்தின் பெயர் : மும்முடி சோழன்.

ஒரு திரைப்படத்தை மேடையில் கண்டது போல் அரங்கேற்றமானது மன்னர் இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு.

மும்முடிச் சோழன்

இராஜராஜ சோழன் வாழ்க்கையை சொல்லும் ‘மும்முடி சோழன்’ நாடகம் இது.

இதில் இராஜேந்திர சோழனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆதேஷ் பாலா.

அவர் வரும் காட்சிகளில் அரங்கமே கை தட்டி ஆராவாரம் செய்தது.

மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது.

இத்துடன் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டல் ஆராவாரம் கிடைத்தது.

இந்த நாடகத்தில் கிட்டத்தட்ட 38 காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்முடிச் சோழன்

இந்த நாடகம் ஜூன் 14 நேற்று மாலை சென்னை இராஜா அண்னாமலை மன்றத்தில் மிக பிரம்மாண்டமாய் அரங்கேற்றம் செய்யப்பட்டது,

தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடை பெற்ற இந்த நாடகத்திற்கு தொழில் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்கள், தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள், அமைச்ச்சர் சேகர் பாபு அவர்கள்
தமிழச்சி தங்கபாண்டியன், செயலாளர் விஜயா தாயன்பன், நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நெல்லை ஜெயந்தா, உலக தமிழ் வளச்சி கழக தலைவர் அவ்வை அருள், கே பி கே செல்வாராஜ், மருத்துவர் க மணிவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நாடகத்தை தயாரித்து வழங்கியது யோகஷாரம் அறக்கட்டளை நிறுவனர் தயாரிப்பாளர் A P வைத்தீஸ்வரன், இயக்கம் AS மணி, நாடக ஆக்கம், வசனம் தஞ்சை RK.

மும்முடிச் சோழன்

Actor Aadesh bala acted in Mumudi Cholan stage drama

காதலும் கபடியும்.; கோலிவுட்டின் வெற்றி சென்டிமென்ட்டில் உருவான ‘கபடி ப்ரோ’

காதலும் கபடியும்.; கோலிவுட்டின் வெற்றி சென்டிமென்ட்டில் உருவான ‘கபடி ப்ரோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எழுதப்படாத சில சென்டிமென்ட் விதிகள் எப்போதுமே உண்டு. அதில் முக்கியமானது காதலும் கபடியும்.

பெரும்பாலும் இந்த கபடியும் காதலும் இணைந்தால் அந்தப் படங்கள் வெற்றிப்பட வரிசையில் இணைந்து வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தற்போது அந்த வரிசையில் காதல் மற்றும் கபடியை மையப்படுத்தி இணைந்துள்ள படம்தான் ‘கபடி ப்ரோ’. அதன் விவரம் வருமாறு….

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன்) கதை.

கபடி ப்ரோ

அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ), சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி) உள்ளனர் .

இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர் .

இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் (மதுசூதன ராவ் ) மகள் அபிராமியும் (பிரியா லால் ) காதல் கொள்கின்றனர்.

தன்னுடைய மாமா மகளை மணம் முடிப்பான் என்று வீட்டில் எதிர் பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான்.

அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள்.

இசக்கி பாண்டியன் வீரபாகுவை தண்டிக்க கபடி போட்டியை தேர்ந்தெடுக்க அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான்.

கபடி ப்ரோ

பின்பு நடந்தது என்ன.? போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை.

நடிகர்கள் – சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதன ராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், ரஜினி M, மீரா கிருஷ்ணன் , அஞ்சலி, சிசர் மனோகர், சங்கர் & மற்றும் பலர்

Story, screenplay, dialogue, direction – Sathish Jayaraman
Producer- ANJHANA CINEMAS -USHA SHATHISH
Camera -E .Krishnasamy
PRO –SIVAKUMAR
Music-A J Daniel
Lyrics-gnanakaravel ,Thamarai
Choreography –Nobel,Rathika
Art –K A Raghava Kumar
Editing –S P Ahamad

கபடி ப்ரோ

KABADI BRO movie release date is here

இளையராஜா இசையில் இணையும் ராமராஜன் – மீனா.; இயக்குநர் – வில்லன் அப்டேட்ஸ்

இளையராஜா இசையில் இணையும் ராமராஜன் – மீனா.; இயக்குநர் – வில்லன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 1990 காலகட்டங்களில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.

கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் நாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன்.

இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.

‘சாமானியன்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார்.

ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் V கூறும்போது…

“ராமராஜன் சார் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன்.. உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார்.

அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக ‘சாமானியன்’ படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன்.

அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.

அடிப்படையில் நான் ஒரு கதாசிரியர் மட்டும் தான்.. யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை.. பல படங்களில் கதை ஆலோசகராக பணியாற்றி உள்ளேன்.. அதேசமயம் கதாசிரியராக இருந்து இயக்குனராக மாறுவது ஒன்றும் சுமையான விஷயமும் அல்ல. கதையுடனே பயணித்து இருப்பதால் படத்தை இயக்குவது இன்னும் எளிதாகவே இருக்கும்.

‘சாமானியன்’ படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார்.

ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் சாமானியன் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இரண்டும் வெவ்வேறாக இருக்கும்..

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும் ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும்.

அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப்பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும்.

நான் இயக்குனர் ஷங்கரின் தீவிரமான ரசிகன். அவரது படங்கள் அனைத்திலும் ஒரு சமூக அக்கறை இருக்கும். அது படத்தில் பிரம்மாண்டமாக சொல்லப்பட்டிருக்கும். எனக்கும் அதேபோன்று சமூக அக்கறை உள்ள கதைகளை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால் தான் தொடர்ந்து அதே போன்று சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கி வருகிறேன்.

இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் எப்போதும் நான் ஒரு கதாசிரியர் என்று சொல்வதில் தான் எனக்கு பெருமை.

மலையாள திரை உலகில் இயக்குனருக்கு அடுத்ததாக கதாசிரியருக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் அதுபோன்று கதாசிரியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆர்வம்.. இதற்காக நான் தற்போது சினிமாவிற்கு நுழைபவர்களுக்காக வகுப்புகளும் எடுத்து வருகிறேன்

இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே டைரக்சனையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம்.

அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம்.

இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

First time Ramarajan and Meena in ilaiyaraaja music

என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சிறந்த பிசினஸ்மேன் என்பவர் *தான் உறங்கும் போதும் கூட சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்* என யாரோ ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

இந்த சொல்லை மற்றவர்கள் கடைப் பிடிக்கிறார்களா இல்லையோ ஆனால் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு கட்டத்தில் சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் அடுத்த தொழிலை கைப்பற்றி இருப்பது ஹோட்டல் தொழில்.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் திருமண மண்டபங்களை கட்டியும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை பொருத்தவரையில் பலர் தியேட்டர்களை கட்டி அதில் லாபம் பார்த்து வருகின்றனர்.

முக்கியமாக இளம் நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் தியேட்டர்களை திறந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்ட முடிவுடுத்துள்ளதாம்.

ஐதராபாத்தில் அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Actor Sivakarthikeyan going to launch AAA cinemas

More Articles
Follows