தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்ட ஏபிஜே அப்துல்கலாம் மறைந்து இன்றோடு முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
எனவே நடிகர் விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் இன்று (27.7.2016) நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.
இதில் தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் மேலாளர் முருகராஜ் கலந்து கொண்டார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அரவிந்த் ஃபவுன்டேஷனை சேர்ந்த மாணவ மாணவியர்களின் படிப்பிற்கு தேவையான புத்தகம், பேனா, பென்சில் மற்றும் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒரு மரக்கன்றை கொடுத்து வளர்க்கும் படி கொடுக்கப்பட்டது.
இதில் நடிகர் சௌந்தரராஜா, புரட்சி தளபதி விஷால் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன், செயலாளர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.