தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் நாடகத்தையே மறந்து சினிமாவில் மக்கள் மூழ்கியுள்ள காலம் இது.
அதனையும் கடந்து டிவி சீரியல்கள் ஓடிடி தளங்கள் என உலகம் விரிவடைந்துள்ளது.
ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் சினிமாவிலும் சீரியலிலும் பல டேக்குகள் எடுத்து விடலாம்.
ஆனால் நாடகம் அப்படி அல்ல.. நாடகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னுடைய வசனத்தையும் தன்னுடைய உடல் மொழியையும் அரங்கேற்றிட வேண்டும்.
அப்படி ஒரு சவாலான விஷயத்தை இன்றைய நவீன உலகத்தில் அரங்கேற்றியுள்ளனர் நடிகர் ஆதேஷ் பாலா குழு. நாடகத்தின் பெயர் : மும்முடி சோழன்.
ஒரு திரைப்படத்தை மேடையில் கண்டது போல் அரங்கேற்றமானது மன்னர் இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு.
இராஜராஜ சோழன் வாழ்க்கையை சொல்லும் ‘மும்முடி சோழன்’ நாடகம் இது.
இதில் இராஜேந்திர சோழனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆதேஷ் பாலா.
அவர் வரும் காட்சிகளில் அரங்கமே கை தட்டி ஆராவாரம் செய்தது.
மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது.
இத்துடன் ஒவ்வொரு வசனத்திற்கும் கைதட்டல் ஆராவாரம் கிடைத்தது.
இந்த நாடகத்தில் கிட்டத்தட்ட 38 காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடகம் ஜூன் 14 நேற்று மாலை சென்னை இராஜா அண்னாமலை மன்றத்தில் மிக பிரம்மாண்டமாய் அரங்கேற்றம் செய்யப்பட்டது,
தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடை பெற்ற இந்த நாடகத்திற்கு தொழில் அதிபர் விஜிபி சந்தோசம் அவர்கள், தலைவர் வாகை சந்திரசேகர் அவர்கள், அமைச்ச்சர் சேகர் பாபு அவர்கள்
தமிழச்சி தங்கபாண்டியன், செயலாளர் விஜயா தாயன்பன், நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் தாஜ்நூர், கவிஞர் நெல்லை ஜெயந்தா, உலக தமிழ் வளச்சி கழக தலைவர் அவ்வை அருள், கே பி கே செல்வாராஜ், மருத்துவர் க மணிவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நாடகத்தை தயாரித்து வழங்கியது யோகஷாரம் அறக்கட்டளை நிறுவனர் தயாரிப்பாளர் A P வைத்தீஸ்வரன், இயக்கம் AS மணி, நாடக ஆக்கம், வசனம் தஞ்சை RK.
Actor Aadesh bala acted in Mumudi Cholan stage drama