தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் அசுரன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து துரை செந்தில்குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் வடசென்னை 2 படம் இனி வராது என தகவல்கள் பறந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனுஷ் கூறியுள்ளதாவது…
“என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும்.
அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என தனுஷ் கூறியுள்ளார்.