விஜய் சூர்யா தனுஷ் சூரி ஆகியோருடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேச்சு

விஜய் சூர்யா தனுஷ் சூரி ஆகியோருடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரசாத் லேபில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது…

“வடசென்னை 2′ கண்டிப்பாக வெளிவரும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பு ‘விடுதலை 2’ படத்தின் பணிகளை செய்து வருகிறேன்.

இந்த படத்தை முடித்த பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

தற்போது சூர்யா வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் உருவத்தை ஸ்கேன் செய்து அதை லண்டனில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் அனிமேஷன் செய்து வருகிறோம்.

அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது” என்றார்/

அதன் பின்னர் விஜய் படத்தை இயக்குவீர்களா? என்று கேள்வி கேட்டபோது..

“கண்டிப்பாக விஜய் ரெடியாக இருந்தால் என்னுடைய கதையைக் கேட்டால் இருவருக்கும் ஒத்து வரும்போது அதற்கான படம் நிச்சயமாக அமையும்” என்றார்.

Vettrimaran speech about Vijay Suriya Dhanush Soori movies

உதயநிதி-யின் ‘மாமன்னன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிபிகேட்

உதயநிதி-யின் ‘மாமன்னன்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘மாமன்னன்’ படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மாமன்னன்

Udhayanidhi’s Maamannan movie got U/A certificate

கார்த்தி – ராஜூ முருகன் இணைந்த ‘ஜப்பான்’ பட சூட்டிங் அப்டேட்

கார்த்தி – ராஜூ முருகன் இணைந்த ‘ஜப்பான்’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.

இப்படத்தில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Karthi wraps up shooting for ‘Japan’ movie

எங்க எமோஷனோடு விளையாடாதீங்க.; சன் பிக்சர்ஸை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்

எங்க எமோஷனோடு விளையாடாதீங்க.; சன் பிக்சர்ஸை எச்சரிக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் தமன்னா ரம்யா கிருஷ்ணன் சுனில் உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சரியாக ஒன்றை மாதங்கள் மட்டுமே உள்ளது.

ஆனால் படத்தின் டீசர் / பாடல் வெளியீடு என படத்தின் புதிய தகவல்களோ எதுவுமே வெளியாகவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்லர் அப்டேட் சன் பிக்சர்ஸ் என்பதை டேக் செய்து ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களின் எமோஷனலுடன் விளையாடாதீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Rajinikanth fans warns Sun pictures

JUST IN நம்பர் ஒன் ஹீரோ விஜய்..; விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

JUST IN நம்பர் ஒன் ஹீரோ விஜய்..; விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்ட குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசியல் குறித்தும் சினிமா குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்…

“தமிழக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி விட்டதாக தெரிவித்துள்ளது. அதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது.

“விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டேன். அரசியல் வருவேன் என எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்ன பிறகு அவரின் அரசியல் வருகை குறித்து நான் கருத்து தெரிவிப்பேன்.

இப்போது நம்பர் ஒன் ஹீரோவாக விஜய் உள்ளார். அவரது ‘லியோ’ படத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார் விஜய பிரபாகரன்.

No 1 hero Vijay says Vijayakanth son Vijaya Prabakar

போதைக்கு ஆதரவளித்து ரவுடியிசத்தை உருவாக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க மனு

போதைக்கு ஆதரவளித்து ரவுடியிசத்தை உருவாக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

தமிழக அரசும், காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வருகிறது.

ஆனால், ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

complaint to take action against Vijay who supports drugs and rowdyism

More Articles
Follows