நாடகம் திரைப்படமானது.; ‘அசுரன்’ இடத்தில் உருவான ‘மூத்தக்குடி’.; பாரதிராஜா ஆதரவு

நாடகம் திரைப்படமானது.; ‘அசுரன்’ இடத்தில் உருவான ‘மூத்தக்குடி’.; பாரதிராஜா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார்.

அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மிகுந்த சிரத்தையெடுத்து, கடினமாக உழைத்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. நாம் வாழ்ந்த காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

‘சாவி’ படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் செய்துள்ளார்.

அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“அசுரன்” திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், விரைவில் இப்படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
இயக்கம் – ரவி பார்கவன்
இசை – J R முருகானந்தம்
ஒளிப்பதிவு – ரவிசாமி
படத்தொகுப்பு – வளர் பாண்டி
கதை வசனம் – M சரக்குட்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
பாடல்கள் – நந்தலாலா
எஃபெக்ட்ஸ் – சேது
டிசைன்ஸ் – அஞ்சலை முருகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Bharathi Raja released Mooththakkudi first look poster

30 வருடத்தில் முதன்முறையாக 01-05-2023 அஜித் பர்த்டே ரொம்ப ஸ்பெஷல்.? ஏன்.?

30 வருடத்தில் முதன்முறையாக 01-05-2023 அஜித் பர்த்டே ரொம்ப ஸ்பெஷல்.? ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மே 1 உழைப்பாளிகள் தினம்.. இந்த தினத்தை உலகமே கொண்டாட தயாராக வருகிறது. அஜித் ரசிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு இந்த நாள் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் நாளாக அமைந்துள்ளது.

அதற்கு காரணம் மே 1 நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். எல்லா வருடமும் ஸ்பெஷல் என்றாலும் இந்த வருடம் 2023 அஜித் ரசிகர்களுக்கு இந்த ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா.?

அஜித் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படம் ‘அமராவதி’.

இந்த படம் 1993 மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பாலபாரதி இசையமைக்க சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் அஜித்துடன் சங்கவி ஜோடியாக நடித்திருந்தார். சங்கவி அறிமுகமான முதல் தமிழ் படமும் இதுதான்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, மடிப்பு அம்சா விசித்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாஜ்மஹால் தேவையில்லை… & புத்தம் புது மலரே… ஆகிய பாடல்வள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. இதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

இந்த நிலையில் 30 வருடங்களுக்குப் பிறகு நாளை மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் ‘அமராவதி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மேலும் சென்னை உள்ள பிரபலமான ரோகினி தியேட்டரில் காலை 10:00 மணிக்கு அஜித் ரசிகர் கொண்டாட்டத்துடன் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் பற்றிய தங்களது நினைவுகளை செல்வா, சங்கவி விசித்திரா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்துக்கு 10 வயதில் இருந்தே நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் 2000 (2K) வருடங்களில் பிறந்தவர்கள் தான்.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு அஜித்தின் முதல் படத்தை தற்போது திரையரங்குகளில் பார்க்கும் வசதி கிடைத்துள்ளது. எனவே அவர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை தரும் என நம்பலாம்.

Ajith’s Amaravathi re release on his birthday

அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டு பின்னர் அவர் விலகியதால் மகிழ் திருமேனி இயக்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

இது உறுதியானாலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மே 1 தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதனை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை லைக்கா நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வந்துள்ளன.

‘துணிவு’ படத்திற்குப் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாததால் அப்செட் ஆகியிருந்த அஜித் ரசிகர்களுக்கு மே 1ம் தேதி இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் என நம்பலாம்.

Lyca gives double treat on Ajith’s birthday

ரஜினியின் அரசியல் பேச்சை வச்சி செய்த முன்னாள் ஜோடி ரோஜா

ரஜினியின் அரசியல் பேச்சை வச்சி செய்த முன்னாள் ஜோடி ரோஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று விஜயவாடாவில் நடைபெற்ற என் டி ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது அதில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பாலையா ஆகியோரை புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த்.

பாலையா பற்றி குறிப்பிட்டு பேசும் போது.. “ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோரால் செய்ய முடியாததை பாலையா செய்வார். அவர் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என புகழ்ந்து பேசினார்.

அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு குறித்து பேசும் போது.. “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்டவர். ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுக்கு காரணமே சந்திரபாபுவின் தொலைநோக்கு பார்வை தான். நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் அவருடன் நடித்த நடிகையும் தற்போதைய அமைச்சருமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் ‘வீரா’ மற்றும் ‘உழைப்பாளி’ படங்களில் ஜோடியாக நடித்தவர் ரோஜா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா பேசியதாவது…,

“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அவருக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி தெரியவில்லை.

விஷன் 2047 என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

சந்திரபாபுவின் விஷன் 2020 காரணமாக தான் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அப்படியானால் 2047-ல் சந்திரபாபு எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியும்.

சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என பேசினார் ரஜினி.

என்டிஆர் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான். தன் கடைசி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ்.. அவருடைய மருமகன் ஒரு திருடன்.. யாரும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.

ரஜினிக்கு இது தெரியல. என்டி ராமராவ் பேச்சு அடங்கிய CDயை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த சிடியை போட்டு பார்த்து ஆந்திர அரசியல் பற்றி ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளட்டும்” என கலாய்க்கும் வகையில் ரோஜா தெரிவித்துள்ளார்.

Minister Roja trolls Rajinikanths knowledge in politics

விலையில்லா விருந்தகத்திற்கு பணம் வேணுமா.? நெஞ்சில் ஆட்டோஃகிராப் கேட்டவருக்கு விஜய் அட்வைஸ்

விலையில்லா விருந்தகத்திற்கு பணம் வேணுமா.? நெஞ்சில் ஆட்டோஃகிராப் கேட்டவருக்கு விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி பனையூரில் உள்ள தன் இல்லத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய்.

அப்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்..

இவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் என்ற ஒரு ஹோட்டலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த உணவகம் திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

இவர்களையும் நேற்று சந்தித்த விஜய் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள், என கூறினாராம் விஜய்.

இத்துடன் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் நெஞ்சில் ஆட்டோகிராப் போடச் சொன்னாராம். அதை அப்படியே பச்சை குத்தி கொள்வதாகவும் தெரிவித்தாராம்.

அதை எல்லாம் மறுத்த விஜய் ஒரு வெள்ளை காகிதத்தில் மட்டும் கையெழுத்திட்டு கொடுத்து அப்படி எல்லாம் செய்யக்கூடாது என அறிவுரை சொல்லி அவரை அனுப்பி வைத்தாராம் விஜய்.

Vijay’s advice to those who asked for an autograph on their chest

வித்தைக்காரனுடன் இணைந்த கவிதைக்காரன்.; வைரமுத்துவை வரவேற்ற சதீஷ்

வித்தைக்காரனுடன் இணைந்த கவிதைக்காரன்.; வைரமுத்துவை வரவேற்ற சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ் ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்த ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.

இதன் பின்னர் சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதையின் நாயகனாக ‘வித்தைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜன் உதவியாளர் வெங்கி என்பவர் இயக்கியுள்ளார்

இந்தப் படத்துக்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்க அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டு பட குழுவினரை வாழ்த்தி இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 29ஆம் தேதி இந்த படம் தொடர்பான ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

வித்தைக்காரன் படத்தில் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத உள்ளார் என அறிவித்து அவரை வரவேற்றுள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! ❤️❤️

வித்தைக்காரன்

Welcome on Board Sir @Vairamuthu as Lyricist in #Vithaikkaaran

@vijaywcf @Venki_Dir #SimranGupta @vbrcomposer @iamyuvakarthick @R_chandru @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001

Vithaikkaaran – Motion Poster

https://t.co/QpeeogQNih

Vithikaaran movie song line writen vairamuthu

More Articles
Follows