நடிகை தன்யாவை 2வது திருமணம் செய்துக் கொண்ட ‘மாரி’ பட இயக்குனர்.?

நடிகை தன்யாவை 2வது திருமணம் செய்துக் கொண்ட ‘மாரி’ பட இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன்.

இவர் பெரும்பாலும் பல படங்களில் நாயகியின் தோழியாகவே நடித்து வந்தார்.

விதார்த் நடித்த ‘கார்பன்’ படத்தில் நாயகியாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவருக்கும் ‘மாரி’ பட இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமண நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

பாலாஜி மோகனுக்கு 2012இல் திருமணமாகி 2013இல் விவாகரத்து ஆனதும் குறிப்பிட்டத்தக்கது.

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலாஜி மோகனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக நடிகை கல்பிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாலாஜி & தன்யா தரப்பிலிருந்து இதுவரை இந்த செய்து குறித்து எந்த மறுப்பு தகவலும் வெளியாகவில்லை.

ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு.; கருப்பு பணத்தை பதுக்கினாரா.? சர்ச்சையை கிளப்பும் ‘துணிவு’ பாடல்

ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு.; கருப்பு பணத்தை பதுக்கினாரா.? சர்ச்சையை கிளப்பும் ‘துணிவு’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

வினோத் இயக்கிய இந்த படத்துற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியான நிலையில் 2வது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலை வைசாக் எழுதி அவரே பாடியும் இருக்கிறார்.

இந்த பாடல் வரிகளில்.. ‘ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு; ஏகப்பட்ட ஈஎம்ஐ-ல நாடே கெடக்கு’ வரிகள் உள்ளன.

பொதுவாக இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை பெரிய பெரிய தொழிலதிபர்கள் ஸ்விஸ் பேங்கில் பதுக்கி வைத்து வருகின்றனர்.. இந்த நிலையில் காந்திக்கும் அங்கு கணக்கு இருப்பதாக வந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது.

மேலும் ‘மனுஷன மிருகமா மாத்திடும் மணி’ ‘உஷாரா இல்லன்னா தலையில துணி’, ஆகிய வரிகள் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இப்பாடலில் நாயகி மஞ்சுவாரியரும் இணைந்து பாடியுள்ளார். ஆனால், அவர் குரல் கோரஸில் மட்டுமே உள்ளது. இதற்கு ஏன் இவ்வளவு பில்டப் ??? என்பதுதான் புரியவில்லை.

Get ready to experience the power of Money !?

#KasethanKadavulada OUT NOW

Go watch it now – https://youtu.be/_KT-snaRT90

#ThuvinuSecondSingle

வசந்தபாலன் – அர்ஜூன்தாஸ் இணைந்த ‘அநீதி’யை வாங்கினார் டைரக்டர் ஷங்கர்

வசந்தபாலன் – அர்ஜூன்தாஸ் இணைந்த ‘அநீதி’யை வாங்கினார் டைரக்டர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயில்’ படத்தை அடுத்து வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’.

இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை தானே S Pictures சார்பாக வெளியிடுவதாக தெரிவித்தாராம். இதனை படக்குழு இன்று போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்

2023 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

——

It’s HUGE! Director @shankarshanmugh’s #SPictures is presenting director @Vasantabalan1’s #Aneethi starring @iam_arjundas @officialdushara. Director Shankar was impressed with the film and decided to acquire the film under his banner.

@gvprakash @UBoyzStudios @thinkmusicindia

.@edwinsakaydop @arjunchdmbrm @Gkrishstudio @vanithavijayku1 @TSivaAmma @kaaliactor @JSKfilmcorp #SureshChakravarthy #Bharani #AranthangiNisha #Ravikumar @onlynikil @vattalstudios

மறைந்த தன் மகளுக்கு இதயம் உருகும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த பாடகி சித்ரா

மறைந்த தன் மகளுக்கு இதயம் உருகும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த பாடகி சித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சித்ரா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், தனது குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “தேவதைகளுடன் சொர்க்கத்தில் பிறந்தநாள் கொண்டாடும் உனக்கு வாழ்த்துக்கள்.

ஆண்டுகள் வந்து போகும் உனக்கு வயதாகாது . நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.

நீ தொலைவில் இருக்கிறாய். நான் இன்று உன்னை இன்னும் கொஞ்சம் நேசிக்கிறேன், மிஸ் செய்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான நந்தனா.

பூமியில் பிறந்து சில நாட்கள் வாழ்கிறார்கள், பின்னர் அவர்கள் விரைவில் தங்கள் அசல் இடத்திற்குச் செல்கிறார்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் .

கணவர் மற்றும் வருங்கால குழந்தை தொடர்பாக ரக்ஷிதா வின் இறுதி முடிவு இதுவா?

கணவர் மற்றும் வருங்கால குழந்தை தொடர்பாக ரக்ஷிதா வின் இறுதி முடிவு இதுவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மற்ற ‘பிக் பாஸ் தமிழ் 6’ போட்டியாளர்களுடனான உரையாடல்களில் ரக்ஷிதா தனது முந்தைய உறவில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார் .

வெளியில் ஒரு தேவதை தனக்காகக் காத்திருப்பதாகவும், வேறு எந்தத் தகவலையும் வெளியிடாமல் அவள் உறவில் இருப்பதாகவும் அவள் சூசகமாகச் சொன்னாள்.

தனக்கு 35 வயதாகும் போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பதே தனது வாழ்வின் லட்சியம் என்று கூறினார்.

தினேஷுடன் மீண்டும் இணையும் எண்ணம் ரக்ஷிதா வுக்கு இல்லை என்றும், பிரசவத்திற்குப் பதிலாக தத்தெடுக்கும் எண்ணம் ரசிதாவுக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை வனிதா – ரவுடி பேபி சூர்யா தேவி மோதல்.; காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது.

நடிகை வனிதா – ரவுடி பேபி சூர்யா தேவி மோதல்.; காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டில் ‘டிக் டாக்’ பிரபலம் ரவுடி பேபி சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா இடையே மோதல் ஏற்பட்டது.

அப்பொழுது இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த பிரச்சனையில் நடிகை வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்.

இதனால் பிரச்சினை நாஞ்சில் விஜயன் பக்கம் திரும்பியது.

எனவே சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் மீது போலீஸில் புகார் அளித்தார் சூர்யா தேவி.

அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகவில்லை என கூறப்படுகின்றது.

விஜயனை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows