தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 40வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் தனது 100வது படத்தை இந்நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக சரித்திர படமாக தயாரிக்கவுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யாவிடம் பேசி வருகிறார்கள்.
மேலும் முன்னணி நடிகர்களும் இதில் நடிக்கவிருக்கிறார்களாம்.
விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை கமலகண்ணன் கவனிக்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் தயாராகவுள்ளது.
எனவே இந்தி மார்கெட்டை கணக்கில் கொண்டு, ரஜினியின் கோச்சடையான் பட நாயகி தீபிகா படுகோனோவை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.