தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முழு நேர அரசியலில் ஈடுபட்ட சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.
தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ள இப்படம் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகிறது.
சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண், இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது.
தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.