தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடித்து தயாரித்த சூரரைப் போற்று 2020 மற்றும் ஜெய்பீம் 2021 ஆகிய படங்கள் பல எதிர்ப்புகளை மீறி தியேட்டர்களில் வெளியாகாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன் படம் உலகமெங்கும் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
பாண்டிராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‛எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் பா.ம.கட்சியனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெய் பீம் படம் பலரின் பாராட்டுக்களை அள்ளினாலும் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பு உருவானது. அந்த படம் வெளியானபோதே பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் சூர்யா விளக்கம் மட்டுமே அளித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சூர்யா படம் திரையிடுவதில் பிரச்சினை உருவாகி உள்ளது.
Cuddalore PMK party oppose Suriya’s Etharkum Thunindhavan