இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து தயாரித்த சூரரைப் போற்று 2020 மற்றும் ஜெய்பீம் 2021 ஆகிய படங்கள் பல எதிர்ப்புகளை மீறி தியேட்டர்களில் வெளியாகாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன் படம் உலகமெங்கும் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‛எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் பா.ம.கட்சியனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெய் பீம் படம் பலரின் பாராட்டுக்களை அள்ளினாலும் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பு உருவானது. அந்த படம் வெளியானபோதே பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் சூர்யா விளக்கம் மட்டுமே அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சூர்யா படம் திரையிடுவதில் பிரச்சினை உருவாகி உள்ளது.

Cuddalore PMK party oppose Suriya’s Etharkum Thunindhavan

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஜனவரியில் தன் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவானதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பிறகு தனுஷ் தன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவும் தன் அப்பா ரஜினியுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் இயக்கும் முஷாஃபிர் என்ற பாடல் வீடியோ பணியில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அவரின் ருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் இன்ஸ்டாவில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்… அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தன் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் நாய்களுடன் ரியூனியன் என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush social media post creates controversy

மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

மனைவியை பிரிந்த இமான் – தனுஷ் வரிசையில் இயக்குனர் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர் இயக்குனர் பாலா.

சேது, நான் கடவுள், நந்தா, பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட பல படைப்புகள் இவரது பெயரை இன்றளவும் சொல்லும்.

இவரது பட நாயர்கள் எப்படி காட்சிகளில் இருப்பார்களோ..? அப்படியே பாடல்களில் இருப்பார்கள். (ஆனால் மற்ற இயக்குனர்களின் பட பாடல்களில் நாயகன் நாயகி வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார்கள்.)

அப்படி ஒரு யதார்த்த வாழ்வியல் படைப்புகளை கொடுப்பத்தில் சிறந்தவர் இயக்குனர் பாலா.

நடிகர் விக்ரமுக்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்று தந்து இருக்கிறார் பாலா. மேலும் சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர்தான் என்றால் அது மிகையல்ல.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் தேனியை சேர்ந்த முத்துமலர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் பாலாவின் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்ட நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்கள் மனைவியை பிரிவதாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Bala and his wife Muthumalar get divorced after 18 years of togetherness

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

ரிஸ்க் எடுத்த அஜித்தின் காயத்துக்கு மருந்து போடும் டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது பல நடிகர்கள் டூப் கலைஞர்களையே பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஒரு சிலர் நடிகர்கள் தாங்கள் அந்த காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்.

இவர் பலமுறை ரிஸ்க் எடுத்து அடிப்பட்டு சிகிச்சைக்காக தன் உடலில் ஆப்பரேசன் செய்துள்ளார்.

இந்த நிலையில் வலிமை படத்திலும் ஒரு விபத்து ஏற்பட்டது.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பைக் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கும்போது அஜித் கீழே விழுந்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த காயங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காட்சிகளை உடனடியாக முடித்தும் கொடுத்தார் அஜித்.

தற்போது அஜித்துக்கு ஒரு டாக்டர் காயத்திற்கு மருந்து போட்டுவிடும் புகைப்படம் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

Ajith kumar’s doctor reveals he Was close to suffering paralysis, says the actor worries about his fans

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்த ஜெய்.; ஏன் தெரியுமா.?

பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்த ஜெய்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.

ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய்.

அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்.

திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய்.

அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா அவர்களை அனுப்பி ஒவ்வொரு பெண் செய்தியாளர்களிடமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய் இப்போது சுந்தர்.சி இயக்கி வரும் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்த பட்டுப்புடவை வழங்கியது பற்றி ஜெய்யிடம் கேட்ட போது, “நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பார்க்கிறேன்.நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார்.

Actor Jai gifted silk Sarees to female journalists

துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

துபாயில் சந்தித்த இசை ஸ்வரங்கள் இளையராஜா – ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இளையராஜா.

இவர் தற்போது ‘துபாய் எக்ஸ்போ 2020’ என்ற இசை நிகழ்ச்சியை துபாய் நாட்டில் நடத்தியுள்ளார். இந்த கச்சேரி மார்ச் 5 பிரம்மாண்டமாக நடைபெற்றது.

துபாயே மிரளும் அளவுக்கு இந்த கச்சேரி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் இசையை கேட்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதாம்.

இந்நிலையில், துபாய் நாட்டில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார் இளையராஜா.

அவரை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்துள்ளார். அவருடன் எடுத்த போட்டோவை, இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
‘மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

Ilayaraja made a surprise visit to Rahmans studio at Dubai

More Articles
Follows