கிரிக்கெட்டர் மலிங்கா.. வின்டேஜ் ரஜினி.; சந்தோஷத்தில் ‘லால் சலாம்’ நடிகர் & காஸ்ட்டியூமர் சத்யா

கிரிக்கெட்டர் மலிங்கா.. வின்டேஜ் ரஜினி.; சந்தோஷத்தில் ‘லால் சலாம்’ நடிகர் & காஸ்ட்டியூமர் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா தான் அவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார். ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளதுடன் சமீபத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் சவாலான ஆடை வடிவமைப்பையும் அசத்தலாக செய்து முடித்தவர் இந்த சத்யா தான் என்பது இன்னொரு ஆச்சரியம்.

தனது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக திடீரென வைரலானது குறித்தும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.

“லால் சலாம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி மூலமாகத்தான் அந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் இந்த படத்திற்காக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

சிலபேர் வெளியில் ஒரு மாதிரியாகவும் கேரவனுக்குள் ஒரு மாதிரியாகவும் தங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இத்தனை நாள் நான் பார்த்த மனிதர்களில் ரஜினி சார் உள்ளேயும் வெளியேயும் எப்போதுமே ஒரே மாதிரியான மனிதர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எப்படி ஒருவர் தன்மையான மனிதனாக இருப்பது என்பதற்கு அவரைவிட வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இந்த படத்தில் அவருக்கான ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பொறுத்தவரை குறை நிறை எதுவாக இருந்தாலும் நம்மிடம் வெளிப்படையாக பேசி விடுவார். ஒரு விஷயத்தை சரியாக செய்து விட்டால் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப நம்மை பாராட்டுவார்.

மலிங்கா

ஒருமுறை சிரமமான விஷயம் ஒன்றை ரொம்பவே எளிதாக செய்து முடித்தேன் அதேசமயம் இன்னொரு விஷயத்தில் இரண்டு முறை முயன்றும் சரிவரவில்லை.. அப்போது என்னிடம் அவர், என்ன சத்யா ரொம்ப கஷ்டமான விஷயத்தை எளிதாக செய்து விட்டீர்கள்.. எளிதான ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்களே என்று கூறினார்..

அவர் அப்படி சொல்வது கூட நம் மீதான அக்கறை, அன்புடன் தான் இருக்கும்.. இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் சார் என்று அவரிடமே கேட்டு அதை சரியாக செய்து முடித்தேன்..

அதில் அவருக்கும் ரொம்பவே சந்தோசம். நாம் சொல்லும் ஒரு விஷயம் சரியாக இருந்தால் எந்த ஈகோவும் பார்க்காமல் அதை மனதார ஏற்றுக்கொள்வார். படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும்போது என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ‘சும்மா கலக்குறீங்களே’ என்று ஜாலியாக கூறி உற்சாகப்படுத்துவார்.

கிட்டத்தட்ட 170 படங்கள் வரை நடித்துவிட்ட அவர் இத்தனை படங்களில் அணியாத ஆடை வகைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு படம் புதிது புதிதாக பலவிதமான ஆடைகளை அவர் அணிந்து நடித்துள்ளார்.

அதனால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் அதேசமயம் இதுவரை அவர் அணிந்த உடைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாகவும் ஆடைகளை வடிவமைத்துள்ளேன். இந்த மாதிரி ஒரு ரஜினியை பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ரசிகர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் படும் வகையில் வின்டேஜ் ரஜினியை கண்முன் நிறுத்தும் விதமாக லால் சலாம் படத்தில் அவரது ஆடைகள் இருக்கும்.

இந்த படத்திற்கு பிறகும் மீண்டும் அடுத்ததாக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்பது தெரியாது.

அதனால் இந்த படத்தையே அவருடன் பணியாற்ற எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக நினைத்து, எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வேலை செய்துள்ளேன் என நினைக்கிறேன். படம் வெளியான பிறகு அவர் அணிந்துள்ள ஆடைகளை பார்த்து அதேபோல யாரேனும் ஒருவராவது விரும்பி அணிந்தார்கள் என்றால் அதுவே எனது வேலைக்கு கிடைத்த கவுரவமாக நினைபேன்.

ரஜினி சாருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரும் என்னை இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா என்றே நினைத்துக் கொண்டார்கள். அது ஒருவகையில் எனக்கு பெருமை தான்.

அதனால் மலிங்கா போன்ற தோற்றத்திலேயே என்னை மறு உருவாக்கம் செய்து ஒரு லுக் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன்.. ஏனென்றால் தற்போது நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவேளை நாளை மலிங்காவின் பயோபிக் பற்றி படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த ஆடிசனுக்கு முதல் ஆளாக சென்று நிற்பேன்” என்று கூறுகிறார் நம்பிக்கையுடன்.

மலிங்கா

Costume Designer Sathya is happy with Rajini words

‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணையும் ‘பீஸ்ட்’ பிரபலங்கள்

‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணையும் ‘பீஸ்ட்’ பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் பிரேம்ஜி நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘பகவதி’ படத்தில் ஜெய் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஜெயிக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது நிலையில் சண்டைப் இயக்குனர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளனர். அன்பறிவ் மாஸ்டர்கள் ஏற்கெனவே ‘பீஸ்ட்’ & ‘லியோ’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stunt Masters Anbarivu will join in Thalapathy 68

‘மஞ்சள் வீரன்’ நாயகன் TTF வாசன் மனு தள்ளுபடி.; நீதிபதி அதிரடி

‘மஞ்சள் வீரன்’ நாயகன் TTF வாசன் மனு தள்ளுபடி.; நீதிபதி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 17ம் தேதி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிகால் டிடிஎஃப் வாசன்.

எனவே அவர் மீது பொது மக்களுக்கு இடையூராகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனையடுத்து மாவட்ட நீதிபதி செம்மல், டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கூடுதல் தகவல்..

சமீபத்தில் தான் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார் டிடிஎஃப் வாசன்.

அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில் அவர் விபத்தில் சிக்கியது.. தற்போது கைதாகி சிறையில் இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் படம் தொடருமா? என்பது கேள்விக்குறிதான்.

TTF Vasan arrest and Court order news

‘சந்திரமுகி 2’ ரிலீஸை முன்னிட்டு ரஜினி காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ ரிலீஸை முன்னிட்டு ரஜினி காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் ‘சந்திரமுகி’.

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிக்க பி வாசு இயக்கிருந்தார்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது.

தற்போது 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரே தொடர்பு பி வாசு மற்றும் வடிவேலு தான்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கேரக்டர்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தினால் அதன் ரிலீஸ் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Ragava Lawrence got blessing from Rajinikanth

OFFICIAL ரஜினியை அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்

OFFICIAL ரஜினியை அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்தை இயக்கியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்திற்கு பிறகு அண்ணாத்த & ஜெயிலர் என 2 ரஜினி படங்கள் வெளியாகி விட்டன.

ஆனால் முருகதாஸுக்கு எந்த பட வாய்ப்பு வரவில்லை. விஜய் படத்தை இயக்குவார் முருகதாஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவது உறுதியாகிவிட்டது. அதன் விவரம் வருமாறு…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார்.

எனவே காஷ்மீரில் இதன் படபிடிப்பு நடந்து வந்தது. இதில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

இதன் பின்னர் சிவகார்த்திகேயன் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்..

“எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Official Sivakarthikeyan and Murugadoss teamsup for first time

பாலாவின் வணங்கான் லுக்.; கையில் பிள்ளையார் – பெரியார் சிலைகளுடன் அருண்விஜய்

பாலாவின் வணங்கான் லுக்.; கையில் பிள்ளையார் – பெரியார் சிலைகளுடன் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டுபவர் பாலா. சிறந்த நடிகர்களாக போற்றப்படும் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், சசிகுமார் உள்ளிட்ட பல நடிகர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் பாலா என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆனால் சமீப காலமாக பாலாவின் படங்கள் வெளியாகவில்லை. விக்ரமின் மகன் துருவ் நடித்த வர்மா என்ற படத்தை இயக்கியிருந்தார் பாலா.

ஆனால் அந்தப் படம் பிடிக்கவில்லை என ரிலீஸ் செய்ய மறுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம்.

இதன் பின்னர் பாலா & சூர்யா கூட்டணி இணைந்தது. ‘வணங்கான்’ என்ற படத்தின் சூட்டிங் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்படவே படத்திலிருந்து விலகினார் சூர்யா.

ஆனாலும் வணங்கான் படம் கைவிடப்படாது என அறிவித்திருந்தார் பாலா.

அதன் பின்னர் அருண் விஜய் வைத்து படத்தை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 25ஆம் தேதி காலை ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பாலா.

இந்த போஸ்டரில் உடல் முழுக்க சேரும் சகதியுமாக காணப்படுகிறார் அருண் விஜய். அவரது கைகளில் பிள்ளையார் சிலையும் பெரியார் சிலையும் உள்ளது. இது இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது எனலாம்.

இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

வணங்கான்

Vanangaan first look creates huge expectations

More Articles
Follows