தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் மீது தவறு இல்லாதபோதும், ஒரு பெண் முன்னிலையில் பொது இடத்தில் தன்னை நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக பிரேம்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இதனால், சூர்யாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இதனிடையில் அச்சம்பவத்தில் இடம் பெற்ற பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி தன் ட்விட்டர் பக்கத்தில்
”என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞர்களிடம், தன்னை காப்பற்றியதற்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நிறைய பின்னணி சம்பவங்கள் நடந்திருந்தாலும் தற்போது சூர்யாவும், பிரேம்குமாரும் சமரசம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம் பிரேம்குமார்.
தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.