தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்பார் படம் வெற்றி பெற வில்லை என்பதால் வருத்தப்படுகிறார் ரஜினிகாந்த்.
ரசிகர்களிடம் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒருவேளை தர்பார் பட பிரச்சினை காரணமாக வருத்தம் தெரிவித்திருக்கலாம்.
இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வருவேன் என்றார். ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை.
டெல்லியில் 47 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த இழப்புக்கு இந்துத்துவா அமைப்பே காரணம்.
ஆனால் அதை திசை திருப்பும் வகையில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி விட்டுள்ளனர்.்
இவ்வாறு முத்தரசன் கூறினார்.