மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த படம் நண்பன்.

இதில் சத்யன் காமெடி வேடத்தில் கலக்கியிருந்தார்.

மேலும் துப்பாக்கி படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடிக்கவிருக்கிறார் இளைய தளபதி.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் சத்யன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.

மேலும் அந்த அமைப்பில் தொடர்புடையதாக கூறப்படும் த்ரிஷா, விஷால் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலக வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.

த்ரிஷாவுக்கு அதில் தொடர்பில்லை என அவரது தாயார் உமா தெரிவித்த இருந்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது, இது தொடர்பாக விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

“மறுபடியும் என்னை பற்றி தவறான செய்தி இணையங்களில் பரவி வருகிறது.

மாணவர்கள் மீது தடியடி சரிதான் என்று நான் கூறியதாக அந்த செய்தி வெளியாகியுள்ளது.

தயவு செய்து சொல்கிறேன் என்னை பழி வாங்க இது நேரம் அல்ல, அப்படி என்னை பழி வாங்க வேண்டுமா அதற்கு வேறு தளம் தேடுங்கள்.

இந்த மாணவர்கள் போராட்ட விஷயத்தில் வேண்டாம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Dont take revenge on me in students protest issue says Vishal

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassanஜல்லிக்கட்டு போராட்டம், போலீஸ் தடியடி உள்ளிட்டவைகளை பற்றி தன் கருத்தை தெரிவிக்க தற்போது கமல் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது….

நம் இளைஞர்கள், மாணவர்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தினார்கள்.

அவர்களுக்கு தலைவன் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் ஒரே குரல்தான். அது ஒரே குரலாக ஒலித்தாலே போதும்.

சிலர் இன்றும் (ஜனவரி 24, 2017) மெரினாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம்.

அதற்காக அவர்களை சதிகாரர்கள், விஷமிகள் என கேவலப்படுத்தாதீர்கள்.

அதுபோல் தமிழக அரசும் தன்னால் முயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்.

இன்னும் சிறப்பாக அவர்கள் செய்திருந்தால் சந்தோஷம்.

அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என கூறை சொல்லாதீர்கள்.

வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளை பார்த்த போது, இது காவல்துறையாக இருக்காது என்றே நம்பினேன்.

என்னைப்போல் சில நடிகர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக விளக்கம் வரும் என நம்புகிறேன்.

இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், நாம் அவர்களால் பாதிக்கப்படக்கூடும் என பயம் கொள்வான்” என்று பேசினார்.

மேலும் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடையும் நிலையில், திடீரென கலவரமானது.

இது தொடர்பாக தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் கூறிவருவதாவது…

ஜல்லிக்கட்டை தடை செய்ய Peta சொல்வதால், நாம் பீட்டாவை தடை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம்.

ஆனால், அதில் சிலவிதிமுறைகளை மாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் கார்களில் அடிப்பட்டு நாய்கள் கொல்லப்படுகின்றன. அதற்காகவும் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

கார்களில் மனிதர்கள் கூட அடிப்படுகிறார்கள். அதற்காக காரை தடை செய்ய முடியுமா?

சில இடங்களில் ஸ்பீட் பிரேக் மற்றும் ஸ்பீட் லிமிட் செய்வது போல் ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஆனால் மாட்டை சாப்பிடுவதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவர்கள் இல்லையென்றால் நாளை வேறு ஒரு அமைப்பு வரலாம். அதற்காக எல்லாம் அமைப்புகளை தடை செய்ய சொல்ல முடியாது.

அவர்கள் அமைப்பில் சில விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.” என்று பேசினார்.

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இன்று போராட்டத்தை கைவிட கூறிய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய அமைதி போராட்டத்தை தமிழக மக்கள் அனைவரும் இணைந்து நடத்தியுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டம் வெற்றி மாலை சூடும் வேளையில், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு C22V7Q1UkAE7hppஉறுதி கூறியபிறகு அதற்கு கெளரவம் கொடுத்து அவர்கள் கூறிய நாள்கள் வரை அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.

சில சமூக விரோதிகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புகும் முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhaasanஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என தமிழக இளைஞர்கள் ஒரு வாரம் போராடி வந்தனர்.

இன்று காலை போலீஸ் தடியடி செய்து கலைத்தனர்.

இதனால் தமிழகம் போர்களம் போல் காட்சியளித்து வருகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து கமல் கூறியுள்ளதாவது…

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது.

இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.

அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன்.

அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.

அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்.

என்று கமல் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows