தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான படம் ‘சித்தா’… – சசி

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான படம் ‘சித்தா’… – சசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது இயக்குநர் சசி பேசுகையில்…

“’சித்தா’ படத்தில் ஒரு காட்சி வரும். தூய்மைப் பணியாளர்களைத் தவறாக பேசும் ஒருவரை கதாநாயகி அடிப்பது போல. அந்தக் காட்சியில் கண்கலங்கி விட்டேன். இதுபோல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அருணின் ஃபிலிம் லாங்குவேஜ் சிறப்பாக வந்துள்ளது. எமோஷனலான, எண்டர்டெய்னிங்கான படம் இது. கிளைமாக்ஸை இதுபோல எடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது அருணுக்கு உள்ளது. தயாரிப்பாளராக சித்தார்த்தும் அந்த இடத்தை அருணுக்குக் கொடுத்துள்ளார்.

இதன் வெற்றி என் படத்தின் வெற்றி போல சந்தோஷமாக உள்ளது. அதைக் கொண்டாடவே இங்கு வந்தேன். தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான படம் கிடைத்துள்ளது”.

Chithha movie is one of best Tamil movie says Sasi

20 வருட உழைப்பில் ‘பிச்சைக்காரனுக்குப் பிறகு சித்தா’ கொடுத்த சிறப்பு… – தர்ஷன்

20 வருட உழைப்பில் ‘பிச்சைக்காரனுக்குப் பிறகு சித்தா’ கொடுத்த சிறப்பு… – தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.

நடிகர் தர்ஷன் பேசியதாவது…

“இந்தப் படத்திற்கு வரவேற்பு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. படத்தைத் தயாரித்து நடித்துள்ள சித்தார்த் சாருக்கும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. சித்தார்த் சார் படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் அருண் சார்தான். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த கனமான கதாபாத்திரத்தை அருண் சார் கொடுத்துள்ளார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன்.

20 வருடங்கள் வாய்ப்புத் தேடி அலைந்த எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் சசி சாரும் அருமையான கதாபாத்திரம் கொடுத்தார். பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். மிக்க நன்றி!” என்றார்.

நடிகர் பாலாஜி… “ என்னுடைய முதல் படம் இது என்பது பெருமையாக உள்ளது. இயக்குநர் அருண் சார், சித்தார்த் சார், ராஜேஷ் சார் இவர்களுக்கு நன்றி” என்றார்.

நடிகை அஞ்சலி நாயர் பேசியதாவது…

“இந்த படம் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி. சித்தார்த் சாருடன் எளிமையாக நடித்தோம்.

‘த்ரிஷ்யம்’ படம் பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு ஜித்து ஜோசப் சாருக்கு நன்றி.

இந்த படம் ஆரம்பித்த சில நாட்கள் நடித்த பின்பு எனக்கு இரண்டாவது குழந்தை உருவானது. ஏழு மாதங்கள் வரை படத்தில் நடித்தேன்” என்றார்.

Chithha villain Darshan emotions at success meet

‘சித்தா’ படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை.; சிலிர்ப்பில் பாடலாசிரியர் விவேக்

‘சித்தா’ படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை.; சிலிர்ப்பில் பாடலாசிரியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…

“என் அருண் என்று இயக்குநரை சொந்தம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

இதைவிட சிறந்த நடிப்பை கொடுக்க முடியுமா என சொல்லும் அளவிற்கு சித்தார்த் நடித்துள்ளார். இது போன்ற ஒரு கதையை நம்பி தயாரித்துள்ள சித்தாரத்துக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். என்னாலான சின்ன சமர்ப்பணமாக இந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை” என்றார்.

கலை இயக்குநர் பாலச்சந்திரன் பேசியதாவது…

“நல்ல படமாக உருவான இதை வெற்றி படமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி!”

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்…

“இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். அந்த திருப்தி எனக்கு உள்ளது. படத்தில் உள்ள பேருந்து காட்சி, கிளைமாக்ஸில் நிமிஷா பேசும் காட்சிகளுக்கு எல்லாம் சிறப்பான இசை வேண்டும் என சித்தார்த் ஆர்வத்தோடு கேட்டார். அது பார்வையாளர்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!” என்றார்.

நடிகை சிந்துஜா விஜி…

” ஒரு நல்ல படத்தில் வேலை செய்துள்ள திருப்தி கிடைத்துள்ளது. இந்த படத்தில் பல இடத்தில் சித்தார்த் என்னை அழ வைத்துள்ளார்”. என்றார்.

நடிகர் பிரணவ்… ” இப்படியான ஒரு நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்களுக்கும் நன்றி”.

ஆக்டிங் கன்சல்டண்ட் ராஜேஷ்…

“ஆக்டிங் கன்சல்டன்ட் என்பது ஒன்றுமில்லை. படத்திற்கு முன்பு 40 நாள் ஒர்க் ஷாப் அனைவருக்கும் வைத்தோம். இதற்கு காரணம் சித்தார்த் சார்தான். எல்லா நடிகர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுக்க சுதந்திரம் கொடுத்த இயக்குநருக்கும் சித்தார்த்துக்கும் நன்றி”.

Lyricist Vivek emotional speech at Chithha success meet

ரஜினியை சந்தித்த 2018 படக்குழுவினர்.; என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்.?

ரஜினியை சந்தித்த 2018 படக்குழுவினர்.; என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ படத்தில் படப்பிடிப்பிற்காக கேரளாவில் தங்கி இருக்கிறார்.

ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினியை சந்தித்துள்ளனர் 2018 படக்குழுவினர்.

ரஜினிகாந்த்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

ரஜினிகாந்த்

“என்ன ஒரு அற்புதமான படம் ஜூட். எப்படி படமாக்கினீர்கள்? அட்டகாசமான படைப்பு.

ஆஸ்கர் விருதுக்கான ஆசீர்வாத்ததை உங்களிடமிருந்து பெற்றோம். “போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்” என நீங்கள் (ரஜினி) சொன்னது மறக்க முடியாது. மறக்கமுடியாத வாய்ப்பு. இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்த சௌந்தர்யாவுக்கு நன்றி”

என பதிவிட்டுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.

ரஜினிகாந்த்

2018 movie team met Rajini and got blessing

ரஜினியை வரவேற்கும் மலையாளிகள்.; எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்.; என்ன நடக்கிறது.?

ரஜினியை வரவேற்கும் மலையாளிகள்.; எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள்.; என்ன நடக்கிறது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

பொதுவாகவே ரஜினி படங்கள் தொடங்கும் சமயத்தில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டும் இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்

இதன் படப்பிடிப்பு கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் பங்கேற்ற புகைப்படங்கள் கேரளாவை மட்டுமல்ல இந்தியாவை கலக்கி வருகிறது.

இந்த புகைப்படங்களில் ரஜினி இளமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி செல்லும் வழி எங்கும் ரசிகர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்த வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு புறம் ரஜினிக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ரஜினிக்கு என்பதை விட இந்த படத்தின் இயக்குனர் ஞானவேலுக்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது எனலாம்.

அதற்கான காரணம் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ படத்தில் வன்னியருக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.

ரஜினிகாந்த்

அதன் பிறகு தற்போது தான் ஞானவேல் தனது 2வது படத்தை இயக்கி வருகிறார்.

எனவே *வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த்* ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் ரஜினிகாந்த் இதை சமாளித்து விடுவார் என்பது நமக்குத் தெரிந்த செய்திதான். அவர் பார்க்காத எதிர்ப்பு இல்லை..

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் லைக்கா நிறுவன தமிழக சிஇஓ ஆக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பாமக. ஜி.கே.மணியின் மகன் ஜி கே எம் தமிழ் குமரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வன்னியர் சமுதாய எதிர்ப்பை லைக்கா நிறுவனம் சமாளித்து விடும் என நிச்சயமாக நம்பலாம்.

ரஜினிகாந்த்

Thalaivar 170 expectation and opposition

விஜய் பேசிய தே—பையா..; அபூர்வ ராகங்களிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. – திண்டுக்கல் லியோனி

விஜய் பேசிய தே—பையா..; அபூர்வ ராகங்களிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. – திண்டுக்கல் லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டப்பாங்குத்து’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் திண்டுக்கல் ஐ லியோனி.

இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சி முடித்து விட்டு சென்ற போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் டிரைலரில் விஜய் பேசிய அந்த தே பையா என்ற கெட்ட வார்த்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசும்போது..

“அபூர்வ ராகங்கள் தொடங்கி இது போன்ற பல கெட்ட வார்த்தைகள் பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு காட்சியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் மீது சேரும் சகதியும் தெறிக்கும். அப்போது கமல் அந்த காட்சியில் இருப்பார். அப்போது இந்த வார்த்தை வரும்.

பெரும்பாலும் கிராமத்து படங்களிலும் வட சென்னை போன்ற படங்களிலும் இது போன்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர். முக்கியமாக நிறைய பெண் ரசிகைகள் உள்ளனர். அப்படி இருக்கும்போது விஜய் அந்த கெட்ட வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து என்றார் திண்டுக்கல் ஐ லியோனி.

Dindigul Leoni speech about Leo Trailer Dialogue

More Articles
Follows