தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயக்கண்ணாடி’, ‘பொக்கிஷம்’ என தமிழ் ரசிகர்களை கவர்ந்த படங்களை இயக்கியவர் சேரன்.
இதில் ஆட்டோகிராப் படம் முதல் அவரே நாயகனாக நடித்து இயக்கி வந்தார்.
அதன்பின்னர் மற்ற இயக்குனர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ராமன் தேசிய சீதை’, ‘யுத்தம் செய்’, ‘முரண்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இதன் பின்ன்ர் சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் ஆண்டு ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார்.
அப்படத்தை வெளியிட உச்சக்கட்ட சிரமம் அவருக்கு ஏற்ப்பட்டது.
இதனால் C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்ன்ர ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை சேரன் இயக்குவதாக அறிவித்துள்ளார்.
இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்க, காவ்யா சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதில் நாயகியின் அண்ணனாக சேரன் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைக்க, பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இப்பட ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
இந்த விழாவில் சேரன் பேசியதாவது…
கஷ்ட காலங்களில் கூட நிற்பதாகவும் சரி, திரைப்படத்துக்காக முன்னெடுத்தும் சரி நடிகர் முரளி ஒரு சிறந்த மனிதர். அவருக்கு அப்புறம் நான் பார்த்த, மிகச் சிறந்த மனிதர் விஜய் சேதுபதி தான்.
விரைவில் நாங்கள் இருவரும் படம் பண்ணப் போகிறோம்.” என பேசினார்.