தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் தியா இயக்கி நடித்திருக்கும் கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சேரன் பேசும்போது, இணையங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதற்கு இலங்கை தமிழர்களும் ஒரு காரணம் என பேசியிருந்தார்.
இதனால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது…
சேரன் அப்படிப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.