தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மரகத நாணயம் படத்தை தயாரித்திருந்தது ஆக்ஸஸ் பிலிம்ஸ்.
தற்போது அருள்நிதியின் நடிப்பில் உருவாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ராட்சஸன்’ ஆகிய படங்களை இந்நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார் டில்லி பாபு.
இதனையடுத்து மீண்டும் அருள்நிதி நடிக்க ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக இந்த நிறுவனம் தன் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இப்படத்தை கரு.பழனியப்பன் இயக்கவிருக்கிறாராம்.
இது அரசியலை நையாண்டி செய்யும் கதைக்களம் எனவும் தெரியவந்துள்ளது.
பொதுவாகவே இயக்குனர் கரு. பழனியப்பனின் பேச்சில் சமூக அக்கறை கொண்ட பார்வை இருக்கும்.
எனவே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Arulnithi teams up with Karu Palaniyappan for Political script