இரவுக்கு ஆயிரம் கண்கள் பட சாட்டிலைட் உரிமையை பெற்ற சன்டிவி

இரவுக்கு ஆயிரம் கண்கள் பட சாட்டிலைட் உரிமையை பெற்ற சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iakஅருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் அருள்நிதி உடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.

அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகி உள்ளதாம்.

அண்மையில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை விஜய் திருப்திபடுத்திடுவார்… : ரஞ்சித்

தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை விஜய் திருப்திபடுத்திடுவார்… : ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay at nota press meetஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிட்டுள்ளனர்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட காலா டைரக்டர் ரஞ்சித் பேசியதாவது….

ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது.

அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார்.

ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்திடுவார் என நம்புகிறேன்.” என்று பேசினார்.

சொத்துக்கள் அனைத்தையும் சஞ்சய்தத்துக்கு உயில் எழுதிய ரசிகை

சொத்துக்கள் அனைத்தையும் சஞ்சய்தத்துக்கு உயில் எழுதிய ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanjay dutt fanஇந்திய சினிமாவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என்பார்கள்.

அவர்கள் நடிகர்களுக்காக எதையும் செய்வார்கள் என்ற பேச்சு பல காலமாகவே இருந்து வருகிறது.

நடிகருக்கு பேனர் வைப்பது, கட்அவுட் பாலாபிஷேகம் செய்வது, ஏன் நடிகரின் பெயரில் அன்னதானம் செய்வது, அவருக்காக தேர் இழுப்பது என்று பல செய்திகளை கேட்டிருப்போம்.

சிலர் தெய்வமாக மதித்து அவருக்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிகை குஷ்பூக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளனர்.

தற்போது கோலிவுட்டைப் போல் பாலிவுட்டில் இப்படியொரு ரசிகை இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஹரிச்சந்திரா திரிபாதி என்ற பெண் ரசிகை ஒருவர் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

தனது நோய்க்காக கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார்.

அந்த பெண்ணின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, ‘தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் இருக்கும் தனது பொருட்கள் அனைத்தையும் நடிகர் சஞ்சய்தத்துக்கே கொடுக்க வேண்டும்’ என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.

ரசிகையின் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி சஞ்சய்தத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய்தத் அதை ஏற்க மறுத்த அனைத்தையும் அவருடைய குடும்பத்தாருக்கே கொடுக்க ஏற்பாடு செய்து விட்டாராம்.

மார்ச் 16 முதல் சினிமா சூட்டிங்கும் நடத்தக்கூடாது; விஷால் உத்தரவு

மார்ச் 16 முதல் சினிமா சூட்டிங்கும் நடத்தக்கூடாது; விஷால் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே திரையரங்குகள் வெறிச்சோடிக் காணக் கிடக்கின்றன.

புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஹிட்டான பழைய படங்களை சில தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்குகளுக்கு சுமார் 12 முதல்15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

இப்படி அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளால் திரையுலகம் முழுவதும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..?

கமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Gautham Menonகௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதனையடுத்து அவர் தான் இயக்கி ஹிட்டாக்கிய ஒரு படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம்.
அந்த பட்டியலில் தற்போது 3 படங்கள் உள்ளது.

1. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு

2. சூர்யா நடித்த காக்க காக்க

3. அஜித் நடித்த என்னை அறிந்தால்

இதில் எந்த நாயகன் முதலில் ஓகே சொல்கிறாரோ அவர் படத்தை இயக்குவாராம் கௌதம்மேன்ன்.

அனேகமாக அவர் சூர்யாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜோதிகா இடத்தில் நானா..? ஸாரி முடியாது..; அனுஷ்கா

ஜோதிகா இடத்தில் நானா..? ஸாரி முடியாது..; அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika and anushkaபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா ஆகியோர் நடித்த படம் நாச்சியார்.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

எனவே இதன் தெலுங்கு உரிமையை கல்பனா என்பவர் வாங்கியிருந்தார்.

படத்தின் முக்கிய அம்சமே ஜோதிகாதான் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க அனுஷ்காவை அனுகியுள்ளார்.

ஆனால் அவர் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் 6 மாதத்திற்கு கால்ஷீட் தர முடியாது என கூறிவிட்டாராம்.

இதனால் நாச்சியார் கேரக்டரில் பிரபல நடிகை யாராவது நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

More Articles
Follows