தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’.
அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் அருள்நிதி உடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.
அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகி உள்ளதாம்.
அண்மையில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.