JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

JUST IN தீபாவளி ஆட்டத்திற்கு ரஜினி ரசிகர்களை ரெடியாக சொல்லும் ‘அண்ணாத்த’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annattheசிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த அவருடைய 168-வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனா்.

ஒளிப்பதிவை வெற்றி் கவனிக்க இசை பணியை இமான் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் 2020 டிசம்பர் 2ஆம் வாரத்தில் சூட்டிங் தொடங்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள நடிகா் ரஜினிகாந்த், தனி விமான மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அப்போது விமானத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர் ஹைதராபாத் சென்ற ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

2021 ஜனவரி மாதத்துக்குள் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அண்ணாத்த சூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா என உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினியும் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

எனவே ‘அண்ணாத்த’ படம் டிராப் என வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து ட்வீட் போட்டுள்ளனர்.

அதில் 2021 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் ரிலீஸ் (வியாழன்) என அறிவித்துள்ளனர்.

Annaatthe release date announced

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

என்னை கேள்வி கேட்கக்கூடாது.. மீறினால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்து விடுவேன்..; காமெடியன் செந்திலாக மாறிய சீமான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanமதுரை ஒத்தக்கடை பகுதியில் தன் கட்சி சார்பான தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் சீமான்.

அப்போது அவர் பேசியதாவது…

நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி.

உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும். நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும்.

நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது.

வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன்” எனப் பேசினார் சீமான்.

சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் கிரீஸ் டப்பாவை கவுண்டமணி மீது எட்டி உதைப்பார் செந்தில் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சீமானின் இந்த காமெடியைப் மையப்படுத்தி நிறைய மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகிறது.

Netizen criticise seemans today speech

விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை சொல்லும் RRR..; தசரா பண்டிகைக்கு ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR Movieஇந்தியா முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது.

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா…

“RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம்.

தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Director SS Rajamouli’s RRR set to release on October 13

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

‘குட்டிப்புலி’ சரவண சக்தி் இயக்கத்தில் இணையும் விமல் & தன்யா ஹோப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tanya Hope பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி.

இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் பைட் கொரியாகிராபராக பங்கேற்கிறார்.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

நடிகர்கள்

நாயகன் – விமல்

நாயகி – தன்யாஹோப்

மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது

தொழில்நுட்பகலைஞர்கள்

தயாரிப்பு: MIK Productions (P) Ltd
P. இளையராஜா

இயக்கம் : குட்டிப்புலி சரவண சக்தி

ஒளிப்பதிவு: வைட் ஆங்கிள் ரவிசங்கர்

எடிட்டர் : கோபி கிருஷ்ணா

ஸ்டண்ட்: கனல் கண்ணன்

ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார்

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா

புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம்

மக்கள் தொடர்பு : P. தியாகராஜன்

Vemal and Tanya hope joins for new film

சரக்கடிக்கல.. அடிச்சா சிக்ஸ் பேக் வராது…; விஷ்ணு விஷால் நீண்ட விளக்கம்

சரக்கடிக்கல.. அடிச்சா சிக்ஸ் பேக் வராது…; விஷ்ணு விஷால் நீண்ட விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூரி-யின் நில விவகார மோசடியில் ஏற்கெனவே விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோரது பெயர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தற்போது விஷ்ணு விஷால் மற்றொரு பிரச்சினை சிக்கியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…
விஷ்ணு விஷால் மீது அவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தினமும் இரவு மது குடித்துவிட்டு சத்தமாக பாட்டு வைத்து ஆட்டம் போடுவதாக கூறப்பட்டது.

இதனால் தங்களது தூக்கம் கெடுவதாகவும், ஏன் எனக் கேட்பவர்களை விஷ்ணு தகாத வார்த்தையில் பேசுவதாகவும் அதில் தெரிவித்திருந்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்…
” பல நாட்கள் மது அருந்தாமல் இருந்து கடுமையான டயட் இருந்தால் மட்டுமே சிக்ஸ் பேக் சாத்தியமாகும். தினமும் குடிப்பவர்களுக்கு உடனடியாக சிக்ஸ் பேக் வராது. இதுகூட தெரியாமல் சிலர் பிதற்றுகிறார்கள்”, என பதிவிட்டிருந்தார்.

இப்போது நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில், தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி என் வீட்டில் தங்காமல் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். நான் தயாரிக்கும் எப்ஐஆர் படம் தொடர்பாக தினமும் நான் பலரை சந்திக்கிறேன். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறேன். நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் நேற்று முதல் என் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

என்னை சந்திக்க வந்த எனது பணியாளர்கள், விருந்தினர்களிடம் வீட்டு உரிமையாளர் தான் தவறாக நடந்தார். எனது படத்தின் ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளை நான் வசிக்கும் பிளாட்டில் கொண்டாடினோம். இந்த பார்டியில் ஆல்கஹால் உபயோகித்தது உண்மை தான். மற்றபடி அங்கு எந்த தவறும் நடக்கவில்லை.

வீட்டு உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசினார். அதனால் நானும் கோபப்பட்டு அப்படி பேசினேன். போலீஸிற்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று, அதனால் அவர்கள் சென்றுவிட்டனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீடியாக்களால் நான் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன்.

அந்த வீடியோவில் வீட்டு உரிமையாளரிடம் நான் கோபப்பட்டு பேசும் வீடியோ தான் வந்தது. அவர் தவறான வார்த்தைகளை பேசியதால் தான் நான் அப்படி பேசினேன். எந்த ஒரு மனிதனும் கெட்ட வார்த்தையை சகித்து கொள்ள மாட்டான்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நான் விளக்கம் கொடுப்பது கிடையாது. ஆனால் என்னை குடிகாரன், கூத்தாடி என்று தவறாக சித்தரிப்பதையும், நான் சார்ந்த சினிமா துறையை தவறாக காண்பிப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது.

என் வீட்டு உரிமையாளர் எப்படி நடந்து கொண்டார் என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். என் அப்பா வயது உடைய ஒருவரையும், அவரது குடும்பத்தையும் தவறாக காண்பிக்க நான் விரும்பவில்லை.

நான் அவரின் மகனிடம் பேசிவிட்டேன். கடைசியாக, என் படப்பிடிப்பு முடிந்ததும், இந்த வீட்டை விட்டு காலி செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் இப்படி செய்வதால் என்னை பலவீனமானவன் என்று நினைக்க வேண்டாம்.

தேவையற்ற விஷயங்களுக்காக நான் சண்டை போட விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்காக நான் நிறைய உழைக்க வேண்டி உள்ளது.

Vishnu Vishal statement about his apartment party issue

6 pack dont suddenly appear if you drink everyday..
You got to be on strict diet and off alcohol completely for a long time..
Some people dont understand the LOGIC…

அந்தாதுன் ரீமேக்… : தமிழில் பிரசாந்த்.. மலையாளத்தில் ப்ருத்விராஜ்… தெலுங்கில் நிதின்

அந்தாதுன் ரீமேக்… : தமிழில் பிரசாந்த்.. மலையாளத்தில் ப்ருத்விராஜ்… தெலுங்கில் நிதின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.

பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.

ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இந்த நிலையில் மலையாளத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.

ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.

Andhadhun 3 language remake updates

More Articles
Follows