தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் காலா படத்தில் தாராவி பகுதி ஒரு மையக் கருவாக பயன்படுத்தப்பட்டு இருந்தது.
அதில் புயல் சாருமதி என்னும் போராளி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல்.
இவரது அண்மை பேட்டியில்…
‘தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு… எல்லாருடன் நடிக்க ஆசைத்தான். முக்கியமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும்.
அவருடைய படங்களை நான் இதுவரை பாக்கல. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
எனவே அவருடன் நடிக்க விருப்பம்” என்று கூறி இருக்கிறார். எனத் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி பாட்டீல் இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.