தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கர் பச்சானின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.
தொடர்ந்து ‘கற்றது தமிழ்’ படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் இவர்.
மேலும் விஜய் உடன் சிவகாசி சூர்யாவுடன் கஜினி உள்ளிட்ட பல படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்
குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா.
தன்னுடைய டீனேஜ் வயதில் கதையின் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பள்ளிப் பருவத்திலே’, ‘மாயநதி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்தப் படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
அழகும் திறமையும் உள்ள தமிழ் நடிகைகள் அரிது. அதில் வெண்பா முன்னணியில் இருக்கிறார் என பத்திரிகைகள் பாராட்டி இருந்தன.
கடந்த வருடம் 2021ல் டிசம்பர் மாதம் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தார்.
விரைவில் வெளியாகியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சீரியலில் நடிக்க உள்ளதாகவும் சீரியல் என்ட்ரி அவருக்கு 2வது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..” என தன்னை ஒரு முன்னணி ஆப் நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை கண்டித்து நடிகை வெண்பா தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்..
“நான் இப்போதும் சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு சீரியல் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நான் அதிலும் நடிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை.
உண்மை தெரிந்துக் கொண்டு செய்தியை பதிவிடுங்கள். இது போன்ற தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என நடிகை வெண்பா பதிவிட்டுள்ளார்.
Hi @DailyhuntApp , I have not received any serial offer, have not signed any serial yet, currently acting only in films, not yet started my 2nd innings.
So don’t spread fake news without knowing the truth. Thanks
https://t.co/ZYt6Ko0n3T