தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், ராஜ சூர்யா, வெண்பா, அணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரைஹ்னா பேசுகையில்….
” பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு நான் செல்வதில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தான் செல்கிறேன். ஏனெனில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு என்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன்.
சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்தால் போதும். அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, எழில் போன்றவர்கள் இங்கு வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றால் இது தான் ஆரோக்கியமான சூழல் என கருதுகிறேன்.
இசையப்பாளர் ஜான் பீட்டர் இசையமைத்த இரண்டு பாடல்கள் இங்கு திரையிடப்பட்டது. இரண்டும் அற்புதமாக இருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அவர் இதில் பணியாற்றி இருப்பதால் இந்த படம் நேர்த்தியாக உருவாகி இருக்கும். இரண்டு பாடல் காட்சிகளிலும் அவருடைய உழைப்பு தெரிந்தது. இந்தப் படம் அற்புதமான கதையை கொண்டிருக்கிறது.
ஒருவன் குடித்துவிட்டு எந்த அளவிற்கு பிரச்சனையை செய்ய முடியும். குடித்த பிறகு.. அவனுடைய மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது… இதனால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை… இயக்குநர் படமாக்கி இருப்பதால், இதனை பாராட்டுவதற்காகவே இங்கு வருகை தந்திருக்கிறேன். இதற்காக பட குழுவினரை வாழ்த்துகிறேன்.
பொதுவாகவே சமூகத்துக்கு ஏதேனும் நல்லது நடக்கிறது என்றால்… உடனே நான் அங்கு சென்று விடுவேன். இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகனான ஸ்ரீக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்”.என்றார்.
If any good thing going to happen i will be there says Rahaina