அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

கோலிவுட்டில் சிறு வயது முதலே நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒரு சிலர் மட்டுமே ஜெய்ப்பது உண்டு.

கமல் ஸ்ரீதேவி விஜய் மீனா சிம்பு உள்ளிட்டவர்கள் வரிசையில் இணைந்தவர் தான் நடிகை வெண்பா.

சிறுவயதில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, கற்றது தமிழ் கஜினி சிவகாசி, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வளர்ந்து குமரியான பின்னர் காதல் கசக்குதையா, பள்ளிப் பருவத்திலே, மாய நதி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கேரக்டரில் வெண்பா நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது கைவசம் தற்போது 5-6 படங்கள் உள்ளன.. இதில் மூன்று படங்களுக்கு அ என்ற எழுத்தில் தலைப்பு இடம் பெற்றுள்ளது.

முதல் படம் ‘அக்கரன்’..

அருண் பிரசாத் இயக்கி வரும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.

இரண்டாவது படம் ‘அஸ்திரம்’..

அரவிந்த ராஜகோபால் இயக்கி வரும் இதில் ஷாம் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் வெண்பா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படம் ‘போர்த் தொழில்’ பாணியில் ஆன திரில்லர் கதை என கூறப்படுகிறது.

மூன்றாவது படம் அத்திப்பூ

எஸ் ஏ செல்வகுமார் என்பவர் இயக்கியவர் இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.. இவர்களுடன் சரவணன் சிங்கம்புலி, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

நடிகர் அஜித் ‘வி’ செண்டிமெண்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.. விஸ்வாசம் விவேகம் வீரம் வலிமை தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி உள்ளிட்ட அனைத்து படங்களும் ஆங்கில எழுத்தில் வி என்ற முதல் எழுத்திலேயே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Venba movie titles starts with A sentiment

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது நீட் தேர்வுக்கு எதிரான படமா, நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது எங்களுக்கு தெரியாது பட துவக்க விழா!

சாய் ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சூர்யா சுப்ரமணியன் தயாரித்து இயக்கும் படம் ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’. நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் நீட் தேர்வின் உண்மை பின்னணி என்ன? போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 7 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்…

“’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்ற தலைப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, அந்த தலைப்பின் அருகே இருக்கும் குறியீடுகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பும் என்று புரிய வைக்கிறது. ஆனால், தணிக்கை குழுவில் சிக்காதவாறு காட்சிகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், நீட் தேர்வை எதிர்த்து போராடும் மனநிலையை நாம் கடந்து வந்துவிட்டோம் என்று தான் நினைக்கிறேன். எனவே அதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், இந்த படத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இதில் நாயகன், நாயகன் யார்? என்பது எங்களுக்கு தெரியாது, இயக்குநரும் எங்களிடம் சொல்லவில்லை. இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எனவே, முகம் தெரியாத அந்த நாயகன், நாயகி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்…

“இந்த படத்திற்கு ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்று தலைப்பு வைத்திருக்கும் சூர்யா சுப்ரமணியம் கேப்ஷனாக NEET என்று போட்டிருக்கும் போதே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பது புரிந்துவிடுகிறது.

அதேபோல் நீட் என்ற ஆங்கில வார்த்தையில் ஒவ்வொரு எழுத்துக்கும் அவர் கொடுத்திருக்கும் விளக்கமும் கவனம் ஈர்க்கிறது. இந்த படத்தின் தலைப்பை வெளியிடுவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள், அதில் மறைந்த அனிதா புகைப்படத்தை காண்பித்தார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், இனி அனிதா போல் யாரும் இறக்க கூடாது.

பொதுவாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், படப்படிப்பில் ஹரியர் வைத்த மாணவர்கள் யாராவது அதுபோன்ற தவறான முடிவை எடுப்பதில்லை. அதற்கு காரணம், கல்லூரி படிக்கும் போது அவர்கள் பக்குவமான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆனால், பள்ளி மாணவர்கள் பக்குவமில்லாத காரணத்தினால் தான் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும், அதற்காக மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல், அனிதா போல் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டால் மட்டும் போதுமானதல்ல, அவர்கள் கொடுக்கும் அந்த பணம் அவரது உயிருக்கு ஈடாகுமா?, அனிதா போல் இனி யாரும் தற்கொலை செய்துக்கொள்ளக் கூடாது. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை தான் அனிதாவின் மரணத்திற்கான சரியான தீர்வாக இருக்கும்.

மருத்துவம் என்பது மிக முக்கியமானது. உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு படிப்பவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கான படிப்பில் சேருபவர்கள் அதற்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காக தான் நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சில விசயங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது சரியாக இருக்கும், ஆனால் சமூகத்தின் பார்வையில் தவறாக இருக்கும். அதேபோல், சமூகத்தின் பார்வையில் சரியாக இருப்பவை, தனிப்பட்ட பார்வையில் தவறாக தெரியும். அதுபோல தான் நீட். சில பார்வைக்கு தவறாக தெரிந்தாலும், சமூகத்தின் பார்வையில் சரியானதாக இருக்கும்.” என்றார்.

விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசுகையில்…

“’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் துவக்க விழா இனிதே நடந்திருக்கிறது. இன்று பலர் நியாயம் தெரியாமல் தான் இருக்கிறார்கள்.

ஆனால், இந்த தலைப்பு வைத்து படம் எடுக்கும் இயக்குநர் சூர்யா சுப்ரமணியம் நியாயமான விசயம் ஒன்றை படத்தில் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கன் போன்றவரக்ள் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள்.

குறிப்பாக கக்கன் ஒரே ஒரு கதர் சட்டையுடன் இருந்தார், இத்தனைக்கும் அவர் போலீஸ் அமைச்சராக இருந்தார். ஆனால், இப்போதைய அரசியல்வாதிகள் ஒரு நாளில் பல சட்டைகளை மாற்றுகிறார்கள், மனைவிமார்களை மாற்றுகிறார்கள். ஊருக்கு ஒரு பொண்டாட்டி என்று வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு நியாயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு படம் வெற்றி பெற இயக்குநர் தான் முக்கியம், அதனால் இயக்குநருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்தியில் ஷாருக்கானின் ஜக்தே இந்தியா என்ற ஒரு படம் பார்த்தேன், மிக சிறப்பான படம். கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே படமாக்கியிருக்கிறார்கள்.

அதனால் அந்த படம் மிக சிறப்பான படமாக இருந்தது. அதேபோன்ற பாணியில் நம்ம ஊர்ல ஒரு படம் வந்தது. அதில் ஹீரோவுக்காக என்னவெல்லாம் செய்தார்கள். கிறிஸ்தவ தேவலாயத்தில் ஹீரோயினுக்கு திருமணம் நடக்க இருக்கும் போது ஹீரோ அங்கே போகிறார். அவரை பார்த்த ஹீரோயின் கண் அடிக்கிறார்.

அந்த ஹீரோவுக்கு ஒரு அப்பா அவர் பெரிய ரவுடி, இப்படி கதையில் என்னவெல்லாம் திணிக்க வேண்டுமோ அதை எல்லாம் திணித்து எடுத்தார்கள். அதனால் அந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படமானது. ஆனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்ட்டத்தை கொடுத்தது.

அதனால் தேவையில்லாத விசயங்களை வைத்து படம் எடுக்க கூடாது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குநராக வளர்ந்துவிட்டார். ஆனால், தனது உதவியாளர்களை இயக்குநராக அறிமுகப்படுத்துவதற்காக படங்கள் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் படங்களை சமீபத்தில் பார்த்தேன், மிக சிறந்த படங்களாக இருக்கிறது. பா.இரஞ்சித் நீ வாழ்க, அப்படி இருக்க வேண்டும். மற்றவர்களை தூக்கி விட வேண்டும்.

இந்த படத்தில் தமிழ் பேசும் பெண்ணை நாயகியாக்கி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தமிழர்கள் இல்லை என்றால் பிறருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தப்பில்லை. மிக சிறந்த கருத்தை சொல்லும் திரைப்படமாக உருவாக உள்ள நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது படத்திற்கும் இயக்குநர் சூர்யா சுப்பிரமணியம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்ரமணியன் பேசுகையில்…

“நிச்சயம் இந்த படத்தில் எதிர்பார்த்த விசயங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத விசயங்கள் இருக்கிறது. படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா வரை காத்திருங்கள்.

சுமார் 30 முதல் 35 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன், அதுவரை எனக்காக காத்திருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் உங்கள் காத்திருப்பு வீண் போகாதபடி சிறந்த படைப்பாக ’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ இருக்கும்.” என்றார்.

கல்யாணசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மலேசியாவை சேர்ந்த இளவரசு இசையமைக்கிறார்.

Rajan Udhayakumar Perarasu launches Neet titled movie

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து பிஸியான நடிகர் லஷ்மணன்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து பிஸியான நடிகர் லஷ்மணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் லஷ்மணன் (Actor R. Lakshmanan)

நடிகர் R. லஷ்மணன் (Actor R. Lakshmanan) வந்தவாசியில் பிறந்தவர். சிறுவயதிலிலே கலைகளின் மேல் ஆர்வம் உண்டு. பாடம் படிப்பதை விட நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்தவர்.

ஜெயகாந்தன் முதல் தற்போதைய ஜெயமோகன் வரை அறிந்தவர். கதை கவிதை கட்டுரை என எல்லா தளங்களிலும் இலக்கிய அறிவை மேம்படுத்தியவர்.

சிறுவயதிலேயே பள்ளி, மேடை நாடகங்களில் நடித்தும் கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி என பல பரிசுகளை பெற்றவர். வீட்டை நிறைக்கும் அளவுக்கும் சிறுவயது முதல் கல்லூரி வரை பல பரிசுகளை பெற்றவர்.

எம்ஜிஆர், சிவாஜி என எல்லா நடிகர்களின் படங்களையும் பார்த்து விடுவார். எல்லோரும் இவரைப் பார்த்தவுடன் விஜயகாந்த் மாதிரி இருக்கே.. சினிமாவுக்குப் போ என சொல்ல ஆரம்பித்தனர்..

ஆனால் இவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார். பெற்றோர் விருப்பத்திற்காக BE Civil Engineer முடித்து வேலை பார்த்துக் கொண்டே சினிமா தேடலை துவங்கினார். பல குறும்படங்களில் நடித்து பாராட்டு வாங்கியதோடு மட்டுமல்லாமல் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.

ஒரே சமயத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார். சுந்தரம் என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். வெளிநாடுகளில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டது.

2026 என்கிற படத்தை Science Fiction படத்தை உருவாக்கி உள்ளார். படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகிறது.

தன் நண்பர்களான Rock & Role Productions சேர்ந்து ‘வாங்கண்ணா வணக்கங்கன்னா..’ என்கிற படத்தை இணை தயாரிப்பாளராக A. P. Productions சார்பில் இவரது மனைவி மணிமேகலை லட்சுமணன் அவர்கள் தயாரித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது.

ராஜ் கண்ணாயிரம் இயக்கத்தில் நடிகர் செந்தில் மற்றும் சுந்தர் மகாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் சுந்தர் மகாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் , ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண், மாதவன், விஷ்ணு ராஜ்,தயாரிப்பு -யாஸ்மீன் பேகம், மணிமேகலை லட்சுமணன்
மக்கள் தொடர்பாளர் – பா. சிவக்குமார்

இவரது படங்கள் குறித்து லஷ்மணன் கூறியதாவது..

‘வாங்கண்ணா வணக்கங்கன்னா..’ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளேன். பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. அடுத்தடுத்த படங்களில் பெரிய திரையில் விரைவில் என்னைப் பார்க்கலாம்” என்றார்.

Actor Lakshmanan speaks about his acting and Production movies

புஜ்ஜிபாபு இயக்கத்தில் இணைந்த ஜோடி ராம்சரண் & ஜான்வி கபூர்

புஜ்ஜிபாபு இயக்கத்தில் இணைந்த ஜோடி ராம்சரண் & ஜான்வி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்சரண் அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.

இன்று அவரது பிறந்தநாள் என்பதால், அவரை பட குழுவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஜோடி ரசிகர்கள் விரும்பும் வகையில் மயக்கும் கெமிஸ்ட்ரியை திரையில் வழங்குவர்.

இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இயக்குநர் புச்சி பாபு ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை கவரும். இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

நடிகர்கள் : ராம்சரண், ஜான்வி கபூர்

தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்கும் நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாறு
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Jhanvikapoor joins with Ramcharan in RC 16

என் படத்தில் உள்ள அனைத்தும் ‘கார்டியன்’ படத்தில் இருக்கும்.. – கே.எஸ். ரவிக்குமார்

என் படத்தில் உள்ள அனைத்தும் ‘கார்டியன்’ படத்தில் இருக்கும்.. – கே.எஸ். ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் படத்தில் உள்ள அனைத்தும் ‘கார்டியன்’ படத்தில் இருக்கும்.. – கே.எஸ். ரவிக்குமார்

ஹன்சிகா நடித்த கார்டியன் மார்ச்-8-ஆம் தேதி ரிலீஸ்

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.

இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.

இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார்.

சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.

S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தில் இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.

இதனிடையே நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது
முதலாவதாக கார்டியன் படக்குழுவினரை வரவேற்று பேசினார் தயாரிப்பாளர் விஜயசந்தர்.
தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களுக்கு நன்றி கூறினார்.

“நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது.

அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். ‘கார்டியன்’ படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன், கொரோனா தொற்று காலம் என்பதால் பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது.

அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர்.

கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார். அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார்.

தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்” என்று கூறினார்.

லால்குடி.N.இளையராஜா

அவருக்கு பிறகு பேசிய,” கலை இயக்குனர் திரு லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது..

“நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன்.

அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத்துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று பேசினார்.

அடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் தியாகராஜன்…

” ஊடகத்துறையினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார். இயக்குனர்களுக்கும், கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும் இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி”, என்றார்.

இங்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் திரு.கே எஸ்.ரவிக்குமார், ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது முதல் படமான ‘வாலு’ படத்தில் உதவியாளராக பணியாற்றினேன்.

தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உதவி இயக்குனர்களும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி,வணக்கம்”, என்றார்.

அடுத்து இசையமைப்பாளர் சாம்.C.S பேசும் பொழுது…

“சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது. முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும்.

அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார்.

ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன.

அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன்.

ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். உதாரணத்திற்கு ஹன்ஷிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.

மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது விதவிதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது,அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத்துறையினரின் ஆதரவு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி”, என்று பேசினார்.

ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது..

“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி”, என்றார்

படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ் அவர்கள் பேசும் பொழுது…

“வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த பட வெளியீடு.

இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த வாய்ப்பு அளித்தமைக்கு விஜய்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி. எங்களுடைய முழு ஆதரவையும் இந்த படத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்”, என்று பேசினார்.

படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது..

“ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார்.

அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.

வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!”, என்றார்.

ஸ்ரீராம் பார்த்தசாரதி

அடுத்ததாக பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும் பொழுது,”இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர் நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன்.

திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது.

கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குனர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின் போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

புதுவிதமான ஹாரர் திரைப்படமான, இத்திரைப்படத்தை மகளிர் தினமான
மார்ச் 8-ஆம் தேதி வெளியிடுவதற்கு தனி தைரியம் வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓடிடியில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி”, என்று பேசினார்.

அடுத்ததாக தியா பேசும்பொழுது…

“வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்த
நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன்.
தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று பேசினார்.

நடிகை ஷோபனா பேசும்போது…

“இரண்டாவது படமே மிகப்பெரிய படமாக அமைந்தது,மிக்க மகிழ்ச்சி இந்த வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. ஹன்ஷிகா அவர்களுடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது…

“தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார். அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.

அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகி ஹன்ஷிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பேசினார்.

தங்கதுரை பேசும் பொழுது…

“கே.எஸ்.ரவிக்குமார் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன்.

‘வாலு’ படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார்.

இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்தனர்.

ஹன்சிகா அவர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அவர்களுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர். வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி”, என பேசினார்.

குரு சரவணன் அவர்கள் பேசும் பொழுது..

“தமிழுக்கும் கடவுளுக்கும் எங்களது குருநாதர் கே. எஸ்.ரவிக்குமார்க்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான்.

தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.

நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர், அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.

பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம்
C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான்.

இந்த படத்திற்ககு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.

படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறினார்.படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம். ஊடகத் துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம்.
ஊடகத் துறையினருக்கு நன்றி”என பேசினார்.

இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது…

“நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம். அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார்.

இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள்.

சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N. இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.
குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறினார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது…

” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன். ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன்.

இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.

கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார். அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார்.

என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது.

எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது. எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்” என முடித்தார்.

இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

படம் வருகின்ற மார்ச்-8ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

Guardian movie will be pakka commercial says KS Ravikumar

மக்களின் ஆரோக்கியத்திற்காக நடிகர் ஆர்யா செய்த செயல்

மக்களின் ஆரோக்கியத்திற்காக நடிகர் ஆர்யா செய்த செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களின் ஆரோக்கியத்திற்காக நடிகர் ஆர்யா செய்த செயல்

ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா, ஓஎம்ஆரில் திறக்கப்பட்டிருக்கும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது
தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திர நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும்,
சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ், ‘சீயான்’ விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக விஜய்க்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஜிம்ல் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில் பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில் உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் ஆகும்

இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் பரத்,
சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் எஸ். மீனாட்சி சுந்தரம், உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Arya launched Fitness centre at OMR

More Articles
Follows