தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நடிகர் இயக்குனர் எடிட்டர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளால் அறியப்பட்டவர் இவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பிச்சைக்காரன் 2’ பட சூட்டிங்கில் கலந்து கொண்ட போது பெரும் விபத்தில் சிக்கி இருந்தார்.
‘என் கணவர் கதை முடிந்து விட்டது என்று நானே நினைத்தேன்..’ என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா தெரிவித்திருந்தார்.
ஆனால் மக்கள் அன்பினால் கடவுள் அருளால் அவர் மீண்டு வந்து விட்டார் எனது தெரிவித்து இருந்தார்.
தற்போது முன்பை விட விஜய் ஆண்டனி கலகலப்பாக நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார்.
கணவரை மீட்ட சந்தோஷத்தில் இருக்கும் பாத்திமா இன்று தன் மூத்த மகளை இழந்துள்ளார்.
இன்று செப்டம்பர் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதன் விவரம் வருமாறு…
நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவேரி மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.
Meera/16
D/o Vijay Antony
இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார்.
மேற்படி இறந்த சிறுமி, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கி உள்ளார்.
இதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.
மீராவின் உடல் ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 12 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து தருவதாக தகவல் வந்துள்ளது.
விஜய்ஆண்டனி – பாத்திமா தம்பதிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். தற்போது அவர் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
கூடுதல் தகவல்…
சென்னை காவேரி மருத்துவமனையில் மனம் அழுத்தம் தொடர்பாக கடந்த ஆறு மாதமாக மீரா சிகிச்சை பெற்று வந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Actor Vijayantonys daughter meera suicide