உசுர கொடுத்து நடித்த விஜய் ஆண்டனி.; கதறி அழுத ரசிகர்..!

உசுர கொடுத்து நடித்த விஜய் ஆண்டனி.; கதறி அழுத ரசிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.

இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.

இப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படம் பார்த்து வெளியே வந்து பொது விமர்சனம் (Pubilc review) கொடுத்தார்கள்.

அப்போது, ‘பிச்சைக்காரன் 2’ பற்றி கேட்டபோது ஒரு நபர் (விஜய் ஆண்டனி) நீங்க “இசையில நீங்க எப்பவுமே சூப்பர்,  தயாரிப்பாளராவும் கலக்கிட்டீங்க. இயக்குனராகவும் மக்கள் மனச வென்றுட்டீங்க , மேலும்  உசுர கொடுத்து நடிச்சி எங்களை அழ வச்சிட்டீங்க” என ரசிகர்கள் கதறி அழுது ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு   தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Vijay Antony’s Pichaikkaran 2 getting positive reviews from public

RRR பட நடிகர் திடீர் உயிரிழப்பு. திரையுலகினர் பேரதிர்ச்சி !

RRR பட நடிகர் திடீர் உயிரிழப்பு. திரையுலகினர் பேரதிர்ச்சி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஸ்கர் விருது வென்ற RRR படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய RRR படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் நடிகர் ரே ஸ்டீவன்சன்.

அப்படத்தில் சர் ஸ்காட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை நடிப்பால் கண்முன் கொண்டுவந்திருந்தார்.

தலை சிறந்த நடிகரான இவர் RRR தவிர, மார்வெல் தொடரான ​​தோர் படத்திலும் நடித்துள்ளார்.

RRR fame actor Ray Stevenson passed away

JUST IN சினிமாவில் ‘ஜென்டில்மேன்’ என அழைக்கப்பட்டவர் சரத்பாபு.; நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

JUST IN சினிமாவில் ‘ஜென்டில்மேன்’ என அழைக்கப்பட்டவர் சரத்பாபு.; நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர் சரத்பாபு இன்று மே 22ஆம் தேதி மதியம் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் அறிக்கை…

தேதி : 22.05.2023

இரங்கல் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான நடிகர் சரத்பாபு தனது 71-ம் வயதில் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

’பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு.

இவர் நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற பல பிரபல திரைப்படங்களிலும் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் முன்னனி கதாநாயகர்களோடு இணைந்தும் நடித்து வந்துள்ளார்.

மிக்க அமைதியும் ஆர்ப்பாட்டமில்லாதவராக திரைத்துறையில் வலம்வந்தவர். திரைத்துறையை சார்ந்த அனைவராலும் செல்லமாக ”ஜென்டில்மேன்” என்று அழைக்கப்பட்டார்.

அவருடைய மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தாங்க முடியாத பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

(M.நாசர்),
தலைவர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.

southindian nadigar sangam Condolences to actor Sarath Babu

சரத்பாபு உடன் இணைந்த படங்கள்.; இரங்கல் செய்தியில் சரத்குமார் உருக்கம்

சரத்பாபு உடன் இணைந்த படங்கள்.; இரங்கல் செய்தியில் சரத்குமார் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சரத்பாபு மறைவுக்கு நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான ரா.சரத்குமார் இரங்கல்

தமிழ்த் திரைப்பட நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

1977 ஆம் ஆண்டு “பட்டினிப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமான பல்துறை நடிகரும் எளிமையாக பழகக்கூடிய குணச்சித்திர நடிகரான சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தவர்.

தமிழ் திரைப்படங்களில் வேடன், மகாபிரபு, கேப்டன் போன்ற திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைவுகூறுகிறேன்.

தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்துடன், ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் சரத்பாபு அவர்களின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்

sarath kumar pays tribute to actor Sarath Babu

நெருங்கிய நண்பர்.. அருமையான மனிதர்.; சரத்பாபு மறைவுக்கு ரஜினி இரங்கல்

நெருங்கிய நண்பர்.. அருமையான மனிதர்.; சரத்பாபு மறைவுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே உடல்நல நிலை குறைவால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று மே 22ஆம் தேதி சிகிச்சை பலனின் நடிகர் சரத்பாபு காலமானார்.

அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன் இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தும் சரத்பாபுவும் நிறைய படங்களில் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர்.

முள்ளும் மலரும் முதல் வேலைக்காரன் அண்ணாமலை முத்து வரை உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர்.

ரஜினியின் பாபா படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார் சரத்பாபு.

ரஜினியின் அந்த பதிவில்…

இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.

இது ஈடுகட்ட முடியாத இழப்பு.

அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

#SarathBabu

Rajinikanths condolence message to actor Sarath Babu

ஐட்டம் பாட்டுக்கு பாலைய்யாவுடன் ஆட தமன்னா கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன டீம்.; நடிகை விளக்கம்

ஐட்டம் பாட்டுக்கு பாலைய்யாவுடன் ஆட தமன்னா கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன டீம்.; நடிகை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தமன்னா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனால் அவரை படக்குழு நிராகரித்து விட்டதாக செய்திகள் பரவியது.

தற்போது இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமன்னா கூறியுள்ளதாவது..

“அணில் ரவி புடி இயக்கத்தில் நடிப்பது பிடிக்கும். மேலும் நடிகர் பாலையா மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன்.

ஒரு பாடலுக்கு ஆட அதிக சம்பளம் கேட்டதாக ஆதாரமற்ற செய்திகளை தவிர்க்குமாறு நான் ஊடகங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்” என தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

Did Tamannah demands Rs.5 crore to do a song in balakrishna’s nbk108

More Articles
Follows