‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 12ஆம் தேதி பிரபல காமெடி நடிகர் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவரது கைவசம் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் சந்திரமுகி 2 படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாமன்னன் படப்பிடிப்பில் வடிவேலு இன்று தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

வடிவேலு

வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரியாணி உபசரிப்பு நடந்துள்ளது.

உதயநிதி தயாரித்து வரும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ரவீனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அடுத்த மாதம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

வடிவேலு

Actor Vadivelu celebrated his birthday at Maamannan set

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’.

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர்.

படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

தொழில் நுட்ப குழு:

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
நடிப்பு – கல்யாணி பிரியதர்ஷன்
புரொடக்‌ஷன் பேனர் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths )
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்

கல்யாணி பிரியதர்ஷன்

Sesham Mike-il Fathima starring Kalyani Priyadarshan

வேலைக்காரி வீட்டு விசேஷத்தில் விக்ரம்.; ரசிகர்களும் வாழ்த்து

வேலைக்காரி வீட்டு விசேஷத்தில் விக்ரம்.; ரசிகர்களும் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம்.

ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.

சீயான் விக்ரம்

இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் = வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சீயான் விக்ரம்

Vikram join in his house worker’s family wedding

JUST IN மீண்டும் மீண்டும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணையும் விஜய்.; ஜீவா கொடுத்த ஜில் அப்டேட்

JUST IN மீண்டும் மீண்டும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணையும் விஜய்.; ஜீவா கொடுத்த ஜில் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களில் பிரபலமான ஒன்று சூப்பர் குட் ஃபிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ளது.

விரைவில் இந்த நிறுவனம் தன் 100வது படத்தை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிப்பார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் இந்தத் தகவலை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்பி சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜீவா உறுதி செய்துள்ளார்.

ஆஹா ஓ டி டி தளத்திற்காக சர்க்கார் வித் ஜீவா என்ற நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார் ஜீவா.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது…

“எங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பார். அவரும் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

அதில் நானும் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என தெரிவித்தார்.

இதற்கு முன்பு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பூவே உனக்காக’, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay’s next movie; Mass update by Jeeva l Super Good film 100 movie; Sarkaar with Jiiva ?? https://youtube.com/shorts/Zzp6nznocos?feature=share

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 11.. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்றது.

வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையில் 2 அணிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சந்திரசேகர் என்பவர் 152 ஓட்டுகள் மட.டுமே பெற்றார்.

என் சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது நான் செய்தது கம்மிதான் – ஜெயம் ரவி

என் சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது நான் செய்தது கம்மிதான் – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 10ல் நடிகர் ஜெயம்ரவி தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் & பத்திரிகையாளர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

”சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

இதை மற்ற சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது ரொம்ப குறைவு தான். எனக்கு பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர்.

நான் ஏன் குறைவான நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன்.

குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம்.

‘ஜெயம்’ படம் வெளியாகி 150 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அதன் பிறகு 8 மாதம் வீட்டில் சும்மாவே இருந்தேன்.

அப்போதுதான் அப்பா சொன்னார், ‘நல்ல படம் வரும் வரைக்கும் சும்மா உட்காரு தப்பில்ல.” என்று சொன்னார். எனவே என்னுடைய பயணத்தில் சரியாக ஓடாத படங்களின் விகிதம் குறைந்திருக்கிறது.

நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்”

இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்

More Articles
Follows