50 வயதில் குழந்தை பிறந்தால்.? என் வாழ்வில் என்ன நடக்குமோ.? மறுமணம் குறித்து சுகன்யா

50 வயதில் குழந்தை பிறந்தால்.? என் வாழ்வில் என்ன நடக்குமோ.? மறுமணம் குறித்து சுகன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1991-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுகன்யா.

நடிகை சுகன்யா இதைத்தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘இந்தியன்’, ‘வால்டர் வெற்றிவேல்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த 2002-ல் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் சுகன்யா மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ”கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது. இந்த சமூகத்துக்கு கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகித்து போவதால் பல தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.

சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.

மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை.

இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன். இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.

வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் சொல்லமுடியாது.

என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்”என்றார்.

50 at actress sukanya opens up about second marriage

ARE YOU READY ? சென்னையில் உலக திரைப்பட விழா : திரைப்பட பயிற்சி.. பராசக்தி முதல் இராவண கோட்டம் வரை.!

ARE YOU READY ? சென்னையில் உலக திரைப்பட விழா : திரைப்பட பயிற்சி.. பராசக்தி முதல் இராவண கோட்டம் வரை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1, 2 & 3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ள தேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது.

இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும் போது…

15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய ‘அடவி’ என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது.

மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு நுழைவு கட்டணம் இல்லை. திரைப்பட விழாவில் படங்களை காண வரும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது.

இந்த விழாவிற்கான அனைத்து செலவுகளும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் வெள்ளிமலை, இராவண கோட்டம் போன்ற படங்களும் ஃபெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டு திரையிட தயாராக இருக்கிறது.

இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்கள் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 15 படங்களை தேர்வு செய்து திரையிடுகிறோம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் பிரதானமாக திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

இருவரும் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை பெற்று வரும் கூழாங்கல் மற்றும் கற்பரா திரைப்படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட ரசனை குறித்த பயிற்சி பட்டறையை பல திரைப்பட இயக்குநர்கள் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான சினிமா திரையிடும்போது மட்டும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சிறுவர் திரைப்படங்களை காண வரும் சிறுவர்களுக்கும் அவர்களுடன் துணையாக வரும் பெற்றோர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டினை பெற கூகுள் ஃபார்ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ” என விழா ஒருங்கிணைப்பாளர் உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்தார்.

செந்தில் குமரன் சண்முகம் பேசும்போது…

“படம் இயக்க வரும் இளம் இயக்குநர்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஒரு வடிவத்திலும், திரைப்பட விழாக்களில் வெளியிட ஒரு வடிவத்திலும் எடுக்க இது போன்ற திரைப்பட விழாக்கள் துணையாக இருக்கும்” என்றார்.

இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது,

வெளிநாடுகளில் சினிமாவுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. படைப்பாளிகளையும் எழுத்தாளர்களையும் திரைப்பட விழாக்கள் தான் கொண்டாடுகின்றன. இந்த 15 படங்களும் தகுதி உள்ள படங்கள். இந்த விழாவிற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.

World film festival at Chennai complete updates

நடிகர் துரை சுதாகர் மகள் நிலா பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் துரை சுதாகர் மகள் நிலா பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘களவாணி 2’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகரின் விருந்தோம்பல் பற்றி கோலிவுட்டே வியந்து பேசி வருகிறது.

துரை சுதாகர்

சினிமா மீது உள்ள ஆர்வத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தாலும், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் துரை சுதாகரின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒட்டு மொத்த பிரபலங்களும் அங்கு குவிந்துவிடுவது வழக்கம்.

அந்த வகையில், துரை சுதாகர் அவர்களின் இளையமகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது.

இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மேயர் சண்.ராமநாதன் மற்றும் நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர். அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.

துரை சுதாகர்

Actor Durai Sudhakar daughter Nila birthday party

விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான ஒன்று.; ஹாட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான ஒன்று.; ஹாட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.அந்த வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதது.

இந்த நிலையில், ‘லியோ’ படம் குறித்து தகவல் ஒன்றை கூறியுள்ளார் தயாரிப்பாளர் லலித்குமார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான படமாக இருக்கும். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் இன்டர்வல் ப்ளாக் பார்க்கும்போது எங்களுக்கே கூஸ்பம்பாக இருந்தது. இடைவேளைக் காட்சியை பொறுத்தவரை 8 நிமிடம் வரும். நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

vijay’s leo interval block would be massive says lalith producer

ரஜினியுடன் நடிக்க மறுத்த நானி.; ஓகே சொன்ன பிரபல நடிகர்

ரஜினியுடன் நடிக்க மறுத்த நானி.; ஓகே சொன்ன பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் நானி, பகத் பாசில், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் நானி இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்க இருக்கிறார்கள்.

மேலும், நடிகர் சர்வானந்த் ஏற்கனவே தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வானந்த்

actor sharwanand repleace nani in rajini’s thalaivar 170 movie

சூட்டிங்க்கு வரல.. பணத்தையும் திருப்பி தரல.; யோகிபாபு மீது புகாரளித்த தயாரிப்பாளர்

சூட்டிங்க்கு வரல.. பணத்தையும் திருப்பி தரல.; யோகிபாபு மீது புகாரளித்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு.

யோகிபாபு மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதி பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.

இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன்.

இப்படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, முன் பணமாக ரூ.20 லட்சம் யோகிபாபு பெற்றுக்கொண்டார். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்தபோது, அவர் வரவில்லை.

படப்பிடிப்புக்கு வராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

producer files police complaint against actor yogi babu

More Articles
Follows