கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியாகி இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் இந்தியன்.

ஏ எம் ரத்னம் தயாரித்த இந்தப் படத்தை ஷங்கர் இயக்க கமலஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

அதிலும் அவர் ஏற்ற இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஊடுருவியிருக்கும் லஞ்சத்தை வேரறுக்கும் தாத்தாவாக கெத்து காட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தை ஆரம்பிக்க உள்ளதாக கமல்ஹாசன் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.

அனிருத் இசையமைக்க இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோன பிரச்சனை, இந்தியன் பட சூட்டிங்கில் விபத்து, கமலின் அரசியல் பிரவேசம், கமலுக்கு ஆபரேஷன் என பல்வேறு பிரச்சினைகளால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதனால் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில வதந்திகள் கிளம்பின. ஆனால் படக்குழு மறுத்தது.

மேலும் வேறு வழியின்றி தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார் ஷங்கர்.

ராம்சரண் ஐ வைத்து புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

இதனால் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கு மோதல் உருவாகி பிரச்சனை கோர்ட் வரை சென்றது.

‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

ஆனால் ராம் சரண் படத்தை முடித்துவிட்டுதான் இந்தியன் 2 படத்தை இயக்குவதில் உறுதியாக இருந்தார் ஷங்கர்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

ரசிகர்களை போலவே நானும், ஷங்கரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் கமல்.

ஆக, இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தி விட்டார் உலகநயகன் கமல்.

Kamal Hassan confirms that Indian 2 ‘will happen’

நமக்கு ஏன் இந்த வேலை.. உதயநிதியை கண்டித்த ஸ்டாலின்.; போட்டுக் கொடுத்த கமல்

நமக்கு ஏன் இந்த வேலை.. உதயநிதியை கண்டித்த ஸ்டாலின்.; போட்டுக் கொடுத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி உலக அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கமலஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருவது தங்களுக்கு அறிந்த ஒன்றுதான்

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து கமல் நன்றி கூறினார்.

அதற்கான விழா சென்னையில் நேற்று மாலை பலமான விருந்துடன் நடைபெற்றது.

அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் வினியோகஸ்தர் உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்…

“கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல், தான் வெளியிட்ட படம் விக்ரம் தான்.

அதற்கு ராஜ்கமல் நிறுவனத்தில் உள்ள மகேந்திரன் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஆகியோர்தான் காரணம்.

டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடிவு செய்தபோது, பலர் எதற்கு இந்த முடிவு என கேட்டனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே நான் பட புரமோஷன் வேலைகளை தொடங்கிட்டேன். அது தற்போது விக்ரமாக அமைந்து இருக்கிறது.

என் திறமைக்கு அதிகமாக  தமிழக மக்கள் தன்னை தூக்கிப் பிடித்துள்ளனர்.

என்னை விட அதிக திறமை கொண்ட கலைஞர்கள் காணாமல் போனதை என் கண்முன் கண்டிருக்கிறேன்.

உதயநிதியை பற்றி பேசும் பொழுது..

இவரின் தந்தை நமக்கு எதற்கு இந்த வேலை? நம் வேலையை பார்ப்போம் என கூறியதாக கேள்விபட்டேன். ஆனால் உதயநிதி இந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற நேர்மையாளர்கள் இருக்கும் பொழுது, பலர் பிழைப்பார்கள்.

இறுதியாக திரையரங்க உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் மற்றும் மக்களுக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  உதயநிதி ஸ்டாலின் பேசிய போது…

“டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்கும் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது.இப்போதே 75 கோடி ஷேர் கொடுத்துள்ளது.

விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இண்டர்வல் எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன்.

இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை” என்றார்.

Why this work for us .. Stalin who condemned Udayanidhi;

வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி

வைரமுத்துவுடன் இணைந்த யுவனை நிராகரிக்கவில்லை.. என்னை நிராகரித்தார் – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

*விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது..*

வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தயாரித்ததற்கு யுவன் சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.

இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவது போல் கதையமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன். நன்றி

*இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது…*

இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பி பார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா – இளையராஜா இசையமைப்பதாக இருந்தது.

பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

மாமனிதன் பாடலின் ரீ-ரெக்கார்டிங் மற்றும் கம்போஸிங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை; நான் அழைக்கப்படவும் இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஆனால் இப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன் தான் அவர்கள் வேலை செய்வார்கள் என சொன்னார்கள்.

ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம்.

நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துகொடுத்தார்.

இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நன்றி

Seenu Ramasamy blames MaaManithan team

நான் குரு போல நடிக்க ஆசைப்பட்டேன்.; விஜய்சேதுபதி ஓபன் டாக்

நான் குரு போல நடிக்க ஆசைப்பட்டேன்.; விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் ‘மாமனிதன்’.

இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

*நடிகை காயத்ரி கூறியதாவது..*

கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்த படம் ஒரு காதல் கதை. இந்த படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் சீனுராமசாமி.

இந்த படத்தில் யுவன் சார், இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் பணியாற்றியது என் பாக்கியம் நன்றி.

*நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது..*

நீங்க நடித்தால் நானும் – அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம் தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரம். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிகொண்டு வரப்படவில்லை.

இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும்.”

என்றார் விஜய்சேதுபதி.

Guru Somasundaram

I wanted to act like a guru . Vijay Sethupathi Open Talk

ரஜினி என்ற குதிரை விழும் பின்னர் எழும்.; சிம்பு பட தயாரிப்பாளரின் கிண்டல்.? கடுப்பான ரசிகர்கள்

ரஜினி என்ற குதிரை விழும் பின்னர் எழும்.; சிம்பு பட தயாரிப்பாளரின் கிண்டல்.? கடுப்பான ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியானது.

இதில் ரஜினிகாந்தின் புகைப்படம் இடம் பெறவில்லை. மாறாக ரத்தக் கறையுடன் பெரிய கத்தி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த பட நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் தொடங்கப்படவுள்ள ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் ‘தலைவர் 169’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.; வேற லெவல்

இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியானது முதல் இந்திய அளவில் தலைவர் 169 – ஜெயிலர் போன்றவை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில்

“எத்தனை குதிரைகள் ஓடினாலும், @rajinikanth இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை.

சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும்.

வாழ்த்துகள் @Nelsondilpkumar & டீம். ⁦@sunpictures⁩ https://t.co/EmYOOqXdzd

இவ்வாறு சிம்பு நடித்த ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் எப்போதும் விழுந்ததாக சரித்திரம் கிடையாது. அவர் எல்லா தயாரிப்பாளர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர் என்று பல கண்டனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கமெண்ட்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்…

*பாபா தான் ஒரே வீழ்ச்சி. சந்திரமுகி தொடங்கி எழுச்சி தான். அவர் விழுந்து விட்டார் என்று அரசியல் & சினிமா எதிரிகள் கட்டமைக்கிறார்கள். சில ஆண்டுகளாக இந்த குதிரையின் வேகம் குறைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் ஜாக்கியே (இயக்குனர்) தவிர குதிரை இல்லை. #Jailer @rajinikanth

*1st time seeing you are supporting RajiniKanth film

*எப்போ விழுந்தோம் எழ… எதையாவது சொல்லணும் சொல்லாதிங்க..

*கொரோன நேரத்தில் அண்ணாத்த முதல் நாள் வசூல் 34 + கோடி அதனால் அவரு விழுந்ததாக வரலாறு கிடையாது , அவர் வரலாறை படைத்தவர் நாம் படிப்பவர்கள்

#SuperstarRajinikanth #Thalaivar169 #Jailer

Simbu film producer comment on Rajini’s Jailor title look

suresh kamatchi

KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

KGF ஹீரோ யஷ் உடன் இணையும் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியதால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் பூஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் பூஜாவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ஆனால் தமிழில் அல்ல.. தெலுங்கு & கன்னட சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

பூஜா தற்போது ‘கேஜிஎப்’ பட நடிகர் யஷ் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் மூலம் முதன் முறையாக அவருக்கு ஜோடியாகி இருக்கிறார் பூஜா

இந்தப் படத்திற்கு யஷ் 19 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தை நார்தன் என்பவர் இயக்குகிறாராம். இவர் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான முப்தி என்ற படத்தை இயக்கியவர்.

இப்படம் தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Yash and Pooja Hegde joins for a new film

More Articles
Follows