தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து பிரபலமானவர் நெடுமுடி வேணு.
கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமானார்.
மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகலில் காலமானார்.
அவரைப் பற்றிய தகவல்கள்…
இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். தற்போது இவரது வயது 73.
1978ஆம் ஆண்டு ‘தம்பு’ படம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்தார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ‘காலகமுடி’ பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் அப்போதே நாடக கலைஞராகவும் இருந்துள்ளார்.
இவர் 1989ம் ஆண்டில் வெளியான மலையாளப் படமான, ‘பூரம்’ மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.
500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இவர் 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
1990, 2003 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் வெளியான இவரது படங்களுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர், நடுவர் குழு சிறப்பு விருது, ‘மினுக்கு’ மலையாள படத்திற்காக விருது என மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
நடிப்புத்துறை தவிர, கிராமியப்பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியை கையாளுவதிலும் வல்லவர்.
தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
‘நவரசா’ இணையத் தொடருக்கு பிறகு, தமிழில் வெளிவர இருக்கும் கமல் & ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார்.
(இதே படத்தில் நடித்த விவேக்கும் சில மாதங்களுக்கு முன்பு காலமானார்)
‘தீர்த்தம்’, ‘சவிதம்’ உள்ளிட்ட சில மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
2017இல் வெளிவந்த ‘Chaurahen’ என்ற ஆங்கில படத்திலும் நடித்திருந்தார் வேணு.
இவரது மனைவி பெயர் டிஆர். சுஷீலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உன்னி மற்றும் கண்ணன் உள்ளனர்.
இவரது மரணத்திற்கு மலையாள முன்னணி நடிகர், நடிகைகள், பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Legendary Malayalam Tamil Actor Nedumudi Venu passed away