தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் அவர்கள் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இவர் தற்போது மெர்சல் படத்திற்கும் கதை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல்வன் படத்தின் -2ம் பாகம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
என்னை சந்தித்து முதல்வன் படத்தின் 2ஆம் பாகத்திற்கு கதையை எழுதச் சொன்னார்கள்.
அதை எழுதிவிட்டேன். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? எனத் தெரியவில்லை.
ஆனால், முதல்வன் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இப்படத்தையும் இயக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதன் முதல் பாகத்தில் அர்ஜீன் நடித்திருந்தாலும் ரஜினியை வைத்தே கதையை உருவாக்கியிருந்தார் ஷங்கர்.
ஆனால் அப்போது அரசியல் சூழ்நிலையால் ரஜினி மறுத்தார்.
தற்போது அரசியலில் நுழைய ரஜினி ஆர்வம் காட்டி வருவதால், அவர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
In Shankar direction Rajini may act in Mudhalvan sequel