தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘ருத்ரன்’ தயாரிப்பாளர்கள் டப்பிங் உரிமை ஒப்பந்தத்தை 4 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் முடித்துவிட்டு, பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டதா இல்லையா என்பது ரசிகர்கள் மத்தியில் புதிராக உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ருத்ரன் படம் வெளியிடுவதற்கு தடை கோரி திருசஞ்சய் லால்வாணி நிறுவனத்தார் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 13 பட தயாரிப்பாளர் கதிரேசன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சஞ்சய் நல்வாணி நிறுவனத்தினர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனைஅடுத்து திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டது கோர்ட்.
மேலும், ‘ருத்ரன்’ படத்தை தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘Rudhran’ to release on 400+ screens in Tamil Nadu