தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்துள்ள படம சூரரைப்போற்று.
சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார் சூர்யா.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது இது சர்ச்சையாகி உள்ளது.
அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே கார்த்திக் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது விசாரித்தார்.
அப்போது மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினார் நீதிபதி.
அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
Madras High Court to sue Actor Suriya’s Soorarai Pottru