தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டில் கதை திருட்டு சர்ச்சைகள் சமீபத்தில் அதிகமாக அதிகரித்துள்ளன.
கடந்த வருடம் முருகதாஸ் இயக்கிய சர்கார் பட விவகாரம் கதை திருட்டு சர்ச்சையால் பெரிதாக பேசப்பட்டது. இதில் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் தலையிட்டு கதை திருடப்பட்டது என அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ்… அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என சுட்டு கதை பண்ணுபவர்கள் ஒருநாளும் தேறமாட்டார்கள். அவர்களால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று பேசியிருந்தார்.
தற்போது இதற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் என முருகதாஸ் என தெரிகிறது.
அவரின் பேட்டியில்… ஒரு பாட்டிலை பற்றி கதை எழுதியிருந்தால், மூடியை வைத்து நான் கதை பண்ணியிருக்கிறேன். அதனால் பாட்டிலுக்கும் மூடிக்கும் தொடர்பு உள்ளது என்று ஒரு பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படி எல்லாரும் எதிர்க்க புறப்பட்டால் யாருமே கதை பண்ண முடியாது என தெரிவித்துள்ளார் தர்பார் டைரக்டர்.
நல்லவேளை தர்பார் படத்திற்கு கதை திருட்டு பிரச்சினை இதுவரை இல்லை.
Directors Bhagyaraj and Murugadoss recent talk on Story theft movies