தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நிவின் பாலியின் பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி.
அதையடுத்து பிடா, எம்சிஏ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.
அந்த 2 படங்களும் வெற்றி பெறவே இப்போது தெலுங்கிலும் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.
இந்நிலையில்தான் விஜய் இயக்கியுள்ள கரு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் சாய்பல்லவி.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பலரும் சாய்பல்லவியின் நடிப்பை பாராட்டினார்கள்.
இப்படத்தின் காட்சிகளில் நடித்து முடித்ததும் ஓடிச்சென்று மானிட்டரில் பார்ப்பாராம். அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அதோடு நிறுத்திக்கொள்வாராம் சாய்பல்லவி.
இல்லையேல் மீண்டும் ரீடேக் எடுக்க சொல்வாராம். தன் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதால் இப்படி செய்வாராம்.
சாய்பல்லவியின் இந்த செயல்களை பார்த்த அவரது பெற்றோர்களாக நடித்துள்ள நிழல்கள் ரவி, ரேகா ஆகியோர், எதிர்காலத்தில் சாய்பல்லவி மிகப்பெரிய நடிகையாக வருவார். அவரை மனதில் கொண்டு டைரக்டர்கள் கதை எழுதும் நிலை ஏற்படும்” என்று பாராட்னார்கள்.
SaiPallavis Karu audio launch news updates