தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
JS ஸ்க்ரீன்ஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் மணிமாறன் என்பவர் “கரு” என்ற பெயரில் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே ‘கரு’ படத்திற்கு ட்ரைலருக்கு சென்சார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2.0 படத்தை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான லைக்காவும் “கரு” எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது.
விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் சாய்பல்லவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான கரு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிமாறன் லைக்கா நிறவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ஆவணங்களை சரிபார்த்ததில் JS ஸ்க்ரீன்ஸ் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கரு படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
Court interm ban for Sai Pallavis Karu movie release