தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் சாய்பல்லவி.
இவரின் அழகிய நடிப்பால் அந்த மலர் டீச்சர் கேரக்டர் படு பாப்புலராக பேசப்பட்டது.
எனவே இவரின் நேரடி தமிழ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்குள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையில் லைகா தயாரிப்பில் கரு என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் திடீரென தனுஷ் உடன் மாரி2 மற்றும் சூர்யா உடன் செல்வராகவன் படம் என கமிட் ஆனார்.
ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களுடன் நடிப்பதால் மிக உற்சாகத்தில் இருந்தாராம்.
ஆனால் இவர் கமிட்டான பிறகு தனுஷ் படத்தில் வரலட்சுமி இணைய, சூர்யா படத்தில் ரகுல் பிரித்தி சிங் இணைந்துவிட்டார்.
எனவே தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ? என லைட்டான கோபத்தில் இருக்கிறாராம் இந்த மலர் டீச்சர்.