தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘புஷ்பா‘.
இந்த படத்தின் முதல் பாகம் 2021 டிசம்பர் மாதத்தில் வெளியானது. இதன் கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத்பாசில் மோதல் ஆரம்பமானது.
எனவே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது.
இந்த நிலையில் புஷ்பா படத்தின்
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2ம் பாகத்தில் பழங்குடி பெண் கேரக்டரில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய்பல்லவியின் கண்களை பின் தொடர்ந்தேன்.; இறுதியில் சம்மட்டி அடி.. – சக்திவேலன்
முதல் பாகத்தில் ஆண்ட்ரியா குரலுக்கு சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா மாமா…’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
எனவே இரண்டாம் பாகத்திலும் ஒரு அதிரடியான ஐட்டம் சாங் ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
Actress Sai Pallavi is part of Pushpa 2