முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

முழுசா கபில் தேவ் வாக மாறிய ரன்வீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranveer as kapil devநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்.

’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.

அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.

ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே தெரியாத வகையில் அமைந்திருந்தது.

1983 ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்று முதன்முதலாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்த தருணங்களை

ரன்வீர் சிங்க் கபில் தேவாக நடிக்க, தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக ஒரு பிரம்மாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் ஒரு விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்க, இதனை வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

மிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

psyco posterஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில் வெளியாகுமெனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறியதாவது…

நாங்கள் எங்கள் Double Meaning Production தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றோம். ஆனாலும் ஆரம்பம் முதல் “சைக்கோ” திரைப்படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவருக்குமே இப்படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது. எங்களிடம் மிஷ்கின் கதை சொன்ன நாளிலிருந்து அது உருவான ஒவ்வொரு தருணமும் மிகச் சிறப்பான நினைவலைகள் கொண்டது. ஒரு மிகச்சிறந்த திரைப்படம் தற்காலத்தில் மிகச்சரியான காலத்தில் வெளியிடப்படவேண்டியது அவசியம். சில, பல தேதிகளை பரிசீலித்தபின் டிசம்பர் 27 மிகச்சரியான தேதி என முடிவு செய்தோம்.

இப்படத்தில் பணிபுரிந்தது வாழ்நாளின் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. நிறைய கற்றுக்கொள்ளும் தருணங்கள் படமுழுக்க நிறைந்திருந்தது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் இப்படம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

டீஸர் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் பல கலவையான கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஆனால் ரசிகர்கள் இதை வரவேற்று கொண்டாடிய விதம் எங்களை பெரும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காமெடி, திரில் என எந்தவொரு வகை படைப்பானாலும் அதனை மிகச்சரியாக தரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த டீஸர். மிஷ்கினின் இசை இந்த டீஸருக்கு பெரிய பலமாக இருந்தது. படத்தில் இளையராஜாவின் இசை ரசிகர்களை இன்னும் மிரட்டக்கூடிதயதாக இருக்கும்.

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் இந்த வருடத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகிவிட்டிருக்கிறது. இப்படத்தில் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகிய முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Market Raja MBBSஎல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அப்பழுக்கற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியிருக்கும் ஆரவ், சில சமயங்களில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடிப்பில் புதிய பரிணாமங்களைத் தொட்டிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரவ். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட பெரு முயற்சி செய்து, பரிபூரணமாக அவற்றைச் செய்தது குறிப்படத்தக்கது என்றார்

ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் மற்றும் சில முக்கிய நடிக நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சைமன் கே.கிங் இசை ஏற்கெனவே பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.குகன் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashima narwalபயணங்கள் எப்போதும் வாழ்வின் அர்த்தத்தையும், ஆழத்தை கற்றுத்தரும். வாழ்வில் இனிமையான நினைவுகளை, புதுமையான அனுபவங்களை எப்போதும் அளிப்பது பயணங்களே!
பயணம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். ஆன்மாவை மீட்டெடுக்கும். அப்படியான ஒரு பயணத்தை இயற்கை எழில் கொஞ்சும் நகரான கோவாவின் கடற்கரைகளில் மேற்கொண்டுள்ளார் ஆஷிமா நாவல்

அப்பயணம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது….

மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்துகொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.

இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்திகொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. புதிய வகைள் கற்கும் சாகசங்கள் நிறைந்த, உற்சாகம் தரும் புத்தம் புது நடனகலைகள் கற்க, ஓய்வில் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கே இப்பயணம்.

என் அம்மா எனது வாழ்வின் தோழி இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். நாங்கள் பல புதிய இடங்களை கண்டடைந்தோம். பல புது மனிதர்களை சந்தித்தோம். கடல் உணவுகள் பலவற்றை சுவைத்தோம். ஓய்வில் தியானம், கடற்கரையில் நீச்சல், புதிய நடன வகைகளை முயற்சித்தல் என இப்பயணம் இனிமையான அனுபவம். இயற்கை எழில் கொஞ்சும் நீல நிறக் கடல், பொன்நிற வெய்யில், பசுமை போர்த்திய மர நிழல் ஆகியவற்றோடு நான், அண்டத்தில் ஒருத்தியாய் கலந்து விட்ட உணர்வை அது தந்தது. அல்லது அப்படியாக நான் உணர்ந்தேன். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார். இப்பயணத்தில் நாங்கள் டாட்டுவையும் முயற்சித்தோம்.

காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன்.

பலரது பாராட்டையும் பெற்ற விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” படத்தில் தாரணி மற்றும் ஆராதனாவாக கலக்கிய ஆஷிமா விரைவில் வெளியாகவுள்ள “ராஜபீமா” படத்தில் ஆரவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

வானம் கொட்டட்டும் படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு

வானம் கொட்டட்டும் படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaanam Kottattumஇயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.

More Articles

Home

Upcoming Movies

  • Upcoming Movies
  • July
  • Sep

Videos

  • Teasers
  • Trailers
  • Videos Songs
  • Short films
  • Motion Poster
  • Sneak Peek

DOUBLE TUCKERR – Official Teaser

Produced by – Air flick Written & Directed by – Meera Mahadhi Music by – Vidya Sagar Co-Written & Co-Produced – Chandru Director of photography

Vanangaan – Official Teaser

Starring: Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldas, Munish Sivagurunath

AMARAN – TEASER

Starring: Sivakarthikeyan, Sai Pallavi Director : Rajkumar Periasamy Banner: Raajkamal Films International & Sony Pictures International Productions Produced by : Kamal Haasan, Sony Pictures International

Ninaivellam Neeyada – Official Movie Teaser

Starring – Prajan, Manisha Yadav, Sinamikaa, Yuvalakshmi, Rohit, Reddin Kingsley, Manobala, Madhumitha Written & Directed By: Aadhiraajan Music : Ilaiyaraaja Producer : Royal Babu Banner

Latest post

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!




மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்




DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..

வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.

எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.

இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.

இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’




ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

எல்லா ஜீவராசிகளுக்கும் தாம்பத்யம் உறவு இருந்தாலும் திருமணம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு அற்புதமான தருணமாகும்.

அந்த திருமணம் பந்தத்தை சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் திருமண உறவுகளை சொல்ல வரும் படம் தான் ‘விழி அருகே’..

திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் ஆண்டோ (ANTO) படமாக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விழி அருகே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.

இதில் சஜிதா நாயகியாகவும் ஜெகதீஷ் நாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணி காந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளிவர நிலையில் அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

எனவே எங்களுடன் இணைந்து இருங்கள்..

Sajitha and Jagadish starring Vizhi Arugae

—–

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்




அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

*ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் விஜய்யின் ‘கோட்’ படம்*

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Grand release Vijays Goat movie in America

More Articles
Amitabh Bachchan releases teaser video of Kalyan Navratri celebrations

Amitabh Bachchan releases teaser video of Kalyan Navratri celebrations




 

 

Amitabh Bachchan releases teaser video of #KalyanNavratri celebrations

Festivities are ongoing at Kalyanaraman family’s residence in Thrissur, Kerala
Video features Amitabh Bachchan reciting a powerful Sanskrit verse from the Devi Mahatmyam, which is a part of the Markandeya Purana
Showcases the unique theme of this year’s Navratri celebrations at the Kalyanaraman residence along with the displaying the traditional ‘Bommai Kolu’
National, 9th October 2024: Kalyan Jewellers’ brand ambassador and Bollywood megastar Amitabh Bachchan has released the teaser video of #KalyanNavratri festivities held at the Kalyanamaram family’s residence in Thrissur.

The 3-minute video features Amitabh Bachchan reciting the Sankrit shloka ‘Yaa Devi Sarva Bhuteshu, Shakti Roopena Samsthita, Namas Tasyai, Namas Tasyai, Namas Tasyai, Namo Namaha’ is a powerful verse from the Devi Mahatmyam, part of the Markandeya Purana. It is a hymn dedicated to Goddess Durga, celebrating her as the universal mother and the embodiment of divine energy.

The shloka is a reverent acknowledgment of the goddess’s omnipresence and her role as the source of all energy and vitality in the universe.

This teaser video is enhanced by an evocative musical score, composed by the talented duo Rohan-Vinayak, with Jarvis lending his expertise as recordist. This spiritual rendition is a celebration of strength, tradition, and beauty—values central to the Kalyanaraman family.

Amitabh Bachchan is the latest to join the #KalyanNavratri festivities, after the conclusion of a star-studded evening at the Kalyanaraman residence.

The event saw a confluence of Bollywood and South Cinema, with prominent names like Ajay Devgn, Katrina Kaif, Bobby Deol, Saif Ali Khan, Shilpa Shetty, Malaika Arora, Naga Chaitanya, Kalyani Priyadarshan, and Rashmika Mandanna gracing the occasion.

This video features the theme of this year’s Navratri celebrations, which revolves around Lord Rama’s legacy, specifically highlighting the pivotal moment of breaking the ‘Dhanush Baan’ at Sita Mata’s swayamvar.

The event also showcases a young Lord Krishna in his cradle swing, representing divine strength and virtue. Together, these two divine representations of Lord Rama and Lord Krishna—each a manifestation of Lord Vishnu in different avatars—bring forth a culturally rich and spiritually profound exhibit, as part of the grand festivities.

The Kalyanaraman family continues the tradition of displaying the “Bommai Kolu”, a festive display of dolls and figurines.

The order in which the Bommai or the dolls are kept symbolises the evolution from a materialistic level to an elevated spiritual level through depiction of everyday scenes and the divine forms of the goddesses, Saraswati, Parvati and Lakshmi.

Check out the video here:
LINK: https://www.instagram.com/p/DA34926MMdG/

For additional information please contact:
Kartik Behl: +91-9004333899 – [email protected]

 

Hello,

The Kalyanaraman family recently hosted a grand Navratri celebration at their residence in Thrissur, Kerala. Superstar Amitabh Bachchan has now joined in the celebrations, unveiling the #KalyanNavratri teaser video. In the video, the megastar recites a powerful Sanskrit verse, beautifully capturing the essence of the occasion and highlighting the vibrant spirit of the celebrations.

Check out the video released by Amitabh Bachchan:

LINK: https://www.instagram.com/p/DA34926MMdG/

Enclosed in the link below is the shorter version of the video capturing celebrity snapshots along with the festivities:

LINK: https://we.tl/t-PnF86nR5ez

 

 

 

 

 

 

பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்

பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்




 

 

பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்

 

ரஜினிகாந்த் அமிதாப்பச்சன், பகத் பாசில் ரானா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வருகிறது ‘வேட்டையன்’.

‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது லைக்கா நிறுவனம்.

இப்படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.. படத்தின் கதைகளமும் ரஜினியின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ஞானவேல் கூறியிருக்கிறார்

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக இரண்டு புதிய திட்டங்களை இப்படத்தில் அறிமுகம் செய்துள்ளது படக்குழு.. அதன் விவரம் வருமாறு..

இத்திரைப்படம் திரையரங்குகளில் ஆடியோ விளக்கத்துடனும் (Audio description) & க்ளோஸ்ட் கேப்ஷன்ஸ் ஒளிபரப்படும்.. இந்த இரண்டு விஷயங்களைக் கொண்டு திரையரங்குகளில் ஒளிபரபப்பும் முதல் தமிழ் படம் `வேட்டையன்’ என கூறப்படுகிறது..

ஆடியோ விளக்கம் என்றால் என்ன.?

பார்வையற்றவர்கள் படத்தை பார்க்கும் போது ஆடியோவை வைத்து வசனங்களை புரிந்து கொள்வார்கள்.. ஆனால் வசனத்தை தாண்டி நடக்கும் சில காட்சிகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.. அப்படி இருக்கையில்.. இந்த ஆடியோ விளக்கமிருந்தால் ஆடியோ வடிவிலான விளக்க உரையைக் கேட்டு அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். இதுக்காகப் பிரத்யேக ஹெட்சைட்டை பயன்படுத்தி, கேட்கலாம்.

க்ளோஸட் கேப்ஷன் என்றால் என்ன.?

படத்தில் வரும் கேரக்டர்கள் வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு மிருகமோ ஒரு உருவமோ பின்னால் பயணிப்பதாக காட்சிகள் இருக்கும் இருக்கும் என்றால்.. காது கேளாதோரும் இந்த க்ளோஸட் கேப்ஷன்களை மூலம் அந்த உருவம் நகர்வதை செவி மூலம் தெரிந்துக் கொள்வார்கள்..

Vettaiyan brings 2 highlights First time in kollywood

 

 

 

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க




 

 

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க…

 

 

குணச்சித்திர நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் 2020ல் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.

தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘சார்’.

இதில் பருத்திவீரன் சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாயா தேவி கண்ணன், சிராஜ், ரமா, ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். ஒரு சில காரணத்தினால் தற்பொழுது “சார்” என மாற்றப்பட்டு இருக்கிறது.

நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படம் வருகின்ற 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. ஆயுத பூஜையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படம் திரைக்கு வருகிறது.. இந்த படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஆயுத பூஜையை பண்டிகை முடித்து விட்டு விமலின் சார் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இந்த நிறுவனம் விஜய் நடித்த கோட் படத்தின் வெளியிட்டு உரிமையும் பெற்று இருந்தது இங்கே கவனிக்கத்தக்கது..

Bose Venkat combo Sir movie release

 

 

 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா




 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

 

*‘பிளாக் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு*

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது*,

“இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார்.

ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன்.

மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமிம் ராஜ் இதற்குள் வந்தார்.

அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள்.
படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.

விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை.

அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.

இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,*

“இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்.

முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலா (பாலசுப்ரமணி) இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.

இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.

கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.

நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது.

படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும்” என்று கூறினார்.

*நாயகன் ஜீவா பேசும்போது,*

“இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.

விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.

நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன்.

அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.

எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

#Jiiva #PriyaBhavaniShankar #KGBalasubramani #VivekPrasanna #ShivaShahRa #SwayamSiddha #KGBalasubramani #Gokulbenoy #SamCS #MadhanKarky #SatheesKumar #PhilominRaj #MetroMahesh #SherifMaster #PotentialStudios #RThangaprabaharan #SRPrabu

Mind Twisting movie Black hollywood remake says Jiiva

 

 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem




 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

 

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee

The musical duo comes together to capture the authentic flavor of Tamil Nadu’s mornings and coffee culture with a new coffee anthem

Chennai, 1st Oct’24 – Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep – rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory.

The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ – the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee.

The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee.

This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee!

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, “We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu’s enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee!

This memorable musical anthem is built around the signature ‘SHIK SHIK SHIK,’ sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!” he further added.

Dhee shares her excitement at the launch, stating, “This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!”
Santhosh Narayanan adds, “Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!”

Here is the link to the video –

About Tata Consumer Products Limited

Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the principal food and beverage interests of the Tata Group under one umbrella. The Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices, ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals. Tata Consumer Products is the 2nd largest branded tea company in the world. Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata Gluco+. Its food portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata Soulful, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.

For more information, please visit www.tataconsumer.com

Santhosh Narayanan and Dhee to bring coffee anthem

 

 

 

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

More Articles
பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்

பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்




 

 

பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்

 

ரஜினிகாந்த் அமிதாப்பச்சன், பகத் பாசில் ரானா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வருகிறது ‘வேட்டையன்’.

‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது லைக்கா நிறுவனம்.

இப்படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினிகாந்த் நடிக்கிறார்.. படத்தின் கதைகளமும் ரஜினியின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ஞானவேல் கூறியிருக்கிறார்

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக இரண்டு புதிய திட்டங்களை இப்படத்தில் அறிமுகம் செய்துள்ளது படக்குழு.. அதன் விவரம் வருமாறு..

இத்திரைப்படம் திரையரங்குகளில் ஆடியோ விளக்கத்துடனும் (Audio description) & க்ளோஸ்ட் கேப்ஷன்ஸ் ஒளிபரப்படும்.. இந்த இரண்டு விஷயங்களைக் கொண்டு திரையரங்குகளில் ஒளிபரபப்பும் முதல் தமிழ் படம் `வேட்டையன்’ என கூறப்படுகிறது..

ஆடியோ விளக்கம் என்றால் என்ன.?

பார்வையற்றவர்கள் படத்தை பார்க்கும் போது ஆடியோவை வைத்து வசனங்களை புரிந்து கொள்வார்கள்.. ஆனால் வசனத்தை தாண்டி நடக்கும் சில காட்சிகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.. அப்படி இருக்கையில்.. இந்த ஆடியோ விளக்கமிருந்தால் ஆடியோ வடிவிலான விளக்க உரையைக் கேட்டு அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். இதுக்காகப் பிரத்யேக ஹெட்சைட்டை பயன்படுத்தி, கேட்கலாம்.

க்ளோஸட் கேப்ஷன் என்றால் என்ன.?

படத்தில் வரும் கேரக்டர்கள் வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு மிருகமோ ஒரு உருவமோ பின்னால் பயணிப்பதாக காட்சிகள் இருக்கும் இருக்கும் என்றால்.. காது கேளாதோரும் இந்த க்ளோஸட் கேப்ஷன்களை மூலம் அந்த உருவம் நகர்வதை செவி மூலம் தெரிந்துக் கொள்வார்கள்..

Vettaiyan brings 2 highlights First time in kollywood

 

 

 

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க




 

 

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க…

 

 

குணச்சித்திர நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் 2020ல் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.

தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘சார்’.

இதில் பருத்திவீரன் சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாயா தேவி கண்ணன், சிராஜ், ரமா, ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். ஒரு சில காரணத்தினால் தற்பொழுது “சார்” என மாற்றப்பட்டு இருக்கிறது.

நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படம் வருகின்ற 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. ஆயுத பூஜையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படம் திரைக்கு வருகிறது.. இந்த படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஆயுத பூஜையை பண்டிகை முடித்து விட்டு விமலின் சார் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இந்த நிறுவனம் விஜய் நடித்த கோட் படத்தின் வெளியிட்டு உரிமையும் பெற்று இருந்தது இங்கே கவனிக்கத்தக்கது..

Bose Venkat combo Sir movie release

 

 

 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா




 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

 

*‘பிளாக் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு*

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது*,

“இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார்.

ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன்.

மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமிம் ராஜ் இதற்குள் வந்தார்.

அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள்.
படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.

விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை.

அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.

இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,*

“இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்.

முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலா (பாலசுப்ரமணி) இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.

இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.

கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.

நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது.

படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும்” என்று கூறினார்.

*நாயகன் ஜீவா பேசும்போது,*

“இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.

விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.

நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன்.

அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.

எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

#Jiiva #PriyaBhavaniShankar #KGBalasubramani #VivekPrasanna #ShivaShahRa #SwayamSiddha #KGBalasubramani #Gokulbenoy #SamCS #MadhanKarky #SatheesKumar #PhilominRaj #MetroMahesh #SherifMaster #PotentialStudios #RThangaprabaharan #SRPrabu

Mind Twisting movie Black hollywood remake says Jiiva

 

 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem




 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

 

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee

The musical duo comes together to capture the authentic flavor of Tamil Nadu’s mornings and coffee culture with a new coffee anthem

Chennai, 1st Oct’24 – Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep – rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory.

The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ – the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee.

The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee.

This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee!

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, “We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu’s enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee!

This memorable musical anthem is built around the signature ‘SHIK SHIK SHIK,’ sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!” he further added.

Dhee shares her excitement at the launch, stating, “This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!”
Santhosh Narayanan adds, “Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!”

Here is the link to the video –

About Tata Consumer Products Limited

Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the principal food and beverage interests of the Tata Group under one umbrella. The Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices, ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals. Tata Consumer Products is the 2nd largest branded tea company in the world. Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata Gluco+. Its food portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata Soulful, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.

For more information, please visit www.tataconsumer.com

Santhosh Narayanan and Dhee to bring coffee anthem

 

 

 

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

More Articles
ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க




 

 

ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க…

 

 

குணச்சித்திர நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் 2020ல் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.

தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘சார்’.

இதில் பருத்திவீரன் சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாயா தேவி கண்ணன், சிராஜ், ரமா, ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். ஒரு சில காரணத்தினால் தற்பொழுது “சார்” என மாற்றப்பட்டு இருக்கிறது.

நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படம் வருகின்ற 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. ஆயுத பூஜையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படம் திரைக்கு வருகிறது.. இந்த படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஆயுத பூஜையை பண்டிகை முடித்து விட்டு விமலின் சார் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இந்த நிறுவனம் விஜய் நடித்த கோட் படத்தின் வெளியிட்டு உரிமையும் பெற்று இருந்தது இங்கே கவனிக்கத்தக்கது..

Bose Venkat combo Sir movie release

 

 

 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா




 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

 

*‘பிளாக் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு*

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது*,

“இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார்.

ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன்.

மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமிம் ராஜ் இதற்குள் வந்தார்.

அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள்.
படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.

விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை.

அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.

இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,*

“இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்.

முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலா (பாலசுப்ரமணி) இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.

இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.

கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.

நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது.

படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும்” என்று கூறினார்.

*நாயகன் ஜீவா பேசும்போது,*

“இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.

விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.

நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன்.

அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.

எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

#Jiiva #PriyaBhavaniShankar #KGBalasubramani #VivekPrasanna #ShivaShahRa #SwayamSiddha #KGBalasubramani #Gokulbenoy #SamCS #MadhanKarky #SatheesKumar #PhilominRaj #MetroMahesh #SherifMaster #PotentialStudios #RThangaprabaharan #SRPrabu

Mind Twisting movie Black hollywood remake says Jiiva

 

 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem




 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

 

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee

The musical duo comes together to capture the authentic flavor of Tamil Nadu’s mornings and coffee culture with a new coffee anthem

Chennai, 1st Oct’24 – Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep – rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory.

The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ – the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee.

The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee.

This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee!

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, “We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu’s enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee!

This memorable musical anthem is built around the signature ‘SHIK SHIK SHIK,’ sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!” he further added.

Dhee shares her excitement at the launch, stating, “This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!”
Santhosh Narayanan adds, “Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!”

Here is the link to the video –

About Tata Consumer Products Limited

Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the principal food and beverage interests of the Tata Group under one umbrella. The Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices, ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals. Tata Consumer Products is the 2nd largest branded tea company in the world. Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata Gluco+. Its food portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata Soulful, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.

For more information, please visit www.tataconsumer.com

Santhosh Narayanan and Dhee to bring coffee anthem

 

 

 

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

More Articles
சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா




 

 

சூர்யா & கார்த்தி இருக்கும்போது என்னை பிரபு நம்பினார்.. – ஜீவா

 

*‘பிளாக் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு*

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது*,

“இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார்.

ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன்.

மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமிம் ராஜ் இதற்குள் வந்தார்.

அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள்.
படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.

விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை.

அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.

இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

*தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,*

“இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம்.

ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன்.

முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலா (பாலசுப்ரமணி) இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.

இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.

கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.

நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது.

படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும்” என்று கூறினார்.

*நாயகன் ஜீவா பேசும்போது,*

“இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.

விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.

நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன்.

அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.

எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

#Jiiva #PriyaBhavaniShankar #KGBalasubramani #VivekPrasanna #ShivaShahRa #SwayamSiddha #KGBalasubramani #Gokulbenoy #SamCS #MadhanKarky #SatheesKumar #PhilominRaj #MetroMahesh #SherifMaster #PotentialStudios #RThangaprabaharan #SRPrabu

Mind Twisting movie Black hollywood remake says Jiiva

 

 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem




 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

 

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee

The musical duo comes together to capture the authentic flavor of Tamil Nadu’s mornings and coffee culture with a new coffee anthem

Chennai, 1st Oct’24 – Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep – rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory.

The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ – the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee.

The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee.

This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee!

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, “We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu’s enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee!

This memorable musical anthem is built around the signature ‘SHIK SHIK SHIK,’ sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!” he further added.

Dhee shares her excitement at the launch, stating, “This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!”
Santhosh Narayanan adds, “Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!”

Here is the link to the video –

About Tata Consumer Products Limited

Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the principal food and beverage interests of the Tata Group under one umbrella. The Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices, ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals. Tata Consumer Products is the 2nd largest branded tea company in the world. Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata Gluco+. Its food portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata Soulful, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.

For more information, please visit www.tataconsumer.com

Santhosh Narayanan and Dhee to bring coffee anthem

 

 

 

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

More Articles
Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem




 

 

Tata celebrates TN’s mornings : Santhosh Narayanan and Dhee to bring Coffee Anthem

 

This International Coffee Day, Tata Coffee Grand celebrates Tamil Nadu’s Grand mornings with ‘The Shik Shik Shik Paatu’ – a musical by Santhosh Narayanan ft. Dhee

The musical duo comes together to capture the authentic flavor of Tamil Nadu’s mornings and coffee culture with a new coffee anthem

Chennai, 1st Oct’24 – Tata Coffee Grand, the packaged coffee brand from the house of Tata Consumer Products, pays ode to the rich culture and deep – rooted coffee heritage of Tamil Nadu by unveiling a new musical campaign on International Coffee Day. The new coffee anthem – ‘The Shik Shik Shik Paatu’ is created by the celebrated Tamil composer Santhosh Narayanan featuring Dhee’s captivating vocals which bring alive the grand mornings of Tamil Nadu in all its glory.

The musical, brought to life by Lowe Lintas Bangalore, celebrates the authentic sights and smells of Tamil Nadu’s mornings across various landscapes that make each day truly grand!

The rhythmic splash of water in courtyards, the drawing of kolam, the distinctive chime of bharatanatyam anklets and thandatti earrings, the fishermen chants in the morning breeze, are all woven together melodiously, set to the beat of ‘Shik Shik Shik’ – the sound of Tata Coffee Grand. This groovy anthem invokes Tamil Nadu’s unmatched love for its morning cup of coffee.

The anthem blends together the rhythmic brilliance of Santhosh Narayanan’s composition with the uniquely powerful vocals of Dhee, marking their first collaboration with Tata Coffee.

This contemporary take on Tamil Nadu’s authentic way of life is sure to be a treat for all lovers of music and coffee!

Talking about ‘The Shik Shik Shik Paatu’, Puneet Das, President – Packaged Beverages, India & South Asia, Tata Consumer Products, stated, “We are thrilled to partner with the iconic duo of Santhosh Narayanan and Dhee to bring forth this captivating coffee anthem, a melodious celebration of Tamil Nadu’s enduring love affair with its coffee. Music has the power to convey emotions and narrate stories, making this collaboration an innovatively impactful one to pay tribute to a state where every day feels like ‘Coffee Day’. An ode to a culture, its people, and their deep passion for their morning cup of coffee!

This memorable musical anthem is built around the signature ‘SHIK SHIK SHIK,’ sound of Tata Coffee Grand viz the sound of the flavor locked decoction crystals that is created by shaking the coffee pack. Through music and memorable local visuals, we pay homage to a culture where every morning is fueled by Coffee. With Santhosh Narayanan’s soulful music and Dhee’s brilliant voice, we believe this song will stir the hearts of coffee fans across the region!” he further added.

Dhee shares her excitement at the launch, stating, “This was my first-ever brand partnership, and I couldn’t be more thrilled! I absolutely love how the song turned out, especially how it celebrates Tamil Nadu’s rich culture, sounds, and deep-rooted love for coffee. That connection is really special to me. I hope everyone enjoys listening to it as much as I enjoyed creating all the ‘Shik Shik Shik’ moments!”
Santhosh Narayanan adds, “Creating this song for Tata Coffee Grand was an absolute joy! I especially loved weaving together the unique morning sounds of Tamil Nadu into one track. For me, it’s a true celebration of our culture, with coffee at the heart of it. I hope people fall in love with all the ‘Shik Shik Shiks’ and ‘Thilladis’ and keep playing it on repeat!”

Here is the link to the video –

About Tata Consumer Products Limited

Tata Consumer Products Limited is a focused consumer products company uniting the principal food and beverage interests of the Tata Group under one umbrella. The Company’s portfolio of products includes tea, coffee, water, RTD, salt, pulses, spices, ready-to-cook and ready-to-eat offerings, breakfast cereals, snacks and mini meals. Tata Consumer Products is the 2nd largest branded tea company in the world. Its key beverage brands include Tata Tea, Tetley, Organic India, Eight O’Clock Coffee, Tata Coffee Grand, Himalayan Natural Mineral Water, Tata Copper+ and Tata Gluco+. Its food portfolio includes brands such as Tata Salt, Tata Sampann, Tata Soulful, Ching’s Secret and Smith & Jones. In India, Tata Consumer Products has a reach of over 263 million households, giving it an unparalleled ability to leverage the Tata brand in consumer products. The Company has a consolidated annual turnover of ~Rs. 15,206 Crs with operations in India and International markets.

For more information, please visit www.tataconsumer.com

Santhosh Narayanan and Dhee to bring coffee anthem

 

 

 

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

More Articles
ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை




ரஜினி எப்படி இருக்கிறார்.? மருத்துவர்கள் கருத்து.. ரசிகர்கள் பிரார்த்தனை

நேற்று இரவு செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வருத்தம் தொற்றிக் கொண்டது அப்புல மருத்துவமனை அருகே ரசிகர்கள் குவிந்தனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை ரஜினியின் உடல் நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.. மேலும் அப்போல்லோ மருத்துவமனையும் ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில்… நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. மேலும் தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..

Rajinikanth health updates from Appollo

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

More Articles
ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?




ராங் ரூட்டில் (ஜெயம்) ரவி.. இப்படி ஒரு நிலையா.? மீண்டு வருவாரா ‘பிரதர்’.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.. இவரது படங்களுக்கு எப்போதும் குடும்பத்தினர் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் ரவியின் மார்க்கெட்டை காலி செய்துள்ளது..

இவரது சொந்த குடும்ப பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதாவது விவகாரத்தை செய்துள்ளார்.. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக முடிவு எடுத்துள்ளார்.. அவரை பல மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. என்னையும் என் குழந்தைகளையும் தவிக்க விட்டார்” என அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

(ஒருமுறை நாங்கள் வெளியே சுற்றிய போது ஒரு பொருளை வாங்க நினைத்தபோது எங்களிடம் பைசா இல்லை.. அருகில் இருந்து ஜெயம் ரவிவிடம் கேட்டேன்.. அவன் கூட என்னிடம் பைசா இல்லை.. மனைவியிடம் தான் பைசா இருக்கிறது என புலம்பினார் நடிகர் விக்ரம்.)

மேலும் ஜெயம் ரவிக்கு வேறு ஒரு பெண்ணுடன் அதாவது ஒரு பிரபல பாடகி உடன் தொடர்பு இருப்பதாக பல முன்னணி ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

இதனிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது..

இசை வெளியீட்டுவதற்கு முன்பாக சிலரை தனியாக சந்தித்து கவனித்து விளக்கம் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

தற்போது ‘பிரதர்’ படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை எங்கும் காணப்படுகிறது.. முக்கியமாக ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான சைரன் படம் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இதற்கு முன்பு ரவி நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய பாகங்கள் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மணிரத்தினம் ரகுமான் லைக்கா உள்ளிட்ட பிரபலங்களின் பங்கு மிகப் பெரியது.

இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது.. சொல்லப்போனால் கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய வெற்றியை ஜெயம் ரவி கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம் ராஜேஷ் உடன் கைகோர்த்துள்ளார்.

ராஜேஷின் ஆரம்பகால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் வெற்றியை பெற்றன.

ஆனால் அதற்குப்பின் (2013 முதல் 2023 வரை) அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வி எஸ் ஒ பி – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்பிள்ளை, கடவுள் இருக்கான் குமாரு, மை 3 உள்ளிட்ட அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.. தற்போது 10 ஆண்டு தோல்வி பின் ராஜேஷ் ‘பிரதர்’ படத்துடன் வருகிறார்.

பிரதர் படம் இந்த பிரதர்-களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற ‘ஜீனி’ பட பூஜை சமயத்தின் போது காலை 8 மணிக்கு பூஜை என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்திருந்தனர்.. அப்போது நிகழ்ச்சி முடிந்து பின்னர் அப்போது சிலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற போது ‘எனக்கு வேலை இருக்கிறது…’ என்றார் ஜெயம் ரவி.

கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்களை 3 மணி வரை காக்க வைத்து விட்டு இவருக்கு மட்டும் தான் வேலை இருப்பதாக சொன்னது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Jayam Ravi in wrong route Brother disappointment

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

More Articles
VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி

VETTAIYAN: மெசேஜ் செட்டாகாது.. மக்கள் என் படத்தை கொண்டாடணும் .. – ரஜினி




VETTAIYAN: ஒண்ணுமே தெரியாம வந்தேன்.. நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது.. – ரஜினி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன் ராணா டகுபதி மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சின் சில தகவல்கள் இங்கே…

மன்னன் பட சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தபோது ரவிச்சந்திரன் ஒரு குழந்தை அழைத்துக்கொண்டு வந்தார் அவர்தான் அனிருத்.. அப்போது குழந்தையை ஒரு சிம்மாசனத்தில் வைத்து போட்டோ எடுத்தேன். இன்று அனிருத் இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகிறது.. அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்..

இயக்குநர் என்னிடம் 100% அனிருத் வேணும்’னு சொன்னார். அப்போ நான் `எனக்கு 1000% அனிருத்தான் வேணும்’னு சொன்னேன்..

அமிதாப்பச்சன் நடித்த கேரக்டருக்கு சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தால் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.. அதற்கு பதிலாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்..

படத்தில் ஒரு கேரக்டருக்கு பகத் பாஸில் தேதிகள் தேவைப்பட்டது ஆனால் அவர் காட்சி கிடைக்க தாமதமானது அந்த சமயத்தில் தேதிகளை தள்ளி வைக்க தயார் பள்ளியிடம் சொன்னேன் ஒரு பக்கம் எனக்காக லோகேஷ் கனகராஜ் காத்துக் கொண்டிருந்தார் அப்போது இது குறித்த அவரிடம் சொன்னேன்.. அப்போது லோகேஷ் உடனே ஓகே சொன்னார் அப்போதுதான் புரிந்தது அவர் கதையை இன்னும் ரெடி பண்ண வில்லை என்று..

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ஒன்லைன் சொன்னதாக சௌந்தர்யா சொன்னார்.. அவரிடம் நான் பேசியபோது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க.. எனக்கு மெசேஜ் செட் ஆகாது.. மக்கள் கொண்டாடனும்.. கமர்சியலா இருக்கணும் என்றேன்.. அவர் பத்து நாட்கள் டைம் கேட்டார்.. ஆனால் இரண்டு நாட்களில் எனக்கு போன் செய்து பேசினார்..

நான் கமர்சியலா பண்றேன்.. ஆனால் நெல்சன் லோகேஷ் மாதிரி இருக்காது.. ஆனால் ரசிகர்களுக்கு உங்களை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் காட்டுகிறேன் என்றார்… எனக்கும் அதுதான் வேணும் என்றேன்.. அதுபோல வேணும் என்றால் நான் லோகேஷ் நெல்சனிடம் சென்று இருப்பேனே என்று சொன்னேன்..

சகுனிகள் இருக்கிற சமுதாயத்தில நல்லவனா இருந்தா பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்…

சினிமாவுக்கு வந்து 50 வருஷம் ஆகப்போகுது ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன். நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன்..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்..

Rajini speech at Vettaiyan Audio launch

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

More Articles
அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்




அத்வே நடிக்கும் பான் இந்தியா ‘சுப்ரமண்யா’ பட போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

*அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!*

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.

“சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.

குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது.

நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Advay starrer Pan India Subramanya movie poster launched

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!




மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

More Articles
அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்




அபிஷேக் – சேத்தன் – தேவதர்ஷினி இணையும் ‘தலைவெட்டியான் பாளையம்’ ரிலீஸ்

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரை, தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகியோர் உட்பட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடத்தில் தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தலைவெட்டியான் பாளையம் திரைப்படம் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் திரையிடப்படவிருக்கிறது.

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார்.

இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

Thalaivettiyaan Palaiyam streaming from 20th September

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!




மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்




DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..

வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.

எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.

இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.

இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai

More Articles
நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு




நிவின்பாலி மீது 40 வயது பெண் பாலியல் புகார்.; சட்டப் போராட்டம் நடத்த நடிகர் முடிவு

*நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம்*

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், ‘அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

Actor Nivin Pauly sexual Abuse case news

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!




மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்




DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..

வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.

எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.

இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.

இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’




ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

எல்லா ஜீவராசிகளுக்கும் தாம்பத்யம் உறவு இருந்தாலும் திருமணம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு அற்புதமான தருணமாகும்.

அந்த திருமணம் பந்தத்தை சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் திருமண உறவுகளை சொல்ல வரும் படம் தான் ‘விழி அருகே’..

திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் ஆண்டோ (ANTO) படமாக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விழி அருகே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.

இதில் சஜிதா நாயகியாகவும் ஜெகதீஷ் நாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணி காந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளிவர நிலையில் அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

எனவே எங்களுடன் இணைந்து இருங்கள்..

Sajitha and Jagadish starring Vizhi Arugae

—–

More Articles
அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்

அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படம்..; லோகேஷ் இயக்குகிறார்




அந்தகனை அடுத்து சிம்ரனின் பான் இந்தியா படத்தை இயக்கும் லோகேஷ்

சிம்ரன் தனது புதிய படமான ‘தி லாஸ்ட் ஒன்’ (‘The Last One’) மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்*

*தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’*

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது.

இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக் கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

After Andhagan Simran next titled The Last One

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்




விஜய் டிவி குமரனை சினிமாவுக்கு கொண்டு வரும் ‘யாத்திசை’ தயாரிப்பாளர்

யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்’ ஆகும்.

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார்.

ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

திரைப்படத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay TV fame Kumaran debut as lead on movie

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!




மனிதர் உணர்ந்து கொள்ள.. இனி திரையரங்குகளில் ஒலிக்கும்.; குணா ரீ-ரிலீஸ் தடையில்லை.!

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவன தரப்பில், விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.

மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, குணா மறுவெளியீடு திரையரங்க வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Guna movie re release issue solved at Court

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்




DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..

வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.

எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.

இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.

இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’




ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’

எல்லா ஜீவராசிகளுக்கும் தாம்பத்யம் உறவு இருந்தாலும் திருமணம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு அற்புதமான தருணமாகும்.

அந்த திருமணம் பந்தத்தை சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் திருமண உறவுகளை சொல்ல வரும் படம் தான் ‘விழி அருகே’..

திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் ஆண்டோ (ANTO) படமாக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘விழி அருகே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.

இதில் சஜிதா நாயகியாகவும் ஜெகதீஷ் நாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணி காந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளிவர நிலையில் அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

எனவே எங்களுடன் இணைந்து இருங்கள்..

Sajitha and Jagadish starring Vizhi Arugae

—–

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்




அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் விஜய்யின் GOAT ரிலீஸ்

*ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் விஜய்யின் ‘கோட்’ படம்*

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோகளின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது. இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

முன்னதாக “மாஸ்டர், பீஸ்ட்” என தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், லியோ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்டு, வெற்றிப்படங்களாக மாற்றிய இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கோட் படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் இப்படத்தை வெளியிடுகிறது.

அட்வான்ஸ் புக்கிங் ஓபனான நிலையில் தற்போது பல முந்தைய தென்னிந்திய திரைப்பட சாதானைகளை முறியடித்து வருகிறது. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தெலுங்கில் ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தினையும் ஓவர்சிஸில் வெளியிடுகிறது. RRR படத்திற்கு பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருக்கும் தேவாரா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Grand release Vijays Goat movie in America

More Articles
Follows