‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மல்லி’ டிவி சீரியலில் கலக்கும் 1980ஸ் ஹீரோயின்ஸ் அம்பிகா – பூர்ணிமா – நளினி

1980-களில் தென்னிந்திய திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர்.

நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா..

மூன்று முன்னாள் நாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர்.

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

விஜய், நிகிதா,பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக், மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

திரைக்கதை & வசனம் : தமயந்தி
ஒளிப்பதிவு : விஸ்வநாத்
இசை : தரண்
இயக்கம் : ஸ்டாலின்
படைப்பாக்கம் : நீடா.கே.சண்முகம்
படைப்பாக்கத்தலைமை : ப்ரின்ஸ் இம்மானுவேல்

Ambika Nalini Poornima starring in Malli Sun Tv Serial

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்காக அல்ல.. ‘நீட்’ மனவலியை உரக்கச் சொல்லும் ‘அஞ்சாமை’… – விதார்த்

*“மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது…”

*“’அஞ்சாமை’ படம் வாணி போஜனை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்” என ஆச்சர்யம் பகிரும் விதார்த்..

சினிமாவில் கமர்ஷியல் வெற்றியை நோக்கி பல நாயகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் நடிப்பிலும் தனக்கென ஒரு தனி பாணியை பின் பற்றி வருகிறார் நடிகர் விதார்த்.

படம் வெற்றி பெறுமா, கமர்ஷியல் அம்சங்கள் இந்தப்படத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இந்த கதையும் கதாபாத்திரமும் நம் நடிப்புக்கு தீனி போடும் விதமாகவும், மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் தன்னை பிரதிபலிப்பது போன்று தான் அவரது கதை தேர்வுகள் இருக்கின்றன.

அப்படி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் விதார்த். தற்போது ஜூன்-7ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அஞ்சாமை’ படத்திலும் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுவதால் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. விதார்த்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். நீட் தேர்வை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து நாயகன் விதார்த் கூறும்போது…

“நான் படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக கதையை மட்டும் தான் பார்க்கிறேன். அந்தவகையில் ‘அஞ்சாமை’ படம் சிலர் சொல்லுவது போல வைரலாக ஒரு சர்ச்சையை உருவாக்கும் கதையா என்றால் சர்ச்சையை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.. படம் வெளியாகும்போது அது உங்களுக்கே தெரியும்.

எந்த ஒரு விஷயத்தையும் ஜோடனையாகவோ அல்லது அதிகப்படுத்தியோ சொல்லாமல் இந்த படம் உண்மையை பேசி உள்ளது என்று நம்புகிறேன். நீட் தேர்வுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்கிற விஷயத்திற்குள்ளேயே நாங்கள் போகவில்லை.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் நடைபெற்ற சமயத்தில் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விடுவேன். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்த படத்தை பார்த்துவிட்டேன்.

மக்களுடைய மனநிலையை, மக்களின் வலியை சொல்லும் விதமாக இந்தப்படம் உண்மையை பேசி இருக்கிறது என்று தான் நான் புரிந்து கொண்டேன். சும்மா சொல்லக்கூடது, நடிகை வாணி போஜனை இந்த படம் வேற லெவலுக்கு கொண்டு செல்லும். இதற்குப் பிறகு அவர் என்ன பண்ணப் போகிறார் என எதிர்பார்க்க வைக்கும் விதமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

என்னுடைய மகள் ஏழாவது படிக்கிறாள். புத்தகத்தை மட்டும் தலையில் வைத்துக்கொள் என்று அவளை கட்டாயப்படுத்துவதில்லை. நடனமோ, இசையோ எது பிடித்திருக்கிறதோ அதற்கு அவள் விரும்பியபடி செல்கிறாள்.

இன்று இருக்கும் குழந்தைகள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தான் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களை ஆதரித்தால் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன். நான் நடிகனாக விரும்பியதை எனது பெற்றோர் ஆதரித்ததால் தானே இந்த இடத்தில் நான் இருக்கிறேன் ?. ஒவ்வொரு நாளும் என் பெண் பேசும் விஷயங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என் பெண்ணிடம் நான் ஏதாவது சொல்வதை விட இன்றுவரை அவளிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று தான் பார்க்கிறேன்.

குழந்தைகள் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை படிக்கிறார்கள். நாம் தான் அவர்களின் ரிசல்ட்டை நோக்கி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவர்களது கல்வி குறித்து இப்படி முடிவு எடுத்திருக்கலாமோ, அப்படி முடிவு எடுத்திருக்கலாமோ என்றெல்லாம் குழப்பிக் கொள்ள தேவையில்லை. சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

என்னுடைய வேலை நடிப்பது மட்டும்தான். என் படங்களும், எல்லா படங்களும் ஓட வேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி ஓடினால் தான் என்னை இயக்க இருக்கும் அத்தனை பேர்களுக்கும் தங்களது கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு விதார்த் கூறியுள்ளார்.

Vidharth interview about Anjaamai movie and Neet exam

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் “இந்தியன்”.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதில் விவேக், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் மிகப்பிரமாண்டமாக தயாரிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்.. ங்கர் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜூன் ஒன்றாம் தேதி இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாரா, நீலோற்பலம், காலண்டர், கதறல்ஸ், கம் பேக் இந்தியன், சகசக ஆகிய ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆறு பாடல்களும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

கம் பேக் இந்தியன்.. தாத்தா வராரு கதற விடப் போறாரு… என்ற பாடலுக்கு அனிருத் மேடையில் ஆடி ரசிகர்களை கதறவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்புவின் பேச்சும் மேடையில் பரபரப்பை உண்டாக்கியது.

கமல் பேசும்போது தேவர் மகன் படத்திற்கு பிறகு சிவாஜி அவர்களை வைத்து நான் மகனாக அவர் தந்தையாக நடிக்க ஒரு படத்தை இயக்க காத்திருந்தேன்.. அந்த சமயத்தில் தான் ஷங்கர் இந்தியன் படத்தின் கதையை கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு படத்தின் கருவும் ஒன்றே ஆகும் அப்போது சிவாஜி அவர்களிடம் இது பற்றி சொன்னபோது நான் அப்பா நீ மகன் என்று இரு கேரக்டர்களை விட நீயே தந்தை நீயே மகன் என்ற கேரக்டர் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார் அதற்கு பிறகு தான் இந்தியன் உருவானது என்றார் கமல்ஹாசன்.

இயக்குனர் ஷங்கர் பேசும்போது… உலகத்திலேயே கமல் போல ஒரு நடிகரை எங்கும் பார்க்கவே முடியாது.. 360 டிகிரியில் நடிக்கக்கூடிய ஒரே நடிகர் அவர்தான். கேமரா எங்கு வைக்கப்பட்டிருக்கிறது? எந்த ஆங்கிளில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை நடிகர்கள் நடிக்கிறார்கள்? நாம் எப்படி நடிக்க வேண்டும் என்று எல்லா விஷயத்தையும் கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட்டு நடிக்கக்கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

தற்போது 361 நடிகராகவும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார். அவரின் அர்ப்பணிப்பு அளப்பறியாது. முதன்முறையாக அவர் இந்தியன் படத்திற்காக தாத்தா வேஷம் போட்டு வந்த போது எனக்கு மெய் சிலிர்த்தது.. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இந்தியன் தாத்தா வேடத்தில் வந்தது அதே மெய்சிலிர்க்கும் உணர்வு வந்தது.

சின்னக்கலைவாணர் விவேக் இப்போது இல்லை. ஆனால் இந்தியன் 2 வந்த பிறகு விவேக் என்றும் நம்முடன் இருப்பார்.. அவருக்கும் கமலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இல்லை.. ஆனால் இந்தியன் 3 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கிறது.” என்று பேசினார் சங்கர்.

நள்ளிரவு ஒரு மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சித்தார்த் என்பதும் பாய்ஸ் படத்தில் இயக்குனர் சங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சித்தார்த் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளாதது ஏன் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,..

“என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கருக்கு தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய திட்டங்களினால் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.

Indian2 Audio launch highlights Kamal Shankar speech

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!*

*ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலி கலவையை ரஹ்மத்துல்லாவும் கையாண்டிருக்கிறார்கள்.

கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கிரைம் திரில்லர் வகையிலான படைப்பில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ‘பயமறியா பிரம்மை’ தரும்” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ‘பயமறியா பிரம்மை’ எனும் இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bayamariya Brammai First Look launched

Here is the first look of #SixtyNineMMFilm – #ProductionNo1 titled #BayamariyaBrammai – Get ready for an exciting cinematic experience coming to theatres near you soon.

#BayamariyaBrammaiFirstLook

@69mmfilmoffl @jagadishAKAJD @badappleanime @jaiviratra @nandyphotograph @pravsmith @invisibleart94 @baro_n_d @harishuthaman @actorjohnvijay @iDivyaGanesh @actorjackrobin @akhilprakashgpb @svijayrathinam @amrahmathulla @proyuvraaj

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

1980-களில் ரஜினி கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களுக்கு நிகராக வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் மோகன்.

இவரது படத்தில் இளையராஜாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் இணைந்தால் அந்தப் பட பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்..

இப்படியாக திரை உலகை கலக்கி கொண்டிருந்த மோகன் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

மீண்டும் நடித்தால் கதையின் நாயகனாகவே நடிப்பேன் என்று காத்திருந்த மோகனை மீண்டும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹரா’. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

ஓரிரு தினங்களுக்கு முன் ‘ஹரா’ படத்தின் டிரைலரும் வெளியாகி இதுவரை 15+ லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி ஹரா படம் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸை கொண்டாட காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள்.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரள மற்றும் கர்நாடகாவிலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட இருக்கின்றனர்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

மலையாள நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் சீனியர் நடிகர் சாருஹாசன், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், ஜெயக்குமார், ரயில் ரவி, சுரேஷ் மேனன் தீபா ஷங்கர், சிங்கம்புலி, ஆதவன், அனித்ரா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரஹத் முனியசாமி மற்றும் மனோதினகரன் இருவரும் கையாண்டுள்ளனர்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இந்த பட எடிட்டிங் பணிகளை குணா செய்து இருக்கிறார்..

ஜூன் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இதன் வெளியீட்டை பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பெற்று வருகின்றன.

தமிழக வெளியீடு உரிமையை எல்மா என்ற நிறுவனமும் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் பெற்றுள்ளது.

‘ஹரா’ படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் கோவை மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

Haraa movie release and Business updates

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,

“இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவது அவரைக் கொண்டு வருகிறோம் என அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டோம். அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் படத்தில் வரவேண்டும் என்று விரும்பினோம்.

ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைப் போன்ற லெஜெண்ட் சத்யராஜ் சாரிடம் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்டோம். உடனே ஒத்துக் கொண்டார். விஜய் ஆண்டனி சார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மூன்று வருடங்கள் உழைத்து விஜய் மில்டன் நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுங்கள்”.

இயக்குநர் விஜய் மில்டன்…

“தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனி சாரை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ’மழை பிடிக்காத மனிதன்’ வெறும் ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்‌ஷன் ஜானர்.

இந்த வார்த்தையை தனஞ்செயன் சார்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என லொகேஷனை போராடி எங்களுக்கு தனஞ்செயன் சார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சார் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமார் சாரிடம் நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ‘சூர்யவம்சம்’ காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லி விட்டார். விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், என்னுடைய தொழில்நுட்பக் குழு என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்”.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி…

“அருமையான படம் செய்துள்ளோம். இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் ஆண்டனி சார், சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை மேகா ஆகாஷ்…

“எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.

நடிகர் சத்யராஜ்…

“எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன்.

இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ்.

கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன்.

மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்.”

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நான் நடிக்கிறேன்.. மோடி பயோபிக் படம் தொடர்பாக யாரும் பேசல.. அந்த படத்தை வெற்றிமாறன், ரஞ்சித், மாரி போன்றவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்.. ” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி…

“பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.

அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

Sathyaraj speech at Mazhai Pidikkatha Manithan event

🎬 @vijaymilton
@vijayantony #Sathyaraj @realsarathkumar @akash_megha #SaranyaPonvannan @murlisharma72 @Dhananjayaka @AmbarPruthvi @FvInfiniti
@SureshChandraa
@AbdulNassarOffl
@trendmusicsouth @DoneChannel1 @digitallynow

More Articles
Follows