தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜீவா, நயன்தாரா, கருணாஸ், கோபிநாத், மீனாட்சி, சரத் லோகித்ஸ்வா, ஜோ மல்லூரி, ஜெயபாலன், மாரிமுத்து, முனீஷ்காந்த் மற்றும் பலர்.
இசை : ஸ்ரீ
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துஸ்வாமி
படத்தொகுப்பு : விடி விஜயன்
இயக்கம் : பி.எஸ். ராம்நாத்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கோதண்டபாணி பிலிம்ஸ்
கதைக்களம்…
பிளேட் (ஜீவா) பிரபல ரவுடியிடம் (சரத்) அடியாளாக வேலை செய்கிறார். ரவுடியும் நயன்தாராவின் தந்தையும் (ஜோ மல்லூரி) தொழில்முறை பார்ட்னர்கள்.
ஒரு சூழ்நிலையில் பார்ட்னர்ஷிப் முறிய, நயன்தாராவை காதலிக்கும் ஜீவா தன் வருங்கால மாமனாருடன் செல்கிறார்.
இதனால் ஜீவா வாழ்க்கையில் ஏற்படும் பின் விளைவுகளே படத்தின் கதை.
கதாபாத்திரங்கள்…
முடியே சீவாத தலை, லுங்கி, டைட் சர்ட் என பிளேடாக நடித்துள்ளார் ஜீவா. சிறுது நாட்களாக ஐடி பாய் ஆக வந்த இவர், மீண்டும் கிராமத்து வேடத்துக்கே சென்றுள்ளார்.
ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க செய்கிறார். இறுதியாக திருந்தி வாழ நினைக்கும் போது வில்லன் காலில் விழந்து கலங்க வைக்கிறார். மற்ற ஹீரோக்கள் இதுபோல் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தாவணியில் வந்து இளம் நெஞ்சங்களை தத்தளிக்க வைக்கிறார் நயன்தாரா.
டீச்சராக வந்து, கண்ணழகிலும் இடையழகிலும் கொஞ்சம் பாடம் எடுக்கிறார். ஆனால் அறிமுக காட்சிகளில் கொஞ்சம் ஓவராக பேசு அதகளம் செய்கிறாரே? அது ஏன்..?
வில்லன் சரத், சைலண்டாக வந்து வைலண்டாக மிரட்டியிருக்கிறார்.
இவருடன் படுக்கை அறை காட்சிகளில் வரும் மீனாட்சி சூடேற்றுகிறார்.
கோட் சூட் இல்லாமல், முறுக்கு மீசை தாடியுடன் வருகிறார் விஜய்டிவி கோபிநாத்.
நீயா? நானா? மேடையில் காணாமல் போவது போல் கொஞ்சம் நேரத்திற்கு பிறகு மீண்டும் வருகிறார். ஆனால் வலுவான காட்சிகள் இவருக்கு இல்லை.
தேவையில்லாத காட்சிகளை வெட்டி, முனிஷ்காந்துக்கு காட்சிகளை கொடுத்து சிரிக்க வைத்திருக்கலாம்.
இவர்களுடன் கருணாஸ், ஜோ மல்லுரி, ஜெயபாலன், மாரிமுத்து ஆகியோர் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஸ்ரீயின் இசை படத்திற்கு பலம். பழைய சோறு, பங்காளி, திட்டாதே ஆகிய பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.
மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு மனதிற்கு ஆறுதல். விடி விஜயன் கத்திரிகோலுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார். நிறையவே வெட்டியிருக்கலாம்.
படத்தின் ப்ளஸ்…
- நாயகன் ஜீவா, வில்லன் சரத் ஆகியோரின் நடிப்பு
- குத்துப் பாடலும் ஓகே மெலோடியும் ஓகே.
- ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துஸ்வாமியின் கிராமத்து காட்சிகள்
படத்தின் மைனஸ்…
- கத்தியை எடுத்தவனுக்கு கத்தியில்தான் சாவு என்ற தெரிந்த கதை
- ரவுடி திருந்த நினைப்பான், பின்னர் தொல்லை கொடுக்கும் வில்லன் கோஷ்டியை போட்டுத்தள்ளுவது என்ற பார்முலா
- பாடல்கள் பக்காவாக இருந்தாலும் தேவையில்லாத இடத்தில் வந்து பொறுமையை சோதிக்கிறது
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் காமெடி, வலுவான கதை என அனைத்தையும் கொடுத்த ராம்நாத், இதில் கமர்ஷியல் மசாலாவை கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் திருநாள்… ஒருமுறை பார்க்கலாம்.