தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
நடிகர்கள் – ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா
இசை – ஷான் ரகுமான்
இயக்கம் – சந்தோஷ் ராஜன்
காதலியை காணச் செல்லும் காதலன் காண்டம் வாங்கி சென்றதால் ஏற்படும் பிரச்சனை தான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
கதைக்களம்..
2050 ஆண்டில் கதை தொடங்குகிறது.. மொட்ட ராஜேந்திரனிடம் விடிவி கணேஷ் காதல் கதையை சொல்லுவதாக படம் தொடங்குகிறது.
ஜீவா ஒரு ஜாலியான பேர்வழி. இவருக்கு காம விஷயங்களில் ஆலோசனை சொல்பவர் விடிவி கணேஷ். இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
எந்த வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவாவை அவரது அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் திட்டுவது வழக்கம்.
ஒரு கட்டத்தில் ஜீவா வசிக்கும் அதே தெருவில் யமுனா ஜமுனா என இரு கன்னிப் பெண்களை கொண்ட மலையாளி குடும்பம் குடி வருகிறது.
முதலில் தங்கை ஜமுனாவை பார்த்ததும் ஜீவா சைட் அடிக்கிறார். அதன் பிறகு தான் அவளது அக்கா காஷ்மீராவை பார்க்கிறார். காதல் கொள்கிறார்.
இப்படியாக ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் இரவு நேரத்தில் தன்னை பார்க்க வீட்டுக்கு அழைக்கிறார் கஷ்மீரா.
அப்போது கணேஷ் சொன்னதன் பேரில் போகும்போது ‘காண்டம் கொண்டு செல்கிறார்..்என்னை பார்க்க வரும் நீ காண்டம் கொண்டு வருகிறாய் என்றால் என்னை நீ காதலாக பார்க்கவில்லை காமத்தோடு தான் பார்க்கிறாய் என சண்டை போடுகிறார்.
இதனால் காதலர்களுக்கு பிரிவு வருகிறது.. அதன் பிறகு என்ன ஆனது என்பதே இந்த வரலாறு முக்கியம்.
கேரக்டர்கள்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு SMS பட பாணியில் ஒரு காமெடி மற்றும் காமெடி விருந்து படைத்துள்ளார் ஜீவா.
மலையாளி பெண்ணிடம் கெஞ்சுவதும் மலையாளம் கற்று கொஞ்சுவதும் என இந்த குளிருக்கு ஜில்லென்று சூடேற்றி இருக்கிறார் ஜீவா. முக்கியமாக ஜீவா பெண் வேடமிட்டு வரும் காட்சிகள் செம சூப்பர்.
நாயகிகள் இருவரும் மலையாளியாக நம்மை கொல்கின்றனர். காஷ்மீரா பர்தேஷி தங்கையாக பிரக்யா நக்ரா. இருவரும் அழகான நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஆலோசகர் வரும் வீடிவி கணேஷ் வேற லெவல்.. எப்படி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு ஒரு ஆலோசகராக இருந்தாரோ அதையெல்லாம் தாண்டி இந்த படத்தில் வயாகரா சாப்பிடும் அரசியல்வாதியாக வெளுத்து கட்டி இருக்கிறார்.
இவர்களுடன் கே எஸ் ரவிக்குமாரின் முன்னாள் காதலி என படம் முழுவதும் கலகலப்பாக செல்கிறது.
சரண்யா பேசும் வசனம் சூப்பர்.. கல்யாணம் ஆன ஆண்களுக்கு பல ஆட்டோகிராஃப் இருக்கலாம்.. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆட்டோகிராஃப் இருக்கக் கூடாதா? என அவர் கேட்கும்போது பெண்களே விசிலடிப்பார்கள்..
மலையாள அப்பாவாக சித்திக் நடித்துள்ளார். அவருக்கான காட்சிகளில் சிறப்பு. இவரின் மனைவியாக நடித்தவரும் கேரளத்து அழகு சேச்சி..
டெக்னீஷியன்கள்…
படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன. வழக்கம் போல ஒரு காதல் பாட்டு.. ஒரு சரக்கு பாட்டு என கலகலப்பு சேர்த்துள்ளார்.
ஆனால் இது போன்ற காம நிறைந்த காதல் படத்தில் அழகான மெலோடி கொடுத்திருக்கலாம்.. ஐட்டம் பாட்டும் கொடுத்திருக்கலாம். அதை தவற விட்டுள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு பெரும் பலம். மலையாள குட்டிகளை காட்டும் போது கேமரா மேன் ரசித்து ரசித்து காட்டியிருக்கிறார்.
அறிமுக இயக்குனர் என்றாலும் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்து சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர்.
2050ல் கதை தொடங்குவதால் அதற்கேற்ப சில நகைச்சுவை காட்சிகளையும் இணைத்துள்ளார்.. பழம்பெரும் நடிகர் சிம்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் பார்ட் 2 வருமா என ஏங்கி நிற்கிறார்?! எனவும் ஆர்யா எங்கப்பா.. அவரு எங்கயாச்சும் சைக்கிள் ஓட்டிட்டு இருப்பாரு எனவும் கலகலப்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் உள்ள படம் என்பதனால் வரலாறு முக்கியம் என டைட்டில் வைத்தார்களே என்னவோ அதற்கான காரணம் இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்..
ஆக வரலாற முக்கியம்.. வயசுக் கோளாறு அவசியம்..