தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
அசிஸ்டன்ட் கமிஷனர் ஜெயம்ரவி. இவரது நெருங்கி நண்பர் நரேன். நரேனின் மனைவி விஜயலட்சுமி. நரேனின் தங்கை நயன்தாரா.
சிட்டியில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனால் காவல்துறை பரபரப்பாகிறது.
ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லரை ஜெயம் ரவியும் நரயினும் பிடித்து விடுகின்றனர். குற்றவாளி பிடிபட்டாலும் நரேன் மரணம் அடைகிறார்.
நண்பன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை விட்டு விடுகிறார். சில தினங்களில் சைக்கோ கில்லர் சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார்.
அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்களை கொலை செய்கிறான். காக்கி சட்டையை கழட்டி போட்ட ஜெயம்ரவி என்ன செய்தார்? கில்லரை கண்டுபிடித்தார்? அவனின் நோக்கம் என்ன? காவல்துறை என்ன செய்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
முகத்தில் ஒரு துளி கூட சிரிப்பு இல்லாமல் முறைக்கிறார் கோபம் கொள்கிறார் சண்டையிடுகிறார் இதுதான் ஜெயம் ரவியின் வேலை. தனி ஒருவனில் பார்த்த போலீஸ் கதாபாத்திரம் ஒரு துளி கூட இதில் இல்லை.
ஆனால் ரவி – நயன் ஜோடியை பார்க்கும் போது தனி ஒருவன் படம் கண் முன் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை.
படம் தொடங்கி 20 நிமிடத்திற்குள் மலையாள நடிகர் நரேன் காட்சி முடிந்து விடுகிறது. ஒரு நல்லதொரு நடிகருக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.
அது போல ஆசிஷ் வித்யார்த்தி அழகம்பெருமாள், விஜயலட்சுமி, ஹீரோயின் நயன்தாரா என அனைவரது கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதில் கொஞ்சம் தப்பி பிழைத்தவர் சார்லி. போஸ்ட்மாடம் செய்யும் பாத்திரத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நயன்தாராவுக்கும் ஜெயம் ரவிக்கும் எப்போதும் கெமிஸ்ட்ரி செட்டாகாது போல. தனி ஒருவன் படத்திலும் ரவியை துரத்தி துரத்தி காதலிப்பார் நயன்தாரா. இதிலும் அதே நிலைதான். நயன்தாரா என்ற பிராண்டுக்காக கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலையை நினைத்து இருந்தால் இயக்குனர் இவரை கமிட் செய்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக லோ பட்ஜெட் நாயகியை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
ஸ்மைலி கில்லராக ராகுல் போஸ். அதற்குப் பின் அதே சைக்கோ கில்லராக வினோத் கிஷன். இவரைப் பார்த்ததுமே கொலைகாரன் என ஜெயம் ரவி கண்டுபிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
டெக்னீசியன்கள்…
ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த் தன் பணியை மிகவும் சிரமப்பட்டு செய்து இருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன்னுடைய பணியை உணர்ந்து செய்து இருக்கிறார்.
எடிட்டர் இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம். வினோத் கிஷனின் ஓவர் ஆக்டிங்.. கொலையைப் போலவே ஓவர் டோஸ் ஆக இருக்கிறது..
யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்தாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.. பாடல்கள் கவரவில்லை.. பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது.
‘என்றென்றும் புன்னகை’ என்ற அருமையான படத்தை கொடுத்த அகமது தான் இந்த படத்தையே இயக்கியிருகிறார். அவரிடம் இருந்து இப்படி ஒரு கொடூரமான படமா? என்று எண்ண வைக்கிறது.
‘இறைவன்’ என்ற தலைப்பை இதுவரை யாருமே வைத்ததில்லையா என ஜெயம் ரவி சமீபத்திய நிகழ்ச்சியில் கேட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த பிறகு இறைவா என்று அழைக்க கூட பக்தர்கள் அஞ்சுவார்கள்.
12 கொலைகள் அடுத்தடுத்து மீண்டும் கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் கிராஃபிக் செய்யப்பட்ட நிர்வாணமாக இருந்தாலும் படம் பார்க்கும் நம்மீதே ரத்த வாடை அடிக்கிறது.
கடத்தல், நிர்வாணம், துண்டு துண்டாக வெட்டி கொலை வன்முறை என கிரைம் தில்லர் பாணியில் படங்களை எடுத்து ரசிகர்களை இம்சை செய்ய வேண்டாம் தமிழ் இயக்குனர்களே.
நல்ல கதைகளை கொண்டு வாருங்கள் ரசிகர்களுக்கு விருந்தளியுங்கள் என்று இந்த விமர்சனம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
(இதேபோன்று கதைகளத்துடன் தான் ராட்சசன் படம் வெளியானது. ஆனால் அது ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் முதிர்ச்சியான ஸ்கிரிப்டுடன் படமாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)
கலை இயக்குனரின் பணியை பாராட்ட வேண்டும். கொலை வன்முறை என எதுவாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய கலைப் பணியை சிறப்பாக செய்துள்ளார்.
கதை திரைக்கதை மோசமாக இருக்கும் பட்சத்தில் அனைவரது உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
ஆக இறைவன்… இரக்கமே இல்லையா ரவி?
Iraivan movie review and rating in tamil