தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜீ.வி.பிரகாஷ்குமார், அர்த்தனாபினு, காயத்ரி, யோகி பாபு, ஜனா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பசங்க சுஜாதா மற்றும் பலர்
இயக்கம் – வள்ளிகாந்த்
ஒளிப்பதிவு – எம்.சி. விவேகானந்தன்
இசை – ஜிவி. பிரகாஷ்
எடிட்டிங் – பிரதீப். ஈ.ராகவ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு – பாண்டிராஜ் மற்றும் லிங்கா பைரவி ரவிச்சந்திரன்
கதைக்களம்…
நம்ம ஹீரோவுக்கு 3 மாதத்தில் கல்யாணம் நடக்கலேன்னா 6 வருசத்துக்கு கல்யாணம் நடக்காது என்கிறார் ஜோசியர்.
எனவே ஜிவி. பிரகாஷின் அம்மா சுஜாதா தினம் தினம் பெண் தேடும் படலத்தை நடத்துகிறார். கூடவே ஜிவியின் நண்பர் ஓமகுண்டமாக வருகிறார் யோகிபாபு.
தெரு தெருவாக காய்கறி விற்பது இவர்களது தொழில் என்பதால் அதை மறைத்து மொத்த விலை காய்கறிகள் விற்பனை செய்கிறோம் என்கிறார்கள்.
ஏற்கெனவே பண கஷ்டத்தில் இருக்கும் கேட்டரிங் மன்சூர் அலிகான், ஜிவி. பிரகாஷை தன் மாப்பிளையாக்கி கொண்டால் சமையலுக்கும் தன் செலவுக்கும் பணம் கிடைக்கும் என்பதால் ஓகே சொல்லுகிறார்.
இதனிடையில் மன்சூர் அலிகானின் மகள் அர்த்தனா மீது எம்எல்ஏ மகன் ஆசைப்படுவதால், ஜிவி. பிரகாஷின் நிச்சயத்தை ரத்து செய்ய உத்தரவிடுகிறார் மன்சூர்.
அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்..? அர்த்தனாவை கரம் பிடித்தாரா? மன்சூர் அலிகான் வில்லன் ஆனாரா? என்பதே இந்த செம.
கேரக்டர்கள்…
நாச்சியார் படத்தில் பார்த்த சிறந்த நடிகர் ஜிவி. பிரகாஷை இந்த படத்தில் எதிர்பார்த்து செல்லாதீர்கள். வழக்கமான ஒரு பையனாக வந்து செல்கிறார்.
சில சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஜோசியர் இவர் கேரக்டர் பற்றி கொடுக்கும் பில்டப்புகள் ரசிக்கலாம்.
இப்போது எல்லாம் யோகிபாபு இல்லாத படங்களே இல்லை. அதுபோல்தான் இதுவும். அவர் இல்லேன்னா இந்த படம்..?
ஒரு பெண் இவரிடம் காய்கறி வாங்க வரும்போது.. வா ராஞ்சிதா நித்யானந்தா எப்படி இருக்காரு ?”, “ஆண்டவன் நல்லவங்களை தான் சோதிப்பான்…. ஆனா மச்சி உன்ன ஏன் சோதிக்கிறான்னு தெரியல… என பன்ச் பேசி நம்மை செமயாய் ஈர்க்கிறார்.
சில நேரங்களில் இவர் டயலாக் பேசும்போது மற்றவர்களும் பேசுவதால் ஓவர் லேப் ஆகிறது. (முக்கியமாக பஸ் மற்றும் கேர்ள் பிரண்ட் காட்சிகள்)
அழகு பெண்ணாக வருகிறார் அர்த்தனா பினு. நடிப்பில் பாஸ் மார்க் கொடுக்கலாம்.
காயத்ரி சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் கெட்டிதான்.
இரண்டாம் பாதி முழுவதும் கோவை சரளா ரவுண்ட் கட்டி அடிக்கிறார்.
மன்சூர் அலிகான் அட்டாக் பாலுவாக வந்து அசத்திவிடுகிறார். அந்த அட்டாக் பெயர் டெரர் அட்டாக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊருக்குள் புரளி பேசும் அந்த கருப்பு கலர் பொம்பள நடிப்பில் கலக்கல்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எம்.சி. விவேகானந்தன் ஒளிப்பதில் காட்சிகள் அழகு. எல்லா கேரக்டர்களையும் அழகாக காட்டியிருக்கிறார்.
பிரதீப். ஈ.ராகவ் படத்தொகுப்பில் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.
ஜீவி பிரகாஷ் குமார் இசையில் “ஏய் உருட்டு கண்ணால… “, “சண்டாளி…” பாடல்கள் ரிபீட்டு மோட்.
படத்தின் தயாரிப்பாளர் (இயக்குனர்) பாண்டிராஜ் தான் இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.
பெங்களுர் தக்காளி இருக்கா?ன்னு ஒருவர் கேட்கும்போது “தண்ணி தராத ஊருல இருந்துல்லாம் தக்காளி வாங்கறதுல்ல…. ” என்கிற டயலாக்கும் “எம்எல்ஏ இருக்காரா ? அவரு கூவத்தூரு போயிருக்காருண்ணே….” என்கிற டயலாக்குகள் அரசியல் நெடி செம.
ஆனால் இதில் கொடுத்த கவனத்தை செம டைட்டிலுக்கு கொடுத்திருக்கலாம்.
வழக்கமான கதைக்களமாக இருந்தாலும் அதை வலுவாக கொடுத்திருக்கலாம் வள்ளிகாந்த்.
செம… ஆமா எதுக்கு இந்த டைட்டில்..?
Sema movie review rating