தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கௌதம் கார்த்திக், சனா மக்புல், சித்திக், ஆனந்த், டேனியல், லள்ளு மற்றும் பலர்.
இயக்கம் : ராஜ்குமார் பெரியசாமி
இசை : விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : அனீஷ் தருண்குமார்
எடிட்டர்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : இயக்குனர் ஏஆர். முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார்
கதைக்களம்…
ரங்கூன் என்பது பர்மா நாட்டில் உள்ள ஒரு பகுதியின் பெயர்.
“பிறப்பது ஈஸி, சாகறது ரொம்ப ஈஸி ஆனா வாழறது ரொம்ப ரொம்ப கஷ்டம்” என்ற வரிகளோடு படம் ஆரம்பித்து அதே வார்த்தைகளோடு முடிகிறது.
படத்தின் நாயகன் கௌதம்கார்த்திக் அப்படி என்ன கஷ்டப்பட்டார்? என்பதை காட்சிகளோடு விவரிக்கிறார் இயக்குனர்
பர்மாவிலிருந்து அகதியாக சென்னை, சௌகார்பேட்டைக்கு பிழைக்க வருகிறார் கௌதம் கார்த்திக். வந்த இடத்தில் சிறுவயதிலேயே தந்தையை இழக்கிறார்.
வளர்ந்த பெரிய பையன் ஆன பின், பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடையை வைத்திருக்கும் சித்திக்கிடம் வேலையிலும் சேர்கிறார்.
தனது சுறுசுறுப்பினாலும், ஒரு முறை சித்திக்கின் உயிரை காப்பாற்றியதாலும் சில நாட்களிலேயே சித்திக்கிடம் நல்ல பெயரை பெறுகிறார்.
ஒரு சூழ்நிலையில் தன் கடனை அடைக்க, தங்க கட்டிகளை கடத்தும் பொறுப்பை கௌதமிடம் ஒப்படைக்கிறார் சித்திக்.
கௌதமும் பர்மாவிலுள்ள ரங்கூனில் கொண்டு சேர்த்து அதற்கு பதிலாக அங்கிருந்து தரப்படும் 6 கோடி ரூபாயை கொண்டு வருகிறார். வரும் வழியில், இவருக்கே தெரியாமல் யாரோ? அடித்து சென்று விடுகின்றனர்.
இதனால் ஓரிரு தினங்களில் ரூ. 6 கோடி கடனை அடைக்க தள்ளப்படுகிறார்.
என்னதான் உண்மையாக உழைத்தாலும் ஓரிரு தினங்களில் ரூ. 6 கோடியை சேர்க்க முடியாது. எனவே புது ரூட்டை தேர்ந்தெடுக்கிறார்.
இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளே இந்த ரங்கூன்.
கேரக்டர்கள்…
கடல், வை ராஜா வை என படங்களில் தோன்றினாலும் இப்படத்தின் மூலம் நம் மனதில் நிற்கும்படி செய்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.
ரங்கூன் வாழ்க்கையாகட்டும், சென்னை சௌகார் பேட்டை வாழ்க்கையாகட்டும் தன்னை கேரக்டரில் பிட் செய்திருக்கிறார் கௌதம்.
காதலியுடன் கெமிஸ்ட்ரி அவ்வளவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் அந்த லிப்லாக் சீன் ஒன்று போதும்.
நாயகி சனாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம். கொஞ்சம் நேரம் வந்தாலும், அடிக்கடி கிப்ட் என்ற பெயரில் கிஸ் அடித்து இளைஞர்களை சூடேற்றுகிறார்.
நல்லவராக தோன்றி, சைலண்ட் வில்லன் சித்திக் அசத்தல். இவர் மலையாள நடிகர் என்பதால் படத்தில் மலையாளியாக காட்டியிருக்கலாம். மலையாளம் கலந்த தமிழுடன் பேசியது ஏனோ…?
கௌதமுடன் டிப்டாப் என்ற டேனியல், அத்தோ குமார் என்ற லள்ளு ஆகியோரின் கேரக்டர்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும்.
வெறும் காமெடியை மட்டுமே செய்த டேனியல் இதில் வில்லத்தனமும் காட்டியிருப்பது சிறப்பு.
பிள்ளையராக வரும் போலீஸ், நண்பனை காப்பாற்றுவதும், கடைசியில் நண்பனின் விதவை தங்கைக்கு வாழ்க்கை கொடுப்பது என ரசிக்க வைக்கிறார்.
இவர்களுடன் கௌதம் அம்மா, அப்பா, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் சிறப்பான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
அனீஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் சௌகார்பேட்டை வாழ்க்கை முறை ரசிக்கும் ரகம்.
அதிலும் பர்மாவில் உள்ள ரங்கூன் பகுதியை 20 வருடங்களுக்கு முன்பும் தற்போதும் காட்டியிருப்பது மிகச் சிறப்பு.
அன்பு அறிவு ஆகியோரின் சண்டை பயிற்சியில் அந்த மணலில் அடித்துக் கொள்ளும் சண்டைக் காட்சி யதார்த்தம் கலந்து அருமையான சண்டை.
தொட்டில் மடியில் பாடல் இதம். பாடல்களை விட பின்னணி இசை கூடுதல் பலம்.
இயக்கம் பற்றிய அலசல்…
தங்க கட்டிகள் கடத்துவது என எம்ஜிஆர், ரஜினி காலத்து கதை பார்முலாவை முதல் பாதியில் எடுத்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வேறு ஒரு ட்விஸ்ட்டை கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.
படத்தின் வசனங்கள் கூடுதல் பலத்தை கொடுக்கிறது.
“ஒரு அகதியா ஆரம்பிச்ச என் வாழ்க்கையில என்னை சேர்ந்தவங்களே எனக்கு செய்தது தான் பெரும் துரோகம்” என்பது ஆகட்டும்,
இங்கு யாருமே நல்லவங்க, கெட்டவங்கன்னு கிடையாது.
எல்லாருமே இங்க, அதிர்ஷ்டத்தை நம்பி தான் வாழுறாங்க…” என்பது ஆகட்டும்
“பலம்ங்கறது இருக்கப் பட்டவன் இல்லாதவனை கீழே மிதிச்சு தள்றதுல மட்டுமில்ல அதையும் தாண்டி கீழ இருக்குறவன் மேல வர்றாம் தெரியுமா அதுலதான் இருக்கு பலம்” ஆகிய வசனங்கள் கைத்தட்டலை அள்ளும்.
நண்பன் திடீரென வில்லன் ஆவதில் அழுத்தமான காரணம் இல்லை.
ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ‘ரங்கூன்’ நிச்சயம் ரசிக்கலாம்.
ரங்கூன்… பயமில்லாமல் பயணிக்கலாம்