தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கௌதம் கார்த்திக், சோனாரிக்கா, அர்ஷிதா, சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே, எம்எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : கலாபிரபு
இசை : கேபி
ஒளிப்பதிவு: ராசாமதி
எடிட்டிங்: விடி. விஜயன் கணேஷ்பாபு
பி.ஆர்.ஓ. : டைமண்ட்பாபு
தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு
கதைக்களம்…
தமிழ் சினிமாவில் அட்வென்ஜர்ஸ் கதைகளை காண்பது அரிது.
ஹாலிவுட் சினிமாவில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் கதைகள் உள்ளன. அந்த வகையான கதைதான் இது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து விழும் ஒரு கல் பூமியில் விழுந்து வெடித்து சிதறுகிறது.
அந்த அரிய வகை கல்லால் வறண்ட நிலம் என்றால் கூட செழிப்பாகிறது.
மேலும் அந்த கல்லுக்கு உரிய அற்புத சக்தி என்னவென்றால், அந்த கல்லை பயன்படுத்தினால் நோய் நோடியில்லாமல் 400 வருடங்கள் கூட மனிதனால் வாழமுடியுமாம்.
சித்தர்கள் அந்த கல்லை எங்கோ புதைத்து வைக்க, நாளடைவில் அந்த குறிப்பு மறைந்து போகிறது.
அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் கௌதம், அவரது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அந்த கல்லைத் தேடி அலைக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார்.
இறுதியில் அந்த அற்புத கல்லை யார் அடைந்தனர்? அந்த கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லும்.
சாக்லேட் பாய் போன்று இருக்கும் கவுதம் இதில் ஆக்சன் செய்துள்ளார். ஆனாலும் அவரது முக பாவனைகளும் லிப்ஸிட்டிக் போட்ட உதடுகளும் ஆக்சனை பிரதிபலிக்கவில்லை.
இவருக்கு சோனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஜோடிகள். இருந்தும் படத்தில் ரொமான்ஸ் இல்லை.
சோனாரிகா படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், அஷ்ரிதா இரண்டாம் பாதியிலும் வருகின்றனர்.
இவர்களுடன் சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே ஆகியோரும் உண்டு. ஆனால் இவர்களுக்கான கேரக்டர்களில் வலுவில்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மலையும் அருவிகளும் சார்ந்த காட்சிகளை பார்த்தால், வாழ்வில் ஒருமுறையாவது அங்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.
கே.பி. இசையில் பாடல்களை விட பின்னணி இசை பேசப்படும்.
இயக்கம் பற்றிய அலசல்…
ஆக்சன் அட்வென்சர் கதைகள் இளைஞர்களுக்கு பிடிக்கும். ஆனால் இதில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் எம்ஸ் பாஸ்கர், நாய்குட்டி என காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் கலாபிரபு.
புதையல் தேடும் கதையை பேன்டஸி கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
சென்னையில் இருந்து வடநாட்டுக்கு செல்லும்போது வெறுமனே டிரெய்னை காட்டாமல் அதில் கிராபிக்ஸ் கலந்து ரூட்டு போட்டிருப்பது சூப்பர்.
இண்டர்வெல் ப்ளாக்கில் ப்ளைட் வெடித்து அதிலிருந்து வரும் எழுத்துக்கள் நல்ல கற்பனை.
மலை, அருவி, காடு என அனைத்தையும் கடந்து கஷ்டப்பட்டு குகை உள்ளே செல்லும் கவுதம் வெளியே வரும்போதும் படு ப்ரெஸ்ஸாகவே இருக்கிறார். (ரங்கூன் படத்தில் வந்த கவுதம் போல மேக்அப் போட்டு இருக்கலாமே)
இவ்வளவு இருந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பும், ட்விஸ்டுகளும் வைத்திருந்தால் இந்திரஜித் இன்னும் ஈர்த்திருப்பான்.
இந்திரஜித்.. குழந்தைகளை ஈர்ப்பான்