இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சாரா, யாசிகா ஆனந்த், கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா மற்றும் பலர்
இயக்கம் : சந்தோஷ் பி ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: பல்லு
எடிட்டிங்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு: ப்ளு கோஸ்ட்

கதைக்களம்…

கௌதம் கார்த்திக், அவருடைய நண்பர் ஷாரா, நாயகி வைபவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர்.

அந்த பங்களாவில் 25 வருடங்களுக்கு முன் செக்ஸ் உறவை அனுபவிக்காமல் இறந்த ஆன்மா.. அதாவது பேய் ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கெளதமையும், அவருடைய நண்பரையும் பயமுறுத்தும் அந்த பெண் பேய், இருவரில் யாராவது ஒருவர் தன்னுடன் உறவு கொண்டால் இருவரையும் விட்டுவிடுவதாக சொல்கிறது.

இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது.

பேய்யுடன் எப்படி செக்ஸ் என்பதால் ஆண்கள் தயங்குகின்றனர்.

இதனிடையே பேயை விரட்டும் சாமியார்களாக மொட்டை ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் பங்களாவிற்குள் நுழைகின்றனர்.

அவர்களும் அந்த செக்ஸ் பேயிடம் மாட்டி கொள்கிறார்கள்.

பேயிடம் செக்ஸ் வைச்சது யார்? என்பதுதான் மீதிக்கதை.

DcPvoyBU8AEmJUs

 

கேரக்டர்கள்..

கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஷாராஜா இருவரும் பக்கா ப்ளானில் வந்திருப்பார்கள் போல.

டபுள் மீனிங் இல்லாமல் எல்லாமே ஓபனாகவே பேசிவிட்டார்கள்.

ஒரு மாசம் போடல ஓட்டை மூடிகிட்டு என்று ஒரு பெண் சொல்வாள்.

அவன் அவன் 25 வருசமா போடமாக இருக்கான். இவ ஒரு மாசம் போடல மூடிக்கிட்டு சொல்ற.

கடைசியா எவன் போட்டோன்னோ? எப்படி போட்டோனா? என்ற உச்சகட்ட வசனங்களை பேசிவிடுகிறார் ஷாரா.

அதேபோல் நாயகிகள் வைபவி மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் செக்ஸ் வசனங்களும் உண்டு.

படம் முழுக்க அரை கால் உடையில் வந்து இளைஞர்களை ஒருவழியாக்கி விடுவார்கள்.

பேயாக நடித்திருப்பவரும் கிளாமரில் தோன்றி செம காட்டு காட்டுகிறார்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோரும் உண்டு.

இந்த செக்ஸ் கதையில் கொஞ்சம் கருணாகரன் மாறுபட்டு நிற்கிறார். அது வேறமாதிரியான செக்ஸ் காமெடியாம்.

DcQeFRbVQAA87CX

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலுவின் ஒளிப்பதிவு மற்றும் பிரச்சன்னாவின் எடிட்டிங் ஓகே.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் படத்திற்கு ஏற்ற போல் உள்ளது.

மெசேஜ் எல்லாம் சொல்ல முடியாது. இப்படிதான் படம் எடுப்பேன் என சந்தோஷ் ஜெயகுமார் கூறிவிட்டார்.

18+ இளைஞர்கள் மட்டும் படத்திற்கு வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டார்.

க்ளைமாக்ஸில் இப்படியொரு உச்ச கட்ட ஆபாசத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.

அதற்கு மேல் என்ன சொல்வது. செக்ஸ் காமெடி பிடிச்சா படத்தை பாருங்க. இல்லேன்னா வேண்டாம்.

முக்கியமாக தயவுசெஞ்சு குடும்பத்தோட போய்டாதீங்க மக்களே….

இருட்டு அறையில் முரட்டு குத்து… ஆபாச அறையில் அதிரடி குத்து

தியா விமர்சனம்

தியா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நாக சௌரியா, சாய் பல்லவி, பேபி வெரோனிகா, சந்தான பாரதி, நிழல்கள் ரவி, ரேகா மற்றும் பலர்
இயக்கம் : விஜய்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: லைகா நிறுவனம்

கதைக்களம்…

பருவ வயதை அடைந்து காதலிக்கும் நாயகி சாய் பல்லவியும் (துளசி) நாக சௌரியாவும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்.

இதன்காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகிறார்.

கர்ப்பம் ஆனது மெடிக்கல் படிப்புக்கு தடையாக இருக்கும் என்பதால் படிப்பை முடித்துவிட்டு கல்யாணம் செய்துக் கொள்ளலாம். தற்போது இந்த குழந்தை வேண்டாம் என பெரியவர்கள் பேசி முடிவு எடுத்து விடுகின்றனர்.

அதற்கு நாயகனும் சம்மதிக்கிறார். நாயகியின் சம்மதம் இல்லாமல் கருவையும் கலைத்து விடுகின்றனர்.

படிப்பு முடிந்ததும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது.

தன் கரு இப்போது எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு வருடமும் குழந்தையின் படத்தை வரைந்து வருகிறார் சாய் பல்லவி.

கலைந்த கரு 5 ஆண்டுகளுக்கு பிறகு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்க வருகிறது.

கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாக சௌரியாவையும் பழி வாங்க முயற்சி செய்கிறது.

அதை சாய் பல்லவி எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மலர் டீச்சராக கலக்கிய சாய் பல்லவி இதில் துளசியாக மணக்கிறார். தாயாகவும் சரி மனைவியாகவும் சரி நடிப்பில் ஓகே.

முகத்தை எப்போதுமே சோகமாக வைத்திருக்கிறார். அதுபோல் இவரது குழந்தையும்.

தியாவாக நடித்துள்ள வெரோனிகா அழகு செல்லம். ஆனால் பேச்சு குறைவு செயல் அதிகம்.

அதிக சத்தமில்லாமல் பேய் ஓய் என்று கத்தாமல் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதம் ரசிக்க வைக்கிறது.
நாக சௌரியா கேரக்டரில் அவ்வளவு அழுத்தமில்லை.

இவர்களைத் தவிர நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

கேமரா மேன் நீரவ்ஷா படத்தின் பலம். தேவையான லைட்டிங்கை நீட்டாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்து விடுகிறார்.

விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம் சிஎஸ் பாடல்களை ரசிக்கும் படி கொடுத்து வருகிறார். அதை இதிலும் மெய்ண்டென்ட் செய்துள்ளார்.

டைட்டில் சாங் மற்றும் பேய் தீம் மியூசிக் கலக்கல்.

இயக்கம் பற்றிய அலசல்…

அந்த தியா குழந்தை தன் மரணத்திற்கு காரணமான எல்லாரையும் பழி வாங்குகிறது. ஆனால் தன் அம்மா சாய்பல்லவியை (துளசி) மட்டும் பழி வாங்கவில்லை.

திருமணத்திற்கு முன் அவரது அம்மா சாய் பல்லவியும்தானே தவறு செய்திருக்கிறார். அவரை ஏன் கொல்லவில்லை டைரக்டர் சார்.?

படத்தின் இறுதியில் கருவிலே கலைக்கப்படும் குழந்தைகளில், இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ போன்ற சாதனையாளர்கள் உருவாகலாம் என்கிறார் டைரக்டர். அது இருக்கட்டும். அதற்காக திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகலாமா..?

முறையற்ற உறவால் உருவாகும் கரு சில நேரங்களில் கலைக்கப்படுவது கூட சரியே. காரணம் தவறான முறையில் பிறந்து, குப்பைத் தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசப்படும் எத்தனையோ குழந்தைகளை பார்க்கிறோம்.

அந்த குழந்தை அம்மா அம்மா என்று மட்டுமே அடிக்கடி சொல்கிறார். வருகிறாள். உட்காருகிறாள். பழி வாங்குகிறாள். இதுவே அடிக்கடி வருவதால் அதுவே ஒருவிதமான சலிப்பை தட்டுகிறது.

தியா… திடமான கரு திசைமாறிய உறவு

முந்தல் விமர்சனம்

முந்தல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ வியாபாரம் தொடர்பான கதைதான் இந்த படம்.

இன்று மருத்துவ விஞ்ஞானத்துக்கே சவாலாக இருக்கும் நோய் புற்றுநோய். அதைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார் மருத்துவ அறிவியல் அறிஞர் நிழல்கள் ரவி.

ஆராய்ச்சிகள் தொடர்கிற நிலையில் மருந்து கண்டறிகிற நம்பிக்கை வருகிறது. அந்த தைரியத்தில் அந்த மருந்தை வைத்து உலகளாவிய வியாபாரம் செய்ய ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம் மருந்து புற்று நோயைக் குணமாக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைகிறார் நிழல்கள் ரவி.

அப்போது புற்று நோய்க்கு ஒரு சித்த மருத்துவர் மருந்து கண்டு பிடித்துள்ளார் என்கிற தகவல் கிடைக்கிறது. அவரைப் போய்ப் பார்த்து வியாபாரம் பேசுகிறார்கள் . அவர் இணங்க மறுக்கவே அவரைக் கொலை செய்து விடுகிறார்கள் .

உண்மையில் புற்றுநோய் ஆராய்ச்சியில் மருந்துக்கான சூத்திரங்கள் ரகசியங்கள் ஓலைச்சுவடியில் இருப்பதாகவும் அதன் செய்முறை ரகசியங்கள் கம்போடியாவில் உள்ளதாகவும் நிழல்கள் ரவி அறிகிறார்.

இங்கு ராமேஸ்வரத்திலுள்ள ஓலைச்சுவடியைக் கைப்பற்றவும் கம்போடியாவில் உள்ளவற்றை எடுக்கவும் தன் ஆட்களை அனுப்பி வைக்கிறார்.

இதையறிந்த சித்த மருத்துவரின் பேரனான நாயகன் அப்பு கிருஷ்ணா வில்லன் கோஷ்டியிலிருந்து புற்றுநோய் மருந்துக்கான ரகசியங்கள் அடங்கிய சுவடிகளைக் கம்போடியா வரை சென்று எப்படி மீட்கிறார் என்பதே ‘முந்தல்’ படத்தின் கதையின் பயணம் .

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கியுள்ளார். ஹார்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் சார்பில் கே.பாலகுமாரன் தயாரித்துள்ளார்.

அறிமுக நடிகர் அப்பு கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். ரக்ஷா, ரிஷா என நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

மேலும் வி.எஸ்.ராகவன் , நான் கடவுள் ராஜேந்திரன், மகாநதி சங்கர், அழகு, போண்டா மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

நிழல்கள் ரவியின் மருந்து திட்டம் தோல்வியடைந்து ஓலைச்சுவடியைக் கைப்பற்ற நடக்கும் போட்டியில் தொடங்கும் கதை கம்போடியா செல்லும் வரை வேகமெடுக்கிறது. யார் முதலில் எடுப்பது ?யார் யாரை முந்துவது ? என்பதே முந்தல் கதை.

நாயகன் அப்பு கிருஷ்ணா மென்மையாகத்தான் பேசுகிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறார் சத்தமில்லாமல் பல சாகசங்களை செய்ததோடு, தனது உயிரைப் பணயம் வைத்து பல ஆபத்தான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவராக வரும் நாயகி ரக்ஷா பார்க்க அழகாக இருக்கிறார் அளவாகவும் நடித்துள்ளார்.

நான் கடவுள் ராஜேந்திரன் வில்லத்தனத்துடன் காமெடியும் செய்கிறார். படத்தில் கடலில் அதிவேகப் படகுப் பயணம் கண்களுக்கு விருந்து.

அந்தமான், கம்போடியா சார்ந்த காட்சிகள் பார்ப்பவர்கள் மனதில் பதிகின்றன

இந்தப்படத்தில் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஒரு கதாபாத்திரம் போல முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

எதற்கு எடுத்தாலும் பணம்..பணம்…என்று இல்லாமல், பிறருக்கு உதவி செய்யும் நோக்கத்தையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு சொல்லியிருக்கும் படம் ‘முந்தல்’.

Mundhal movie review

மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன், சனத் ரெட்டி மற்றும் பலர்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: திரு
எடிட்டிங்: விவேக் ஹர்சன்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பென் மூவீஸ்

கதைக்களம்…

இந்த படத்தில் வசனங்களே இல்லை என்பதுதான் செம ஹைலைட். இப்படியொரு கதைக்களத்தை தேர்ந்தெடுப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். எனவே படக்குழுவிற்கு முதலிலேயே பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

படத்தின் நாயகன் பிரபுதேவா கண் பார்வையற்ற ஒரு கிடார் கலைஞர்.

திகில் படங்கள் என்றாலே காடு இல்லாமல் இருக்குமா..? அந்த மலைக்காட்டில் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார் பிரபுதேவா.

ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு என்ன ஆனதோ? என்று தெரியாமல் வாழ்கிறார் ரம்யா.

மற்றொரு புறம் மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா, தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் ஆகிய 4 ப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்.

இவர்கள் நால்வரும் ஒரு தனி வீட்டில் வாழ்கிறார்கள்.

இவர்கள் ஒரு நாள் வெளியே செல்லும்போது வழியே ஒரு சடலம் கிடக்கிறது. எனவே அந்த பிணத்தை புதைக்கிறார்கள்.

பின்னர் அதே இடத்திற்கு வேறு ஒரு பொருளை தேடுவதற்கு போகும்போது சடலத்தை புதைத்த இடத்தில் காணாமல் தேடுகிறார்கள்.

இதனிடையில் இந்துஜாவையும் காணவில்லை. இவர்களை தேடி செல்லும் போது ஒரு அமானுஷ்யத்தை பார்க்கிறார்கள்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது? கொன்றது யார்? இந்துஜா என்ன ஆனார்? என்பதுவே மீதி கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையில் பிரபுதேவா. பார்வையாலேயே கதை சொல்கிறார். கண்கள் முதல் உடல் என அனைத்தையும் நடிக்க செய்திருக்கிறார்.

இவர் எப்படி கண்பார்வையை இழந்தார் என்பதற்கே ஒரு ப்ளாஷ்பேக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ரம்யாவுக்கு கேமியோ ரோல் மட்டுமே. கிடைத்த பணியை செய்திருக்கிறார்.

மேயாத மானில் அசத்திய இந்துஜா இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரெண்ட்ஸ் என்றால் பேசாமல் இருக்க முடியுமா? அப்படியிந்தும் நால்வரும் பேசாமல் இருந்து நடிப்பை பேச வைக்க முயற்சித்துள்ளனர். சபாஷ்.

இவருடன் தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்களின் நடிப்பும் கச்சிதம்.

இவர்களுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது என்பதும் படத்தின் கதைக்களத்திற்கு ப்ளஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் வசனங்கள் இல்லையென்றால் அந்த காட்சிக்கு பின்னணி இசையே உயிரூட்டும்.

அதை சிறப்பாக படம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டல்.

திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். சவுண்ட் டிசைன் மற்றும் கலை பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
கமல் நடித்த பேசும் படம் என்ற படத்திற்கு பிறகு டயலாக் இல்லாமல் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

க்ளைமாக்ஸ் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதல்பாதியில் வரும் சோர்வை தடுத்திருக்கலாம்.
முக்கியமான படத்தின் நீளத்தை குறைத்திருப்பது ரசிக்கும் ரகம்.

கார்ப்பரேட்டின் கம்பெனிகளின் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கிறார் டைரக்டர்.
கார்ப்பரேட்டு கம்பெனிகளால் பாதிக்கப்பட்டோருக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்துள்ளனர்.

மெர்க்குரி.. வித்தியாசமான முயற்சி

கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயப்ரதாவின் கணவர் கேரளாவில் உயர் பதவியில் உள்ளார். அவருக்கு தமிழ் நாட்டின் எல்லையில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ள கிணற்றில் வற்றாத அளவுக்கு எப்போதுமே தண்ணீர் இருக்கும்.

அந்த கிணற்றை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் இருமாநில சில அரசியல்வாதிகள், அவர் மீது ஒரு பழியை சுமத்தி சிறையில் அடைக்கின்றனர்.

சிறையில் மாரடைப்பால் அவர் இறந்துவிடுகிறார்.

எனவே அவருடைய கடைசி ஆசையின் படி அந்த கிராமத்து வருகிறார் ஜெயப்ரதா.

Keni-movie-stills-15

 

அப்போது அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவ நினைக்கிறார்.

இதற்கு ஊர் தலைவர் பார்த்திபன், அனுஹாசன், ரேவதி, நாசர் உள்ளிட்ட பலரும் உதவ வருகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகளால் இந்த பிரச்சினை கோர்ட் வரை செல்கிறது.

எனவே கோர்ட் வரை தனியாக சென்று போராடுகிறார் ஜெயப்ரதா.

இறுதியில் அவரின் ஆசை நிறைவேறியதா? இரு மாநில பிரச்சினைகள் என்னானது? ஊர் மக்கள் என்ன செய்தார்கள்? கோர்ட் தீர்ப்பு என்ன? என்பதே நீதி மன்றம் சொல்லும் மீதிக்கதை.

DWX4uT_U8AAXFJZ

 

கேரக்டர்கள்..

படம் முழுக்க ஜெயப்ரதா போராட்டம்தான். முகத்தில் வயது தெரிந்தாலும் நடிப்பில் இளமையில் பார்த்த அதே முதிர்ச்சி தெரிகிறது.

ஊர்த்தலைவர் பார்த்திபன் நக்கல் கலந்த பேச்சு ரசிக்க வைக்கிறது. இவர் சாம்ஸ், பிளாக் பாண்டி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

நாசர், ரேவதி, ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், அனுஹாசன், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

Keni-movie-stills-61

 

தொழில்நுட்ப கேரக்டர்கள்..

சாம் சி.எஸ் இசையில் எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடும் அய்யாச்சாமி பாடல் அருமை.

படத்தை முழுவதும் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரது கேமரா கண்களில் காட்சிகள் அனைத்தும் இயற்கையை வியக்க வைக்கிறது.

முதல்பாதியில் சொல்லப்பட்ட தீவிரவாதிகள் கதை, இரண்டாம் பாதியில் என்ன ஆனது? என்று காட்டவில்லை.

கோர்ட் தீர்ப்பில் இயக்குனர் நிஷாத் உயர்ந்து நிற்கிறார்.

அனுஹாசன் கிராமத்து பெண் போல பேச முயற்சித்தாலும் அவரின் முதிர்ச்சியான பேச்சு சிட்டி பெண் போல தோன்ற வைக்கிறது.

படத்தில் வரும் கேரக்டர்கள் ஜெயப்ரதாவுக்கு நிறைய பில்டப் கொடுகிறார்கள். ஆனால் இறுதியில் அந்த காட்சிகள் இல்லை என்பது வருத்தம்தான்.

தண்ணீர் அவசியத்தை இந்த தலைமுறை தெரிந்துக் கொள்ள நிச்சயம் படம் பார்க்கலாம்.

கவர்ச்சி, காதல், இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு என எதுவும் இல்லாமல் இருந்தாலும் தண்ணீருக்காக இந்த படத்தை பார்க்கலாம்.

கேணி.. தண்ணீருக்காக கண்ணீர் போராட்டம்

6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படத்தில் 6 கதைகள் இருந்தாலும் எல்லா படத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை பேய்தான்.

6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடுள்ளனர்.

முதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’

இதில் சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் ஒரு இளைஞன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தான் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கவுள்ள ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறான்.

எனவே ஒரு டாக்டரை பார்க்கிறார். அந்த சூப்பர் மேனை சோதிக்கும் டாக்டர் என்ன செய்தார்..? என்பதுதான் இந்த அத்தியாயம்.

DWotz9xVoAEuJ2z

 

இரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’

ஒரு இளைஞனை சின்ன வயது பெண் ஒருத்தி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் மற்றொரு பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்கிறாள்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான் என கூறுகிறாள்.

எனவே இருவரும் அவனை எப்படி பழிவாங்கினார்கள்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xVMAEDFqo

 

மூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’

தன்னுடைய ரூம் மேட்ஸ் தன் காதலியின் போட்டோவுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.

எனவே அந்த பையன் தன் நண்பர்களை என்ன செய்தான்? என்பதே இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9xU0AAmNEJ

 

நான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’

தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு வாலிபன்.

அப்போது மாமா அவசர வேளையாக வெளியே செல்ல, அந்த வாலிபன் தனியாக இருக்கிறார்.

அந்த வீட்டில் ஒரு பெண் பேய் இருப்பதாக உணர்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

ஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’

இந்த சூப் பாய் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய்.

அந்தப் பேய் யார்? ஏன் இப்படி செய்கிறது என தெரிந்துக் கொள்ள மந்திரவாதியிடம் செல்கிறான்.

அந்த மந்திரவாதி பேய் ஓட்ட என்ன செய்தார்? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

DWotz9vU8AAN1Jg

 

ஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’

ஓவியம் வரையும் ஒரு இளைஞனுக்கு, வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி ஆர்டர் வருகிறது.

அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது.

அதில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண்ணை மட்டும் அவரால் வரைய முடியவில்லை.

இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

கேரக்டர்கள் மற்றும் இயக்கம்…

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளனர்.

6 அத்தியாயங்களில் அனைவரையும் கவர்ந்த அத்தியாயம் என்றால் அது 5 மற்றும் 6 அத்தியாங்கள்தான்,

‘சூப் பாய் சுப்ரமணி’ கில்மா காமெடி என்றால் ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற ஆறாவது அத்தியாயம் திகிலை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் காட்டிவிட்டு, க்ளைமாக்ஸை மட்டும் கடைசியில் தனித்தனியாக காண்பிக்கிறார்கள்.

இது தமிழில் புதிய முயற்சி என்பதால் வரவேற்று பார்க்கலாம்.

6 அத்தியாயம் அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

More Articles
Follows