தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சாரா, யாசிகா ஆனந்த், கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா மற்றும் பலர்
இயக்கம் : சந்தோஷ் பி ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: பல்லு
எடிட்டிங்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு: ப்ளு கோஸ்ட்
கதைக்களம்…
கௌதம் கார்த்திக், அவருடைய நண்பர் ஷாரா, நாயகி வைபவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர்.
அந்த பங்களாவில் 25 வருடங்களுக்கு முன் செக்ஸ் உறவை அனுபவிக்காமல் இறந்த ஆன்மா.. அதாவது பேய் ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கெளதமையும், அவருடைய நண்பரையும் பயமுறுத்தும் அந்த பெண் பேய், இருவரில் யாராவது ஒருவர் தன்னுடன் உறவு கொண்டால் இருவரையும் விட்டுவிடுவதாக சொல்கிறது.
இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது.
பேய்யுடன் எப்படி செக்ஸ் என்பதால் ஆண்கள் தயங்குகின்றனர்.
இதனிடையே பேயை விரட்டும் சாமியார்களாக மொட்டை ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் பங்களாவிற்குள் நுழைகின்றனர்.
அவர்களும் அந்த செக்ஸ் பேயிடம் மாட்டி கொள்கிறார்கள்.
பேயிடம் செக்ஸ் வைச்சது யார்? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஷாராஜா இருவரும் பக்கா ப்ளானில் வந்திருப்பார்கள் போல.
டபுள் மீனிங் இல்லாமல் எல்லாமே ஓபனாகவே பேசிவிட்டார்கள்.
ஒரு மாசம் போடல ஓட்டை மூடிகிட்டு என்று ஒரு பெண் சொல்வாள்.
அவன் அவன் 25 வருசமா போடமாக இருக்கான். இவ ஒரு மாசம் போடல மூடிக்கிட்டு சொல்ற.
கடைசியா எவன் போட்டோன்னோ? எப்படி போட்டோனா? என்ற உச்சகட்ட வசனங்களை பேசிவிடுகிறார் ஷாரா.
அதேபோல் நாயகிகள் வைபவி மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் செக்ஸ் வசனங்களும் உண்டு.
படம் முழுக்க அரை கால் உடையில் வந்து இளைஞர்களை ஒருவழியாக்கி விடுவார்கள்.
பேயாக நடித்திருப்பவரும் கிளாமரில் தோன்றி செம காட்டு காட்டுகிறார்.
மேலும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோரும் உண்டு.
இந்த செக்ஸ் கதையில் கொஞ்சம் கருணாகரன் மாறுபட்டு நிற்கிறார். அது வேறமாதிரியான செக்ஸ் காமெடியாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாலுவின் ஒளிப்பதிவு மற்றும் பிரச்சன்னாவின் எடிட்டிங் ஓகே.
பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் படத்திற்கு ஏற்ற போல் உள்ளது.
மெசேஜ் எல்லாம் சொல்ல முடியாது. இப்படிதான் படம் எடுப்பேன் என சந்தோஷ் ஜெயகுமார் கூறிவிட்டார்.
18+ இளைஞர்கள் மட்டும் படத்திற்கு வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டார்.
க்ளைமாக்ஸில் இப்படியொரு உச்ச கட்ட ஆபாசத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.
அதற்கு மேல் என்ன சொல்வது. செக்ஸ் காமெடி பிடிச்சா படத்தை பாருங்க. இல்லேன்னா வேண்டாம்.
முக்கியமாக தயவுசெஞ்சு குடும்பத்தோட போய்டாதீங்க மக்களே….
இருட்டு அறையில் முரட்டு குத்து… ஆபாச அறையில் அதிரடி குத்து