தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், ரவிமரியா, ஆர்கே.சுரேஷ், பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், நமோ நாராயணன் மற்றும் பலர்.
இயக்கம் : சந்தோஷ் பி. ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்கே.
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : எஸ். தங்கராஜ்
கதைக்களம்…
ஆங்ங்… அம்பி.. என் முனகல் சத்தத்தில் பேசும் சாமியாரின் பஜனை பேச்சுக்களுடன் படம் ஆரம்பிக்கிறது. அவரே எல்லா கேரக்டர்களுக்கும் அவரது ஸ்டைலில் இன்ட்ரோ கொடுக்கிறார்.
குடியரசு மக்கள் கட்சி பெயரில் ஒரு பேக் கிட்டதட்ட படத்தில் உள்ள 4 குழுவிடம் இருக்கிறது.
அதில் ஒவ்வொரு குழுவும் சில பொருட்களை கொண்டு செல்ல, அந்த பேக் கைமாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அரசியல்வாதியின் சதிவேலை திட்டம் அம்பலமாகிறது.
இதில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் ஆகியோர் ஒரு பக்கம். இதில் காதலர்களின் பொருள் மற்றும் ஜட்டிகள் இருக்கிறது.
ரவிமரியா, நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் அடுத்த குழு. இவர்களிடம் உள்ள பையில் பாம் இருக்கிறது.
பாலசரவணனிடம் உள்ள பையில் முழுக்க கள்ளநோட்டுக்கள் இருக்கிறது.
ஒரு குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது ஒரு கும்பல். அவர்களிடம் கொடுக்க ஒரு தம்பதி பையில் நல்ல ரூபாய் நோட்டுக்களை வைக்கின்றனர். இதை தேடி போலீஸ் ஆர்.கே.சுரேஷ் வருகிறார்.
இந்த நாலு குழுவும் ஒரு இடத்தில் கூடி அடிக்கும் கும்மாளமே இந்த படம்.
கேரக்டர்கள்…
இதுபோன்ற படங்களில் யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். இதில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார். ஜாலியாக வந்து செல்கிறார்.
நிக்கி கல்ராணி கவர்ச்சியாக வராவிட்டாலும் அவரது கடவுளே கடவுளே ரியாக்சன் படத்திற்கு ஈடு கொடுக்கிறது.
இவரிடம் காதலை ப்ரோபோஸ் செய்ய, சாவு வண்டியில் ஹீரோ வருவது செம.
பாலசரவணன் கள்ள நோட்டை மாற்றும் விதம் பல பேருக்கு ரூட்டாக அமைந்துவிடும்.
மொட்டை ராஜேந்திரன் காமெடியிலும் டபுள் மீனிங்கிலும் அனைவரையும் கவர்கிறார். அதுவும் இவரை கதவு லென்ஸ் வழியாக பார்க்கும் போது அசல் வேற்றுகிரக ஜந்து போல வருகிறார்.
இவரும் கருணாகரனும் விபச்சாரியிடம் சென்று மாட்டிக்கொள்ளும் சீனில் வரும் சிரிப்பு சத்தம் அடங்க வெகு நேரமாகும்.
இவர்கள் இல்லாமல் சதீஷ் அடிக்கும் காம நெடி ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.
மனோபாலா எதற்காக வருகிறார்? ஒரு பாடலுக்கு வர அவர் என்ன ஐட்டம் டான்சரா?
ரவிமரியா மற்றும் நமோ நாராயணன் ஆகியோரின் இலக்கிய ஜோக்குகள் ரசிக்க வைக்கிறது.
அதுபோல் ரவிமரியா காலுக்கு இடையில் பாம்பு, நமோ நாராயணன் காலுக்கு அடியில் பீர்பாட்டில் என செக்ஸ் காமெடியில் உச்சம் தொட்டுவிட்டார்கள்.
இந்த சிரிப்பு படத்தில் சீரியஸ் ரோல் செய்ய முயற்சித்துள்ளார் போலீஸ் ஆர்.கே.சுரேஷ்.
ஜட்டி இல்லாமல் பார்ப்பது, அதை பாம்பு என்பது, பின்னர் பாம்பு எப்படி? என்பதை எல்லாம் வசனங்களாக பேசி கைத்தட்டலகளை அள்ளுகின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – செல்வகுமார் ஆகியோர் படத்திற்கு எது தேவையோ? அதை சரியாக செய்துள்ளனர்.
வயசுக்கு வந்தவங்க மட்டும் என் படத்துக்கு வாங்க என சொல்லிவிட்டார். எனவே அவர்களுக்காக காமம் கலந்து காமெடி கலந்து புல் மீல்ஸ் கொடுத்துள்ளார்.
கை குலுக்கி போங்க, அதானே பார்த்தேன் உங்களுக்கு இவ்வளவு பெருசா இருக்காதே?, உள்ள போடலாம் வந்தா? வெளியே போக சொல்லிறியே என நிமிடங்களுக்கு நிமிடம் டபுள் மீனிங் வந்து போகிறது.
நாம லஞ்சம் கொடுத்தா அது நல்ல பணமா? கள்ள பணமா? என பார்க்காம வாங்குறவங்க ஒரே ஆளு போலீஸ்தான் என்பது போன்ற சமூக கருத்துக்களும் இப்படத்தில் உள்ளது.
பாம்பு, பாம், பை இதுபோன்ற விஷயங்களை எத்தனையோ படங்களில் பார்த்துவிட்டோம். அதையாவது மாற்றியிருக்கலாம் டைரக்டர் சார்.
இந்த மாதிரியான படம்ன்னா நான் ஜாலியா பார்ப்பேன் என்பவரா நீங்களா? அப்படின்னா இந்த பஜனைக்கு டிக்கெட்ட போடுங்க.
ஹரஹர மகாதேவகி… பஜனை பரவசம்